"காகித ஓடம்..கடலலை மீது.."
'பைலட் பாதுஷா' லைப் டைம் அசீவ்மென்ட் அவார்ட் உங்களுக்கு தர்றோம். புத்தக கண்காட்சிக்கு மாக்குனு தவ்வி ஓடி வாங்க என்று ஒரு அழைப்பு வந்தது. "எனக்கு அவார்டா? செய்யாத தப்புக்கு புழலில் குழாப்புட்டா?" என்று வெளியே சீன் போட்டாலும் அதை வாங்காமலா போயிடுவேன். ஹி..ஹி..! பைக்கில் பறக்க ஆயத்தமானேன். ஆனால் அது செல்ப் எடுக்கவில்லை. அந்நேரம் பார்த்து அஜயும், குஜயும் வேது(யானை) மீதமர்ந்து டபுள்ஸ் போய்க்கொண்டு இருந்தனர்.'நானும் வர்றேன்' என்றதற்கு 'இடமில்லை. இது மாநகர ப்ரின்சோட டிரைவரின் யானை. வேண்டுமெனில் அதன் வாலைப்பிடித்து தொங்கியவாறு வா' என்றனர். டபுள் ஓக்கே என்றேன். வால் பிடித்து தொங்கியவாறு செல்லும் சிரமம் எவ்வளவு கடுமை கொடுமையானது என்று அன்று உணர்ந்தேன். 14 ஹவர்ஸ் 59 செகண்டில் ஸ்பாட்டை அடைந்தேன்.
'பிடிவாதுடுலு' பிரின்ஸ்
வாசலில் ஒரு பீட்டர் நான் தொங்குவதை பார்த்து 'Hey..you are so ridiculous dude' என்று ஏளனம் செய்தான். முதல் அப்பு. என்ன சொல்கிறான் என்று புரியாவிட்டாலும் 'போடா சத்யம் த்யேட்டர்ல ஓசி டிக்கட் வாங்கி தராத பரதேசிப்பயலே' என பீட்டரை ரிவிட் அடித்தேன். அவன் பேசியதன் அர்த்தத்தை அறிந்து கொள்ள உள்ளே ரெபிடெக்ஸ் டிக்சனரி வாங்கவும் உறுதி பூண்டேன். சென்ற வழி நெடுகிலும் 'அடிவருடிகளும், சில அவதானிப்புகளும்' எனும் குறு நாவலின் பேனர்களை குறு குறுவென பார்த்தவாறு பயணித்தேன்.
ஒளிவட்டத்தை சுற்றி பாதுஷா வட்டமிடல்
ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த இடத்தில் எனது பைஜாமா மட்டும் தனித்து தெரிந்ததை கண்டு கொண்ட பிரின்ஸ் ஓடோடி வந்தார். வந்த வேகத்தில் ஆளுங்கட்சி அடிவருடி கால் சுண்டுவிரலை பிரின்ஸ் நசுக்கிவிட 'ஏம்பா. பாத்து போ' என்றார் அந்த அடி(பட்ட)வருடி. "யோவ்..நீ செஞ்ச காமடி மொக்கை. சிரிப்பு வரல. எனக்கு கோவம் வரல" என சம்மந்தம் இல்லாமல் பேச, டென்சன் ஆன வருடி உச்சிமண்டையில் நங்கென கொட்டிவிட்டார். ப்ரின்சுக்கு முதல் ஆப்பு.
'நேசனல் ஜ்யாக்ராபிக்' கடையில் பிரின்ஸின் புத்தகம் எப்படி போகிறது என்று மறைந்திருந்து மர்மமாக பார்த்தோம். 'இதை வாங்கிக்கங்க. இன்னிக்கி மட்டும் ஆறே முக்கா காப்பி வித்துருக்கு. போனா வராது. பொழுது போனா கிடைக்காது' என்று நாங்கள் சொல்லித்தந்தவாறு வியாபாரம் செய்தார் ஓனர்.
''அட நீங்க பாதுஷாதான?" என்று ஏற்கனவே செட் செய்த ஆள் அரங்கில் எங்களைப்பார்த்து அலறினார்.அப்பாட..என்ன ஒரு ஆனந்தம். இப்போதுதான் குளிர் காற்று முன்பை விட வேகமாக வீசியது. எல்லோரும் திரும்பி என்னையே பார்த்தனர். அமலாதித்த மாமல்ல மன்னன் உட்பட. யாருக்கும் தெரியாமல் சுச்சா போய்க்கொண்டு இருந்த சுட்டியும் அதை அப்படியே விட்டுவிட்டு என்னை நோக்கி வாயை பிளந்தான். ஜெய் போலேநாத்!
''அட உங்க கக்கத்துக்கு பக்கத்ல வெக்கப்பட்டு நிக்குறது பிரின்ஸ்தான?" என்று இன்னொரு குரல் உற்சாகத்தில் கத்தியது. 'என்னை உயர்த்தி பேசாதீங்க. நான் எப்பவுமே தாழ்ந்த வீதி ஆளாகவே இருக்கணும்னு ஆசைப்படறேன். அப்பதான் அவாளை வம்புக்கு இழுத்து அவுல் சாப்பிட முடியும். ப்ளாக்கில் கல்லா கட்ட முடியும்' என அளவாக பேசினார் பிரின்ஸ். 'அப்பறம் எதுக்கு அவள் ஒரு தொடர்கதை சுஜாதா ஸ்டில்லை வீட்டு வாசல்ல தொங்கவிட்டுருக்கீங்க?' என்று 'வா.சூ' வை மூடத்தெரியாத முட்டாள் பம்ப் அடித்தான். ப்ரின்சுக்கு அடுத்த ஆப்பு! விடுவாரா நம்ம ஆளு? "தம்பி. டேய். டெட்ட டேய். உடன்பிறவா தம்பி..மொக்கையா இருக்கு. பெட்டர் 'லக்' நெக்ஸ்ட் டைம்' என்றார். ப்ரின்ஸின் கண்கள் சிவந்து இருந்தாலும் கோபமே இல்லை. நோட் திஸ் பாய்ன்ட் டு பாய்ன்ட் யுவர் ஆனர்(டிக்சனரி வாங்கியதும் நான் பேசிய முதல் இங்கிலிபீசு. இதுவும் புரியலன்னா நீ காமடி பீசு. ஹெ..ஹே).
'கொன்னுட்ட மச்சி' என்று பிரின்ஸை நான் சீராட்டி மோரூட்டி தயிரூட்டிவயவாறு 'பின்பக்கம் உள்ள வரிசைக்கு'சென்று கொண்டு இருக்கையில் 'பால்பாய்ன்ட் மை'ஸ்டால் இருக்கையில் அமானுஷ்யபுத்திரன் அவர்கள் டைனோசர் பொம்மையுடன் விளையாடிக்கொண்டு இருந்ததைக்கண்டோம். 'பாதுஷா..Get Ready Folk. கேமராவை பாத்து போஸ் குடுத்தா பில்லக்கா பசங்கன்னு நினைப்பாங்க. நான் அவர்கிட்ட அவர் என்கிட்ட பேசுறாப்ல இருக்குற ஸ்டில்லை நச்சுனு எடு' என உயிரை வாங்கினார் பிரின்ஸ் . என்னிடமோ கேமரா இல்லை. நான் ஒரு பரம பர்மா ஏழை. படம் என்றாலே பைலட் தியேட்டர்தான் செல்வேன். 149 ஓவாய்க்கு மேல் புத்தகம் வாங்கவே என் பழைய தலைமுறை தாத்தாவிடம் ராக்கெட் வட்டிக்கு கடன் வாங்கும் குசேலன்(இப்படி அனுதாபம் தேடுவதில் அலாதின்னா அலாதி அப்படி ஒரு அலாதி).
எனவே அரங்கில் மாட்டி இருந்த CCTV கேமராவை புடுங்கினேன். அதை பார்த்துவிட்ட நபர் ஆவேசமாக என்னிடம் வந்து 'How Dare! டேய்..நீ என்ன பெரிய புடுங்கியா' என்றார். ''ஏண்டா..நீதான் சென்னை(புத்தக காண்காட்சி)க்கு அத்தாரிட்டியா?நான் புடுங்குனதை பாத்தும் புடுங்கியான்னு கேக்குறியே..இலக்கிய ஒலகம் வெளங்குமாடா வென்ரு" என அவனை குழப்பி அடிக்க ஆரம்பித்தேன்.அப்படியே அந்தரத்தில் தொங்கி அடித்தவாறே ரெபிடெக்சில் How Dare அர்த்தத்தை படித்து முடித்தேன். அப்படியே Get ready folk வார்த்தையின் அர்த்தத்தை அறிந்து கொள்ள சுஜாதாவின் 'என் இனிய எந்திரா' புத்தகத்தை 500 காப்பி வாங்கி மூட்டை கட்டினேன்.
"உன்னால நான் கெட்டேன். என்னால நீ கெட்ட"
இன்னுமொரு வேலை மிச்சம் இருந்தது. அரங்கில் ஒரு சிலர் மிச்சம் இருந்த 'பைலட் பாதுஷா' விருது வழங்கும் பழைய தலைமுறை மேடையை நோக்கியவாறு விறுவிறுவென நடந்தேன். இரண்டு பேர் மட்டுமே கூட்டத்தில் இருந்தாலும் பேஸ்மென்ட் ஆடியது. அவ்விருவரில் எவனாவது எசகு பிசகாக கேள்வி கேட்டுவிட்டால்? அதனால் முன்பே வாங்கி இருந்த சரக்கை அடித்து விட்டு சரக்கென விருதை வாங்கிய கையோடு ப்ரின்ஸின் யானை வாலை பிடித்து தொங்கியவாறு இருப்பிடத்தை நோக்கி பயணிக்கலானேன்.
************************************************
எனது பால்ய கால காணொளி. பார்த்து பரவச நிலையை அடையுங்கள்:
__________________
Posted By:
அடிவருடிஸ்! (Not Diapers)
_________________
59 comments:
ஹி ஹி ஹி ........ஹா ஹா ஹா ...............நான் நெனச்சேன் பயோடேட்டா பார்த்தவுடன் .இப்படி எதாவுது நடக்குன்னு தோணிச்சி .............வருடி வருடி புன்னாயிடிசிபா
ஒளிவட்டத்தை சுற்றி பாதுஷா வட்டமிடல் ................/////////////////////
நீ தீர்க்கதரசி தான்யா .
அடேய் நமீதாவே கலாய்க்காம என்னை கலாய்ய்ச்சா கிழிஞ்ச டயாப்பராலேயே அடிப்பேன்( ஒரு டன் ஸ்டாக் இருக்கு)
அப்புறம் எனக்கு கோவமே வரலேயே டம்மி பீசுகளா??
ஆனாலும் அடிவருடிகளே கூடிய சீக்கிரமே உங்க கொட்டத்தை அடக்கப்போறேன்
இதேல்லாம் ஒரு பதிவு??
என்கிட்ட வாங்க பதிவு எழுதுறது எப்புடின்னு சொல்லித்தாறேன்.
இப்படிக்கு,
”போன மாசம் பிஞ்ச போன் ஒயறு” எழுதிய அப்பாடக்கர்
இத்தோட நிறுத்திக்கனும், இல்லன்னா
டர்ட்டி ஸ்டோரிஸ்ல இருந்து உனக்கு காப்பி, பேஸ்ட் பன்னிருவேன்..
சபாஷ் சரியான போட்டி .
இருங்க நான் வெண்ணீறு குடிச்சிட்டு வரேன் ..........
அஞ்சா சிங்கம் அப்படீனா பெரிய பருப்பா???
சிங்கிள் சிங்கம் said...
அஞ்சா சிங்கம் அப்படீனா பெரிய பருப்பா???
///////////////////////
இல்லை ரொம்ப சின்ன பருப்புதான் ....
கிலோ 30 ரூபா தான் வேணுமா?
சூ....சண்டைய நிறுத்துங்கய்யா. உங்கள்ள எவனாவது வீரன் இருந்தா அண்ணன் எழுதுன இந்தப்பதிவை ஒன்றரை நிமிஷத்துல படிச்சி காட்டுங்கய்யா. அப்ப ஒத்துக்கறேன். ப்ளடி அடிவருடிஸ்!
http://www.luckylookonline.com/2012/01/blog-post_19.html
அண்ணே அண்ணே........ முடியலண்ணே.......
////அஞ்சா சிங்கம் said...
ஒளிவட்டத்தை சுற்றி பாதுஷா வட்டமிடல் ................/////////////////////
நீ தீர்க்கதரசி தான்யா ./////
என்னது தீஞ்ச அரிசியா.....?
goundamanifans said...சூ....சண்டைய நிறுத்துங்கய்யா. உங்கள்ள எவனாவது வீரன் இருந்தா அண்ணன் எழுதுன இந்தப்பதிவை ஒன்றரை நிமிஷத்துல படிச்சி காட்டுங்கய்யா. அப்ப ஒத்துக்கறேன். ப்ளடி அடிவருடிஸ்!
/////////////////////////////////
வாட்சை நிறுத்திவிட்டு நான் படித்து முடித்துவிட்டேன் .
நான் அடிவருடியாக தகுதி பெற்றுவிட்டேனா?
//////கெட்ட வார்த்தைக்காரன் said...
இத்தோட நிறுத்திக்கனும், இல்லன்னா
டர்ட்டி ஸ்டோரிஸ்ல இருந்து உனக்கு காப்பி, பேஸ்ட் பன்னிருவேன்..//////
சீக்கிரம் போடுங்கண்ணே, இங்க ஓப்பன் ஆக மாட்டேங்கிது......
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////அஞ்சா சிங்கம் said...
ஒளிவட்டத்தை சுற்றி பாதுஷா வட்டமிடல் ................/////////////////////
நீ தீர்க்கதரசி தான்யா ./////
என்னது தீஞ்ச அரிசியா.....?
////////////////////////////////////////
யாருயா அது கலவரம் நடக்குற இடத்துல வந்து கரும்பு விக்கிறது ?
//// அஞ்சா சிங்கம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////அஞ்சா சிங்கம் said...
ஒளிவட்டத்தை சுற்றி பாதுஷா வட்டமிடல் ................/////////////////////
நீ தீர்க்கதரசி தான்யா ./////
என்னது தீஞ்ச அரிசியா.....?
////////////////////////////////////////
யாருயா அது கலவரம் நடக்குற இடத்துல வந்து கரும்பு விக்கிறது ?///////
நாங்கல்லாம் கலவர பூமில அருவாளே வித்தவைங்க.....!
யோவ் பண்ணி என்னோட மேதை விமர்சனத்துல உங்க அட்டன்டன்ஸ் இன்னும் வரல
ராமராஜனுக்கும் உங்களுக்கும் என்ன பிரெச்சனை
//////அஞ்சா சிங்கம் said...
யோவ் பண்ணி என்னோட மேதை விமர்சனத்துல உங்க அட்டன்டன்ஸ் இன்னும் வரல
ராமராஜனுக்கும் உங்களுக்கும் என்ன பிரெச்சனை//////
அடங்கொன்னியா.... இது வேறயா.... இப்பவே கெளம்பிட்டேன்.....!
தம்பீகளா! நீங்கள்லாம் ஃபேமஸ் ஆவணும்னா வேற சில வேலைகள் செய்யணும். இந்த வேலையெல்லாம் வேலைக்கு ஆவாது :-)
Im in office... Nite varen...
ஜெய் ஆஞ்சநேயா...! காத்து கருப்பு புடிக்காம இருக்க.....நீதான்யா அருள் புரியனும்....ஜெய் கிருஷ்ணா...!ஓ..சாரி...ஜெய் ஆஞ்சநேயா!
எமது தளம் புதிதாக மெருகேற்றப்பட்டுள்ளது. வலது பக்கம் உச்சியில் பாருங்கங்கோ.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////கெட்ட வார்த்தைக்காரன் said...
இத்தோட நிறுத்திக்கனும், இல்லன்னா
டர்ட்டி ஸ்டோரிஸ்ல இருந்து உனக்கு காப்பி, பேஸ்ட் பன்னிருவேன்..//////
சீக்கிரம் போடுங்கண்ணே, இங்க ஓப்பன் ஆக மாட்டேங்கிது.....//
அம்மாதிரி போட்டு சுய இன்பம் அடைவது பிரின்சின் வேலை. காத்திருப்போம்..
பாருங்க மக்களே, நானே நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன், வேண்டா... வ்லிக்குது..அலுதுருவேன்.
//philosophy Prabhakaran said...
தம்பீகளா! நீங்கள்லாம் ஃபேமஸ் ஆவணும்னா வேற சில வேலைகள் செய்யணும். இந்த வேலையெல்லாம் வேலைக்கு ஆவாது :-)//
காமிக்ஸ் படிக்கணுமா? இல்ல சல்லிசான விலைல சுஜாதா புத்தகங்களை வாங்கி குவிச்சி அதே ஸ்டைல்ல கொஞ்சம் மாற்றம் செஞ்சி நாங்களும் ஒரு பொஸ்தகம் போடணுமா?
என்னப்பா என்ன செய்றீங்க? எங்க தல மேலயா கை வக்கிறீங்க, உங்களை சும்மா விடமாட்டொம்
//தீவட்டி தடியன் said...
என்னப்பா என்ன செய்றீங்க? எங்க தல மேலயா கை வக்கிறீங்க, உங்களை சும்மா விடமாட்டொம்//
சீக்கிரம் பொட்டிக்கடையில் போஸ்ட் கார்ட் வாங்கி பான் கீ மூனுக்கு கடிதம் எழுதப்போறீங்களா?
ஏப்பா..... நான் உள்ளே வரலாமா? ஏன் கேட்கறேன்னா...யாராவது போலி இலக்கியவாதிகள் இருந்தா அவங்க கொம்புல முட்டியே என்னை பதம்பார்த்திடுவாங்க...அதான் ஒரு முன்னெச்சரிக்கையா....
போதும் நிறுத்துங்கடா. உங்களை எல்லாம் அழிக்க ஒருத்தன் பிறப்பாண்டா..டேய்..டெட்ட டேய்!!
அடேய் அப்பரெண்டிசு பயலுகளா என்னடா சத்தம் இங்க? சண்டை போட்டாலும் 1.30 நிமிசத்துக்கு உள்ள போடனும் தெரியுமா? இல்லேன்னா எங்க தலைவர் சண்டைக்கு வரமாட்டார்.
தம்பீகளா! நீங்கள்லாம் ஃபேமஸ் ஆவணும்னா ஒசாமா ஒபாமான்னு யாராவது உலக பிரபலங்களை பற்றி எழுதுங்க....இந்த மாதிரி மொக்கைகளுக்கும், மொன்னைக்களுக்கும் ஏன் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்கிறீங்க///ஏப்பா நான் சரியா பேசறேனா?
////goundamanifans said...
//தீவட்டி தடியன் said...
என்னப்பா என்ன செய்றீங்க? எங்க தல மேலயா கை வக்கிறீங்க, உங்களை சும்மா விடமாட்டொம்//
சீக்கிரம் பொட்டிக்கடையில் போஸ்ட் கார்ட் வாங்கி பான் கீ மூனுக்கு கடிதம் எழுதப்போறீங்களா?/////
இல்ல பொன்னம்பலம்கிட்டே எல்லாரும் ஊர்வலமா போய் பிராது கொடுப்போம், நீங்களும் வரியளா?
This comment has been removed by the author.
அண்ணே எல்லாத்துக்கும் ஒன்றரை நிமிஷம் தானா?.... ஒரு டவுட்டு
///goundamanifans said...
போதும் நிறுத்துங்கடா. உங்களை எல்லாம் அழிக்க ஒருத்தன் பிறப்பாண்டா..டேய்..டெட்ட டேய்!!////
இனிமேயா பிறக்க போறான், ஏற்கனவே பிறந்துட்டான் தம்பி. போய் கண்டுபுடிச்சு கூட்டிட்டு வாங்க
//தீவட்டி தடியன் said...
அடேய் அப்பரெண்டிசு பயலுகளா என்னடா சத்தம் இங்க? சண்டை போட்டாலும் 1.30 நிமிசத்துக்கு உள்ள போடனும் தெரியுமா? இல்லேன்னா எங்க தலைவர் சண்டைக்கு வரமாட்டார்.//
இதுவரைக்கு அவர் சண்டைக்குதான் வந்தாரா..
உனக்காக எல்லாம் உனக்காக கவுண்டமணி
"சாப்பாட்ல கல்லு. என்கூட எவனாவது சண்டைக்கு வாங்கடா"
"அட போங்க. பொண்ணு வீட்டுக்காரங்க தமாசுன்னு கேள்விப்பட்டுருக்கேன். ஆனாலும் நீங்க ரொம்ப தமாசுங்க"
பேராண்டிகளா இங்க யாருக்கோ முடியலைன்னு சொல்லி அனுப்புனாங்களே, யாருக்குப்பா? கூட்டிட்டு வாங்க வைத்தியம் பார்த்து அனுப்புறேன்.
//goundamanifans said...
This comment has been removed by the author.//
This is to announce that Namadhu MGR editor is NOT AT ALL responsible for the deleted comment.
தம்பிகளா இன்னும் 1 மணிநேரம்தான் இந்த ஊர்ல இருப்பேன், அடுத்த ஊருக்கு போகனும்ல, சீக்கிரம் வந்து லேகியத்த வாங்கிட்டு போங்கப்பா..
டயப்பர் வாயனுங்க தொல்லை தாங்க முடியலேப்பா :-)
டயப்பர் தொண்டனை விட டயப்பர் வாயன் பிரமாதம் # இனி அப்படியே தங்களை அழைப்போம் என உறுதி கூறுகிறோம்.
///யுவ கிருஷ்ணா - said...
டயப்பர் வாயனுங்க தொல்லை தாங்க முடியலேப்பா :-)///
வாங்க தல சீக்கிரம் ஆரம்பிங்க, 1.30-க்குள்ள முடிச்சிட்டு கெளம்பனும்ல..
இப்படி நேரா வந்து மோதுங்க தோழர். பிம்பலிக்கி பிலாக்கி பசங்களை கூட்டு சேர்த்துக்கிட்டு அலையாதீங்க. பார்க்குறதுக்கு ரொம்ப அசிங்கமாயிருக்கு :-)
//யுவ கிருஷ்ணா said...
இப்படி நேரா வந்து மோதுங்க தோழர். பிம்பலிக்கி பிலாக்கி பசங்களை கூட்டு சேர்த்துக்கிட்டு அலையாதீங்க. பார்க்குறதுக்கு ரொம்ப அசிங்கமாயிருக்கு :-)//
அது பிம்பிளிக்கி பிளாப்பி தலை. முதல்ல ஒழுங்கா எழுதுங்க...இதுக்கே அசிங்கமா இருக்குன்னா.... உங்க தலைவர் மாமா பிஸ்கோத்து பசங்களை வச்சி ஓட்டுக்கு அலையறாரே..அதை விட இது ஒண்ணும் அசிங்கமில்லை.
உங்களை விட வயதான சில நண்பர்களை கூட பசங்க, தம்பி என்று அழைக்கும் சபை நாகரீகம் கொண்ட நீங்கள் வாழ்க!!
உங்களுடன் கூட்டு சேர ஒரே ஒரு பாதுஷா மட்டும் கிடைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல....மத்தவங்க எல்லாம் உஷார் ஆயிட்டாங்க போல..!! :((((
வணக்கம் நண்பர்களே!
அவர் உங்களை கலாய்த்தார், பதிலுக்கு நீங்களும் அவரை வெகுவாக கலாய்த்து விட்டதால் அவர் கோபமாக இருக்கிறார். எனவே இதனை இத்துடன் நிறுத்திவிடவும்.
அவரும் இனி உங்களை கலாய்க்க மாட்டார் என நம்பலாம்.
கே.ஆர்.பி.செந்தில் said...
வணக்கம் நண்பர்களே!
அவர் உங்களை கலாய்த்தார், பதிலுக்கு நீங்களும் அவரை வெகுவாக கலாய்த்து விட்டதால் அவர் கோபமாக இருக்கிறார். ////
ஆஹா...இது தப்பாச்சே...ஆளப்பிறந்தவன் இப்படி ஆத்திரப்படக்கூடாதே
கே.ஆர்.பி.செந்தில் said...
எனவே இதனை இத்துடன் நிறுத்திவிடவும்.
அவரும் இனி உங்களை கலாய்க்க மாட்டார் என நம்பலாம்.///
தலைவரே...இங்கு யாரும் உங்கள் தூண்டுதலின் பேரில் இயங்கவில்லை. அவரவர் சொந்த புத்தியில்தான் இயங்குகிறார்கள். நீங்கள் நிறுத்த சொன்னாலும் நிறுத்துவார்களா என்று தெரியவில்லை. பொதுவாக ஒருவர் சீனியர் பிளாக்கராக இருக்கலாம். ஆனால், அவர் பிளாக்கிற்குத்தான் சீனியரே தவிர, வயதில் சீனியர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களை அவ மரியாதை செய்வதுபோல் அடிவருடி, பிம்பிலிக்கி பிலாக்கி பசங்க,டயப்பர் வாயனுங்க என்றெல்லாம் அழைப்பதுதான் ஒரு சீனியருக்கு அழகா? இவர்களெல்லாம் என்ன சீனியரோ...என்ன எலவோ போங்க...இப்போது தி.மு.க.,வில் வெற்றிகொண்டான் இடத்தை நிரப்ப ஆளில்லையாம். இவரை அனுப்புங்க...
செம செம மொக்க.வாழ்த்துகள்
ப்ரின்சும், பாதுசாவும் இனி இலக்கியவாதின்னு சொல்லிக்கிற மாட்டாங்க. பாவம் விட்ருங்க
இந்த மாதம் எதிர்ப்பதிவுகள் மற்றும் சண்டைகள் மாதம். Let us play guys ....
அப்ப... அடுத்து.... "அழிச்சு முடிஞ்சவன்" புத்தக விமர்ச்சனமா???
ச்சே... நம்ம பங்குக்கு ஏதாவது செய்யலாம்ன்னு பார்த்தா பிதாமகன் முடிச்சு வச்சிட்டாரே...
// இப்படி நேரா வந்து மோதுங்க தோழர். பிம்பலிக்கி பிலாக்கி பசங்களை கூட்டு சேர்த்துக்கிட்டு அலையாதீங்க. பார்க்குறதுக்கு ரொம்ப அசிங்கமாயிருக்கு :-) //
பாவம்யா அந்த மனுஷன்... நாம பண்ற அழிச்சாட்டியத்துக்காக அவர் திட்டு வாங்குறாரு... இதுக்காகவாவது நாம நிறுத்தணும் சிவா...
"கே.ஆர்.பி. என்ன சென்னை பதிவர்களுக்கு அத்தாரிட்டியா? அவர் சொன்னா கேக்க. Fu*k Of*."
பாதுஷா பாசறை.
ஏ.வி. எம்மின் முரட்டுக்காளை வீதி,
பாலமேடு.
வெண்ணீறு குடிச்சிட்டு வெறியோடு வந்திருக்கேன் இப்படி பொசுக்குன்னு நிறுத்த சொன்னா எப்படி ?
வீ ஆர் டயாபர் பாயிஸ் ......இலக்கியம் வளர்க்க ஏதோ லேகியம் விக்கிறாங்களாம் அதை சாப்பிட்டா சைலன்சர் மாதிரி சலன்ட்டா இலக்கியம் வரும் பிரின்ஸ் அதை சாப்பிட்டிருப்பாரோ ............?
யாருப்பா அது கே.ஆர்.பி. நிறுத்துன்னா நிறுத்தனுமா?
அன்ன போஸ்ட்டுல ஜெயிச்சி தலைவர் ஆனவரா?
ஒனர்ணா ஓரமா போக சொல்லுங்க .................
எங்கள் அன்பு அண்ணன் கேஆர்பியை பற்றி தவறாக பேசுவதை கண்டிக்கிறோம்
கேஆர்பி இளைஞர் நற்பணிமன்றம்
காட்டாங்குளத்தூர் கிளை
சென்னை மாவட்டம்
///அஞ்சா சிங்கம் said...
வெண்ணீறு குடிச்சிட்டு வெறியோடு வந்திருக்கேன் இப்படி பொசுக்குன்னு நிறுத்த சொன்னா எப்படி ?
வீ ஆர் டயாபர் பாயிஸ் ......இலக்கியம் வளர்க்க ஏதோ லேகியம் விக்கிறாங்களாம் அதை சாப்பிட்டா சைலன்சர் மாதிரி சலன்ட்டா இலக்கியம் வரும் பிரின்ஸ் அதை சாப்பிட்டிருப்பாரோ ............?////
உலகத்துல உள்ள எல்லா லேகியமும் நாந்தான் விக்கிறேன், இது என்ன லேகியம், எனக்கு தெரியாம?
Post a Comment