Showing posts with label நையாண்டி பவன். Show all posts
Showing posts with label நையாண்டி பவன். Show all posts

Wednesday, May 18, 2011

நையாண்டி பவனில் பிரபல "பிராப்ள" பதிவர்கள்...!!!


(இந்தப்பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கற்பனை... சிரிங்க... சீரியஸா எடுத்துக்காதீங்க...)

நையாண்டி பவனில் ஒருநாள்...

கவுண்டமணி: டேய் தயிர்வடை தலையா...

செந்தில்: அண்ணே...

கவுண்டமணி: என்னடா வரவர நம்ம ஹோட்டலுக்கு ஒருத்தனும் வர மாட்டேங்குறான். எல்லாரும் குடும்பத்தோட போயஸ் கார்டனுக்கு பொக்கே குடுக்க போயிட்டானுங்களா...?

செந்தில்: அது வந்துண்ணே...

கவுண்டமணி: என்ன வந்து போய்... முழுங்காம சொல்றா...

செந்தில்: நம்ம கடை சமையக்காரங்க எல்லாம் ஸ்ட்ரைக் பண்றாங்கண்ணே...

கவுண்டமணி (ஜெர்க்காகி): எது ஸ்ட்ரைக்கா...? படுவா அந்த எட்டு பேரையும் இங்க வரச்சொல்லுறா... நான் பார்த்தாகனும்...

செந்தில்: ஆகட்டும்ண்ணே...

(அடுத்த பத்து நிமிடத்தில் சமையல்காரர்கள் அனைவரும் கவுண்டருக்கு பயந்து வரிசையில் வந்து நிற்கிறார்கள்)

செந்தில்: அண்ணே... இவர் பேரு விந்தை மனிதன்... வேலைக்கு சேர்ந்ததுல இருந்து ஒருமுறை கூட சமையல் செஞ்சதில்ல...

கவுண்டமணி: என்னது விந்தைமனிதனா...? யோவ் பொறக்கும்போது என்ன ரெண்டு கொம்போட பொறந்தியா...?

விந்தைமனிதன்: நைட் சர்வீஸ் பஸ் வுடுறேன்... வந்து ஏறிக்கோங்க...

கவுண்டமணி: ஹே ராஜா... கஸ்டமர் இலைல பாயசம் விடச்சொன்னா நீ பஸ் வுடுறியா... மவனே இரு உன்ன...

கவுண்டமணி: ஏன்ய்யா நாஞ்சில் சம்பத் கிட்ட பேட்டி எடுத்தியே... அத ப்ளாக்ல போட்டியா...

விந்தைமனிதன்: இதோ இப்ப போட்டுடுறேன் தலைவா...

கவுண்டமணி: யோவ் எலக்சன் ரிசல்ட் வந்து ஒருவாரம் ஆச்சு... ஊசிப்போன வடையை போட்டு ஊரை எமாத்தப் பாக்குறியா...

விந்தைமனிதன்: கொங்கை முகங்குழையக் கூந்தல் மழைகுலைய...

கவுண்டமணி: ஆ... அப்பா... கவிதை சொல்ல ஆரம்பிச்சிட்டானே... இந்தாளை போகச்சொல்லுங்கடா...

கவுண்டமணி: டேய்... ஆசிட் வாயா அடுத்த ஆளை வரச்சொல்லு...

செந்தில்: அண்ணே... இவரு அஞ்சாசிங்கம் கம் அறிவியல் விஞ்ஞானி...

கவுண்டமணி: ஆமாம்... சாம்பார்ல விழுந்த பெருச்சாளியை கண்டுபுடிச்சவனெல்லாம் விஞ்ஞானின்னு சொல்லிக்க வேண்டியது...

அஞ்சாசிங்கம்: பூமி உருண்டையில்லை அது தட்டையா இருக்கு... உங்களுக்கு தெரியுமா...?

கவுண்டமணி: இப்ப நான் அடிக்கிற அடியில உன் மூஞ்சி தட்டையாகிடும் தெரியுமா...

அஞ்சாசிங்கம்: கிரேக்க வரலாற்றில் என்ன சொல்லியிருக்காங்கன்னா.....

கவுண்டமணி: அடேய் ஆப்பத்தலையா... இது சரிப்பட்டு வராது... அந்த சிராஜுதீனை கூப்பிட்டு விடு...

(அஞ்சாசிங்கம் ஆள விடுங்கடா சாமி.. என்று தலைதெறிக்க ஓடுகிறார்...)

செந்தில்: அண்ணே... அடுத்ததா உங்க பங்காளி பன்னிக்குட்டி வந்திருக்கார்...

கவுண்டமணி: பங்காளியாவது கிங்காளியாவது... ஒரு உறையில ஒரு கத்தி தான் இருக்கணும் தெரியுதா...

பன்னிக்குட்டி: மங்கிஸா கிங்கிஸா... கிங்கிஸா பாயாஸா...

கவுண்டமணி: அடேய் மஞ்சத்துண்டு மண்டையா... இவன் என்னடா சொல்றான்...

செந்தில்: ஆப்பிரிக்கா பாஷைல அவர் உங்களுக்கு தம்பி மாதிரின்னு சொல்றாரு அண்ணே...

கவுண்டமணி (மனதிற்குள்): அதானே... ஆப்பிரிக்கா பாஷை எல்லாம் உனக்குத்தானே தெரியும்...

கவுண்டமணி: மீ அண்ணா... யூ தம்பி... டச் பண்ணிட்டீங்களே தம்பி... நல்லா இருங்க... ஆனா கடைக்கு வர்ற கஸ்டமருக்கு மரநாய் கக்காவுல காப்பி போட்டு தர்றீங்களாமே... அதை மட்டும் செய்யாதீங்க... சரிங்களா...

பன்னிக்குட்டி: சரிங்ண்ணா...

கவுண்டமணி: த நெக்ஸ்ட்...

செந்தில்: இவங்க ஹைக்கூ அதிர்வுகள் ஆனந்தி...

கவுண்டமணி (மனதிற்குள்): ஹை லேடீஸ்... லேடீஸ்...

கவுண்டமணி: என்ன அதிரவே இல்லை... அதுசரி நீங்க எந்த ஊரு மேடம்...

ஆனந்தி: நாங்கெல்லாம் மதுரக்காரைங்க... தங்கமானவங்க...

கவுண்டமணி: அப்ப சென்னைல இருக்குறவங்க எல்லாம் தகரமா... நாட்டுல ரொம்ப பேர் இப்படி சொல்லிட்டு திரியுறீங்க...

ஆனந்தி: புள்ளைக்கு பரீட்சைங்க...

கவுண்டமணி: மேடம்... எக்ஸாம் முடிஞ்சி எலக்குஸன் ரிசல்ட் எக்ஸாம் ரிசல்ட் எல்லாம் வந்தாச்சு... இந்த டக்கால்ட்டி வேலையெல்லாம் இங்க வேணாம்... இன்னும் ஒரு வாரத்துல வேலைக்கு வந்து சேருற வழிய பாருங்க...

செந்தில்: அடுத்து வந்திருக்காங்க... கொஞ்சம் வெட்டிப்பேச்சு சித்ரா...

கவுண்டமணி: எது கொஞ்சம் வெட்டிப்பேச்சா...? இவங்க பேச ஆரம்பிச்சா நிறுத்த மாட்டாங்களே...

சித்ரா: புயல் அடிச்சது... பேய் மழை பெஞ்சது... மரங்கள் விழுந்துச்சு... வேலிகள் பறந்துச்சு...

செந்தில்: கவித... கவித...

கவுண்டமணி: டேய் ஒபாமா வாயா... இதுக்கு முன்னாடி நீ கவிதையே வாசிச்சது இல்லையா...

சித்ரா: Actually what im trying to say is…

கவுண்டமணி: தாயி... நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்... எவ்வளவு நாள் வேணும்னாலும் லீவ் எடுத்துக்கோங்க... ஆனா திரும்ப வரும்போது பீஸா, பர்கர் ரெசிபி எல்லாம் கத்துட்டு வாங்க... நம்மூரு கஸ்டமருங்க எவ்வளவு நாளைக்குத்தான் புளியோதரையும் பொங்கலும் சாப்பிடுவாங்க...

செந்தில்: அண்ணே... இவரு மெட்ராஸ் பவன் சிவக்குமார்...

கவுண்டமணி: வா ராஜா... நம்ம நையாண்டி பவனுக்கு போட்டியா...

சிவக்குமார்: ஐயோ அதெல்லாம் இல்லீங்க...

கவுண்டமணி: மண்டையா... பையன் பாக்குறதுக்கு அம்மாஞ்சியா இருக்கானே... ரொம்ப நல்ல பையனோ...

செந்தில்: ஆமாண்ணே... யாருமே இல்லாத கடையில யாருக்கோ டீ ஆத்துனவரு இவர் தாண்ணே...

கவுண்டமணி: வெளக்கெண்ணை கருப்பா... புரியுற மாதிரி சொல்லுடா...

செந்தில்: அண்ணே... நம்ம ஹோட்டல் மூடாம இருக்குறதுக்கு காரணமே இவர் தான்...

கவுண்டமணி: அப்படியா...? அப்படின்னா தம்பி நீங்க கல்லாவுல போய் உக்காருங்க... ஆனா இது நாலு பேரு வந்துபோற இடம் டிக்கிலோனால்லாம் விளையாடாதீங்க...

செந்தில்: அண்ணே... இவருதான் பிரபல பதிவர் பிலாசபி பிரபாகரன்...

கவுண்டமணி: ஓ... பெரிய்ய்ய தத்துவஞானி சாக்ரடீஸ்... சொறி புடிச்ச மொன்னை நாயி நீயெல்லாம் எதுக்குடா அடைமொழி வச்சிக்குற... அதுசரி... நீ என்னவோ கடைக்கு வர்ற கஸ்டமரை எல்லாம் கெட்டவார்த்தைல திட்டுறியாமே...???

பிலாசபி பிரபாகரன்: அண்ணே... நான் சின்ன பையன்... நீங்க திருத்தக்கூடாதா...?

கவுண்டமணி: ஒன்ன மாதிரி நாட்டுல 80 கோடி பேர் இருக்கானுங்க... ஒங்கள திருத்துறது என் வேலை இல்ல... மொதல்ல நான் என்னை திருத்திக்கிறேன்...

பிலாசபி பிரபாகரன்: இப்படித்தான் மகாத்மா காந்தி ஒருமுறை...

கவுண்டமணி: வாயை மூடுறா கழுதை வாயா... என்னடா தள்ளாடிக்கிட்டே நிக்கிறே... ஒயின்ஷாப்ல இருந்து நேரா வர்றியா...?

பிலாசபி பிரபாகரன்: உவ்வே...

கவுண்டமணி: அய்யா ராஜா... அப்படி ஓரமா உன்னோட ஒயின்ஷாப்ல போயி வாந்தி எடு... இங்க வேணாம்...

செந்தில்: அண்ணே... கடைசியா ஒருத்தர் வெயிட்டிங்...

கவுண்டமணி: வரசொல்லுடா...

செந்தில்: இவரு கே.ஆர்.பி.செந்தில்... மிகப்பெரிய தொழிலதிபர்...

கவுண்டமணி: நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலடா... குண்டூசி விக்கிறவனெல்லாம் தொழிலதிபர் ஆயிடுறான்...

கே.ஆர்.பி: சொல்லுங்க தம்பி...

கவுண்டமணி: டேய் இடியாப்ப தலையா... என்னடா இவன் என்னைப் பார்த்து தம்பின்னு சொல்றான்...

செந்தில்: அண்ணே... இவர் எல்லாரையும் தம்பின்னு தான் கூப்பிடுவார்....

கவுண்டமணி: அப்படிங்களா அண்ணா... உங்க பேரு என்னங்கண்ணா...?

கே.ஆர்.பி: செந்தில்...

கவுண்டமணி: கொஞ்சம் சத்தமா சொல்லுங்க...

கே.ஆர்.பி: செந்திலு...

கவுண்டமணி: அப்படியே அந்தப்பக்கம் திரும்பி நின்னு இன்னும் சத்தமா சொல்லுங்க...

கே.ஆர்.பி: செந்திலுங்கோ...

(கவுண்டமணி தனது சகா செந்திலை வழக்கமாக எங்கே மிதிப்பாரோ அங்கே கே.ஆர்.பி.செந்திலை மிதிக்க சமையல்காரர்கள் குழு எஸ்கேப்....)

கற்பனை: பிலாசபி பிரபாகரன்

Thursday, February 17, 2011

நையாண்டி பவன் – மிஷ்கின்


முஸ்கி: இந்த இடுகையில் உள்ள அனைத்தும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது... யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல...

(குமுதத்தில் வரும் நையாண்டி பவன் காமிக்ஸ் கான்செப்ட் பற்றி அறிந்திருப்பீர்கள். அறியாதவர்களுக்கு நையாண்டி பவன் என்ற இந்த ஹோட்டலுக்கு நம்ம தானைத்தலைவர் கவுண்டமணி அண்ணன்தான் முதலாளி அவரோட உதவியாளரா செந்தில். ஹோட்டலுக்கு வந்து போறவங்ககிட்ட என்னா ரவுசு பண்றாங்கன்னு நீங்களே பாருங்க...)

கவுண்டமணி: அய்யா கூலிங்கிளாஸ் போட்டுட்டு வர்ற பெரியவரே... வணக்குமுங்க...

(கூலிங்கிளாஸ் போட்டபடி இயக்குனர் மிஷ்கின் உள்ளே நுழைகிறார்...)

கவுண்டமணி (மைண்ட்வாய்ஸ்): இவனுக்கா வணக்கம் சொன்னோம்... வீட்டுக்கு போனதும் கையை அடுப்புல வச்சி கருக்கிடனும்...

கவுண்டமணி: அதென்னங்கண்ணா ரூமுக்குள்ள வந்தப்புறமும் கூலிங்கிளாஸ்... கழட்டி ஓரமா வைக்கிறது தானே...

(மிஷ்கின் கூலிங்கிளாசை கழட்ட, செந்தில் ஜெர்க் ஆகிறார்...)

கவுண்டமணி: ஐயோ ண்ணா... பையன் பயப்புடறான் தயவுசெஞ்சு கூலிங்கிளாசை கண்லயே மாட்டிக்கோங்கண்ணா... அது அங்கேயே இருக்கட்டும்...

செந்தில்: அண்ணே... உங்க யுத்தம் செய் படத்த பார்த்தேன்னே... எப்படிண்ணே இந்தமாதிரி எல்லாம் யோசிக்கிறீங்க...?

மிஷ்கின்: ஒரு அம்பது வயசு அம்மா....

கவுண்டமணி: யாருங்க நம்ம அம்மாங்களா...???

மிஷ்கின்: யோவ் குறுக்குல பேசாதய்யா மனப்பாடம் பண்ணிட்டு வந்தது மறந்து போயிடும்...

ஒரு அம்பது வயசு அம்மா கோர்ட்டுல உக்காந்திருக்காங்க... அந்த அம்மா சிகரெட் பிடிச்சாங்க... அதுக்கப்புறம் என் மூஞ்சில காரித்துப்பினாங்க.... அவங்க எதுக்காக துப்பினாங்கன்னு யோசிச்சு எழுதின கதை தான் யுத்தம் செய்...

செந்தில்: அதெல்லாம் சரிண்ணே... இந்தப்படத்துல சேரன் வித்தியாசமா நடிச்சிருக்காரே... அதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்கண்ணே...

மிஷ்கின்: நம்ம எல்லாருக்குள்ளையும் ஒரு புலி தூங்கிட்டிருக்கு... அந்தப்புலியை இந்தப்படத்துல அவுத்து விட்டிருக்கிறோம்...

கவுண்டமணி: என்னது புளிங்களா...? கொட்டை எடுத்ததா எடுக்காததா...?

கவுண்டமணி: அது ஏனுங்கண்ணா உங்க படத்துல அடியாளுங்க ஒவ்வொருத்தரா வந்து சண்டை போடுறானுங்க... இங்க என்ன ரேஷன்ல மண்ணெண்ணை கொடுக்குறாங்களா...

மிஷ்கின்: நிஜ வாழ்க்கைல யாராவது நம்மள அடிக்க வந்தா பறந்து பறந்து அடிக்கிறோமா... இல்லிங்களே... அந்த யதார்த்தத்தை தான் என் படத்துல காட்டுறேன்...

கவுண்டமணி: நல்லா காட்டுனீங்க பதார்த்தத்தை... உங்கள இந்தமாதிரி எல்லாம் பேசச் சொல்லி யாருங்க்ண்ணா கத்து குடுக்குறது...?

மிஷ்கின்: புக்ஸ் படிக்கிறேங்க... இப்ப இருக்குற உதவி இயக்குனரு பயலுங்க மாதிரி எல்லாம் கிடையாதுங்க நான்... நிறைய புக்ஸ் படிக்கிறேன்... அதனால பேசுறேன்...

கவுண்டமணி: புக்ஸ்ன்னா சரோஜா தேவி புக்ஸ் தானே...???

செந்தில்: அண்ணே... எனக்கு ஒரு டவுட்டுண்ணே...

கவுண்டமணி: ஆரம்பிச்சிட்டாரு டவுட் தங்கபாலு... என்றா டவுட் கொஸ்டின் மண்டையா...

செந்தில்: எது ஏன்னே உங்க எல்லாப் படத்துலயும் மஞ்சள் புடவை பாட்டு, சிகப்பு நிற டைட்டில் வைக்கிறீங்க...

கவுண்டமணி: டேய் விக்கி லீக்ஸ் வாயா... கலைஞருக்கு மஞ்சள் துண்டு, அம்மாவுக்கு பச்சை புடவை மாதிரி சாருக்கு அது ஒரு செண்டிமன்ட் டா...

மிஷ்கின்: அது ஒண்ணுமில்ல... ஆடித்தள்ளுபடில ஒரு புடவைய எடுத்தோம்... அதை கட்டிக்கிட்டு எப்படி ஆ(ட்)டினாலும் கிழியாம இருந்துச்சு... அதனால அதையே எல்லாப் படத்துலயும் யூஸ் பண்ணிக்கிறேன்...

செந்தில்: அது யாருண்ணே அந்த பாட்டுக்கு நடுவுல விரலை மட்டும் காட்டுறது...?

மிஷ்கின்: அது ஒரு அல்லக்கை... எனக்கு ஏதாவது ரோல் கொடுங்கன்னு கேட்டுட்டே இருந்தான்... சரி போய்த்தொலையட்டும்ன்னு ஹார்மோனியம் வாசிக்க விட்டேன்...

செந்தில்: அப்படின்னா சாரு நிவேதிதா...?

மிஷ்கின்: அவர் என்னோட நண்பர்... என்னோட நண்பர்... என்னோட நண்பர்...

கவுண்டமணி: அத ஏனுங்கண்ணா மூணு முறை சொல்றீங்க... தண்ணி ஓவராயிடுச்சா...???

கவுண்டமணி: ஏனுங்க நீங்க உலகப்படங்களை பாத்து காப்பி அடிக்கிறதா சிலவனுங்க சொல்றானுங்களே... அதெல்லாம் உண்மையா...?

மிஷ்கின்: ஆமாங்க... அகிரோ குரசோவா, டகேஷி கிடானு இவங்களை எல்லாம் பாத்து தான் நான் சினிமா எடுக்க கத்துக்கிட்டேன்...

செந்தில்: அண்ணே... என்னன்னே திடீர்னு கெட்டவார்த்தைல திட்டுராரு...

கவுண்டமணி: அடேய் கோமுட்டி தலையா... அதெல்லாம் ஓலகப்பட இயக்குனருங்க பேருடா... அவங்க எடுத்த படங்களை தான் இவரு ரீமேக் பண்றாரு...

மிஷ்கின்: அப்படியே பாத்தாலும் நான் உங்களுக்கு ஒன்னும் அபின் கொடுக்கலையேங்க... என் மக்களுக்காக நல்ல படங்களைதானே தர்றேன்...

கவுண்டமணி: ரொம்ப சந்தோஷமுங்க... அப்படின்னா கையோட கையா காப்பிரைட் வாங்கிட்டு எடுக்கலாமேங்க...

மிஷ்கின் (தலையை சொறிந்தபடி): அதுக்கெல்லாம் காசு கொடுக்கணுமே தம்பி...

கவுண்டமணி: பாத்துக்கோங்க பொதுஜனங்களே இந்த பாவத்துக்கெல்லாம் நான் ஆளாகவே மாட்டேன்... என்ன உட்ருங்க...

செந்தில்: எண்ணே... நந்தலாலா படமும் கிகுஜிரோ படமும் அப்படியே அச்சு அசல் ஒரே மாதிரியே இருக்குறதா பேசிக்கிறாங்களே ண்ணே...

மிஷ்கின் (கடுப்பாகி): ஏங்க அப்படி பார்த்தா மணிரத்னம் காப்பி, நாயகன் காப்பி, பாரதிராஜா காப்பி, பதினாறு வயதினிலே காப்பி, கேஆர்பியோட பயோடேட்டா காப்பி... இவ்வளவு ஏங்க உங்க நையாண்டி பவனே காப்பி... என்னவிட்டா நான் நாலு மணிநேரம் கூட பேசுவேன்...

கவுண்டமணி (டென்ஷனாகி செந்திலின் புட்டத்தை எட்டி மிதித்தபடி): சொறி புடிச்ச மொன்னை நாயே... இனிமே இந்த மாதிரி ஆளுங்கள எல்லாம் கடைக்குள்ள சேர்த்தா கூகுள் ஓனரை விட்டு கடிக்க வச்சிடுவேன்... ஜாக்கிரதை...

(இந்த சம்பவத்தை பார்த்து மிஷ்கின் தலைதெறித்தபடி ஓடுகிறார்...)

கவுண்டமணி (மிஷ்கின் ஓடிய திசையை பார்த்து): படுவா... இனிமே நீ ஓலகப்படம் பார்த்த உன்ன ஒரே அப்புல மக்காத்தி பண்ணிடுவேன்...