Wednesday, August 31, 2011

யூத் பதிவர் சிந்திப்பு: செய்தித்துளிகள்


             
* போன பதிவுல போட்டபடி வர்ற சண்டே சாயங்காலம் அஞ்சி மணிக்கு மாநாடு தொடங்குது சாமியோ.

*  ரூல்ஸை மீறி யூத்தா காட்டிக்கிட்டு உள்ள வர்றதுக்கு சில பேரு முயற்சி செய்றாங்கன்னு செய்தி வருது. அதனால தலைல டை அடிச்சிட்டு வர்றவங்க, தொப்பை தெரியக்கூடாதுன்னு தம் கட்டிட்டு நடந்து வர்றவங்க எல்லாரையும் கண்காணிக்க ஆளுங்களை போட்டுருக்கோம். 

* சரியான நேரத்துக்கு வந்து சீட்டை புடிச்சிக்கங்க. துண்டு, கர்சீப், காலாவதியான செருப்பு மாதிரி ஓல்ட் டைப்ல சீட் ரிசர்வ் செஞ்சி யூத் இமேஜை ஸ்பாயில் பண்ணாதீங்க. லேட்டஸ்ட் ட்ரெண்டா பர்ஸ், கேமரா மொபைல், ரீபோக் ஷூன்னு போட்டு ரிசர்வ் பண்ணுங்க. 

* தனித்திறமையை காட்டியே தீருவேன்னு அடம்பிடிக்கறவங்க தாராளமா முன்வரலாம். கவிதை வாசிக்கறதா இருந்த நச்னு புதுக்கவிதை சொல்லுங்க. அதைவிட்டுட்டு 'என் இதயத்தில் இருந்து பீறிட்ட ரத்தம் கொண்டு நம் காதல் யுத்தம் முடிப்பேன். உன் அண்ணன் போடும் சத்தம் மொத்தம் அழிப்பேன்' ரேஞ்சுல இருந்தா ரகளை ஆகிடும்.



* முக்கியமான மேட்டர்: உங்ககிட்ட ஏதாச்சும் நல்ல புத்தகங்கள் இருந்தா (இருக்கா?) அதை கொண்டுவாங்க. சந்திப்புக்கு வர்ற யூத்ஸ்க்கு கிப்டா தரலாம்.    பழுப்பேறிய, கிழிஞ்ச புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்.

* குறிப்பா அரியர்ஸ் எழுத வச்சிருக்குற புக்கு, காதலிக்கு/காதலனுக்கு உருகி உருகி எழுதுன உன்னத டைரி, காலேஜ் சேந்தப்ப வாங்கி இன்னும் பிட் அடிக்க கூட கிழிக்காத புக்கெல்லாம் கொண்டு வந்து காண்டு ஏத்தாதீங்க. யூத்துன்னா உருப்படியா ஏதாவது கொஞ்சம் கிழிப்பாங்கன்னு ப்ரூவ் பண்ண இது ஒரு சந்தர்ப்பம். டோன்ட் மிஸ்!! 
                                           
                                                             
* கீழ இருக்குற அஞ்சி நம்பர்ல யாருக்கு வேணும்னாலும் கால் பண்ணி மாநாடு சம்மந்தமா உங்க டவுட்டை கிளியர் பண்ணிக்கலாம்.

கேபிள் சங்கர்: 98403 32666

கே.ஆர்.பி. செந்தில்: 80988 58248

வேடந்தாங்கல் கருன்: 94432 75467

பிரபாகரன்: 80158 99828

சிவகுமார்
98416 11301

..........................................................................

* மாநாட்டில் சந்திப்போம். உங்களுக்காக கவுண்டமணியின் கலக்கல் காமடி:



.................................................................................
Posted by:
..................................................................................
    
                                                  

Saturday, August 27, 2011

செப்டம்பர் 4 - சென்னை யூத் பதிவர் சந்திப்பு!


                                                                           
"ஹல்லோ..சென்னைல (பிரபல/சீனியர்) பதிவர் சந்திப்பு மட்டுமே நடக்குற மாதிரி ஒரு பீலிங் இருக்கே. எப்பதான் 'சென்னை யூத் ப்ளாக்கர்சுக்குன்னு ஸ்பெஷலா ஒரு மீட் ஏற்பாடு பண்ணப்போறீங்க?"

இப்படி ஏகப்பட்ட போன் கால், எஸ்.எம்.எஸ்.ன்னு பல்முனை தாக்குதல் நடத்தும்  யூத் ப்ளாக்கர்ஸ் ஆசையை நிறைவேற்ற வரும் செப்டம்பர் 4 - ஆம் தேதி சண்டே சென்னையில் பிரம்மாண்ட(!) யூத் ப்ளாக்கர்ஸ் மீட் நடத்த ப்ளான் பண்ணி இருக்கோம். சென்னையின் ஆசியாவின் பதிவுலக யூத் பிரத(ம)ர் கேபிள் ஷங்கரும், சென்னை வலைப்பதிவர் குழுமத்தின் UN-OPPOSED தலைவர் கே. ஆர்.பி. செந்திலும் பட்டாக்கத்தி முனையில் எங்கள் இளைஞர் குழுவை   மிரட்டி 'அசல் யூத் நாங்க இல்லாம எப்படி இந்த மீட்டிங்கை நடத்தறீங்கன்னு பாக்குறோம்'என்று இரட்டைக்குழல் துப்பாக்கியாக கர்ஜித்ததால் வேறுவழியின்றி அவர்களை சிறப்புரை ஆற்ற அழைத்திருக்கிறோம். 

                                                                        
 ப்ரோக்ராம் ஹைலைட்ஸ்:

* புதிதாக ப்ளாக் எழுத நினைப்பவர்களுக்கு அதிரடி பயிற்சி அளிக்கப்படும்.

*குறுக்கே புகுந்து எசகுபிசகாக கேள்வி கேட்பவர்களை கண்காணித்து அவர்கள் பதிவிற்கு ஓட்டு போடாமல் இருப்பது, அப்படியே போட்டாலும் மைனஸ் ஓட்டு மட்டுமே போடுவது என தீர்மானம் நிறைவேற்றப்படும்.

* இது செம யூத் பதிவர் சந்திப்பு என்பதால் கோடுபோட்ட சட்டை, இன் பண்ணுதல், கருப்பு ஷூ போன்ற முன்னோர்களின் உடுப்புடன் வருபவர்கள் குண்டுக்கட்டாக/ஒல்லிக்கட்டாக தூக்கப்பட்டு வாசலில் நிறுத்தப்படுவர். டி ஷர்ட், (முக்கா) ஜீன்ஸ் என ரகளையாக வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

* உணர்ச்சிவசப்பட்டு மைக்கை கடித்து துப்புதல், பிடிக்காத பதிவர்களை கண்டதும் ஓங்கி குரல் எழுப்புதல்/தூக்கிப்போட்டு மிதித்தல், 'நல்ல விஷயமே எழுத மாட்டீங்களா?' என்று நெற்றிக்கண்ணை திறத்தல் என எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உடைந்த பொருட்கள், கிழிந்த சட்டைகள் என அனைத்திற்கும் அபராதம் செலுத்தாமல் எஸ்கேப் ஆகலாம் என்று மட்டும் மனப்பால் குடிக்காதீர்கள். இதை சமாளிப்பதற்கென்றே பயங்கர பல்க் ஆன ஜிம் பாய்களை ஆர்டர் செய்து உள்ளோம்.

* பெண் பதிவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படும்.

* "அன்பார்ந்த பதிவுலக நண்பர்களே" என்று பேசுவது, கையை கட்டியவாறு பவ்யமாக உட்காருவது போன்ற பார்மாலிட்டிகளை பின்பற்ற 144 தடை உத்தரவு போடப்படும்.

* ப்ளாக்கர்ஸ் மீட்டிங்கில் நடந்ததை பற்றி பல அத்தியாயங்கள் பதிவு எழுத நினைப்பவர்கள் (ஒருநிமிடம்.... நாஞ்சில் மனோ, சிபி திடீரென மனதில் ப்ளாஷ் ஆகி முறைக்கிறார்கள். அப்பாடா..போய்ட்டாங்க) குறிப்பெடுக்க தாள், மை இலவசமாக தரப்படாது என தாழ்மையுடன் தெரிவிக்கிறோம். 

* இலக்கியம், லோக்பால், வரலாற்று சம்பவங்கள் போன்ற திகில் கிளப்பும் விசயங்களை பேசினால் மைக் ஒயரை கட் செய்ய கேபிள் அண்ணன் கிஞ்சித்தும் தயங்கமாட்டார் என எச்சரிக்கை செய்யப்படுகிறது.

* பிரபல/சீனியர் பதிவரை முதல் முறையாக மாநாட்டில் பார்க்கும் யூத்/புதிய ப்ளாக்கர்கள் "நீங்க ப்ளாக் எழுதறீங்களா?" என்று எக்குத்தப்பாக கேள்வி கேட்டுவிட்டு செம அடி வாங்கினால் அவரை காப்பாற்ற ஒருவரும் வரமாட்டோம் என்பதை திட்டவட்டமாக அறிவிக்கிறோம்.
............................................................................

மாநாடு நடைபெறும் இடம்:

டிஸ்கவரி புக் பேலஸ்,
(முதல் மாடி)
6, முனுசாமி சாலை,
கே.கே.நகர்
சென்னை.
(பாண்டிச்சேரி கெஸ்ட் அவுஸ் அருகில்)
நாள்: செப்டம்பர் 4,2011.
நேரம்: மாலை 5 மணி
..........................................................

மாநாட்டிற்கு வலு சேர்க்க/ஆட்களை கோர்க்க தங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம்:

மேலும் விவரங்களுக்கு:


சிறப்பு பேச்சாளர்: 98403 32666

கௌரவ தலைவர்(புதிய பதிவர்): 80988 58248

வடசென்னை செமயூத் பதிவர்: 80158 99828

தென் சென்னை அல்டிமேட் பதிவர்: 98416 11301

சென்னை புறநகர் முன்னணி பதிவர்: 94432 75467
................................................................

ஆ...முக்கியமான விஷயம். மிஞ்சிப்போனா ஒரு கப் காபி அல்லது மோர் மட்டுமே வழங்கப்படும். ஒன்ஸ்மோர் கேட்டு கொந்தளித்து உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு பேராதரவு அளிக்கப்படும்.




http://youtu.be/MT_mkzYdaCo
..............................................................

                                                                 
"செம காமடியான பதிவு. சிரிப்பு சிரிப்பா வந்திச்சி" என்று முதலில் போன் போட்டு சொன்ன நபருக்கு ஒரு செய்தி:

'தெய்வமே. இது காமடி பதிவல்ல. பயங்கர சீரியஸ் பதிவு. ட்ராபிக் ஜாம் செய்து சென்னையை குலுக்காமல் அமைதியாக மாநாட்டிற்கு வாங்க பிரதர்ஸ்/ சிஸ்டர்ஸ்'
..................................................................................

FLASH NEWS:
மாநாட்டிற்கு வரும் அனைவரின் போக்குவரத்து உள்ளிட்ட சகல செலவுகளுக்கான பணத்தை தானே தருகிறேன் என்று சென்னையின் பெரும் பணக்கார பதிவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ் உறுதி அளித்திருப்பதை ஒருமனதுடன் பாராட்ட கடமைப்பட்டு இருக்கிறோம்.
.................................................................................
..............
Posted by:
! சிவகுமார் !
.............

                                                                      

Thursday, August 25, 2011

இன்று கேப்டன் பிறந்த நாள் - சிறப்பு பதிவு!



               
"புதிய தலைமை செயலகம் ஆஸ்பத்திரியா மாறப்போகுதாமுல்ல. நெனச்சா சந்தோசமா இருக்கு புள்ள. மேடம் கிட்ட ஒண்ணு மட்டும் உறுதியா சொல்லிப்புட்டேன். அந்த ஆஸ்பத்திரிக்கு 'டாக்டர் சபரி மருத்துவமனை'ன்னு பேரு வைக்கணும்னு"
...............................................................................


                                                                     
"தங்கம் விலை ஏறப்போதுன்னு அப்பயே தலப்பாடா அடிச்சிகிட்டேன். இப்ப அனுபவிங்க. என்னோட மூக்குல, காதுல, நாக்குல இருக்குறது எல்லாம்  சொக்கத்தங்கம்ல"
.............................................................................................

                                                                     
"அம்மா ஆட்சி தொடங்கி 100 நாள் ஆனதுக்கு நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பல மக்களே. என்னோட விருதகிரி வெற்றிகரமா 10 - வது நாள் ஒடுனப்ப மட்டும் அந்தம்மா வாழ்த்து சொன்னாங்களா? என்றா நியாயம் இது?"
.........................................................................................


"என்னோட பர்த்டே-வை வறுமை ஒழிப்பு தினமா கொண்டாடனும்னு சொன்னதை எவனோ ஒரு துரோகி வறுமையோட மொபைலுக்கு sms பண்ணி இருக்கான். வறுமையோட வீட்டுக்கு போயி எல்லா ரூம்லயும் தேடிட்டேன். தப்பிச்சிருச்சி. விட மாட்டேன். எங்க இருந்தாலும் தேடிப்பிடிச்சி அதை ஒழிச்சே தீருவேன்"                                                                
........................................................................................

                                                                   
"கேப்டன். கேப்டன். உன்னோட படங்க மட்டும்தான் உலக சினிமா வரிசைல  நிரந்தர டாப் டென். எதிரிகளை விரட்டி அடிச்சவன் இந்த நரசிம்மா. உள்ளாட்சி தேர்தல்ல கேட்ட சீட்டை தருமா இந்த அம்மா. லோக்பால் மேட்டரை வச்சி சூப்பர் ஹீரோ ஆயிட்டாரு அந்த அன்னா. கருப்பு எம்.ஜி.ஆர். பேரை மாத்திட்டு 'ஆசியாவின் அன்னா'ன்னு புதுப்பேரு வச்சிகிட்டா என்னா?"
................................................................................................................


"நல்லவேளை இந்த போட்டோ அந்தம்மா கண்ணுல சிக்கல"
.........................................................................................                                                                  

     
"எத்தனை தடவ சொல்லியும் நம்ம பயலுக இந்தியாவை விட்டு தாண்ட மாட்டோம்னு அடம் புடிக்கறானுங்களே. சர்வதேச லெவல்ல கீழ இருக்கற மாதிரி போஸ்டர் ஒட்டுங்கன்னு நான் சொல்லித்தான் தெரியணுமா?"

                                                                                                                                  
...........................................................................................................

                                                                  
"எந்த எடுவட்ட பயடா இந்த எடை மிஷினை கண்டுபுடிச்சது? நான் வெயிட் பார்ட்டின்னு தெரிஞ்சும் சீண்டுரானா? என்ன தெனாவட்டு இருந்தா என்னோட வெயிட்டு ஜீரோன்னு காட்டும். அந்த பரதேசியை கொன்னுட்டுதான் மறு வேலை"
........................................................................................

குளத்துல நீச்சல் பழகுனவனை ஆறு பயம் காட்டும். ஆத்துல நீச்சல் பழகுனவனை கடல் பயம் காட்டும். கடல்ல நீச்சல் பழகுனவை???

நீங்களே பாருங்க:


..........................................................................

Posted by:
! சிவகுமார் !
nanbendaa.blogspot.com
...............................


                                    

Wednesday, August 24, 2011

கொக்கு பரோட்டா (24/08/11)


                                                                   
நேற்று பின் தினம்(மாலை)  '' கபேயில் படு பிரபல பதிவர் சிந்திப்பு நடந்தது. தமிழ் பதிவுலகில் மட்டுமன்றி, செவ்வாய் கிரக பதிவுலகின் முக்கியமான நண்பர்களும், பஸ்ஸர்களும்(பதிவர் வேறு பஸ்ஸர் வேறா என்று கேக்கப்படாது). இலக்கியம் பற்றி யாரேனும் பேச ஆரம்பித்தாலே எனக்கு நாக்கு ரோலிங் ஆகிவிடும் என்பதால் ஆப்ரிக்க கண்ட நண்பரிடம் கூடுமானவரை பேச்சு குடுக்காமலே இருந்தேன். அக்கூட்டத்தில்  திடீரென நான் பாட ஆரம்பித்ததில் சைதாப்பேட்டை ஆத்தோரம் இருந்த சென்னையின் ஒரே கழுதையும் கதறி அழுதவாறு செங்கல்பட்டில் தஞ்சம் புகுந்தது. 
############################################


என்னவோ தமிழ் சினிமா ஆட்சி மாறியவுடன் தேனும் பாலும் ஓடும் என்பது போல சொல்லிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.(ஏன் தவிக்க வேண்டும். அதுதான் தேனும் பாலும் ஓடுகிறதே. எடுத்து ஆளுக்கு ஒரு மொடக்கு குடிக்கலாமே). ஆட்சி மாறி.. சமீபம் வரை தெய்வதிருமகளும், காஞ்சனாவும்தான் ஓடிய படங்களாய் இருக்கிறது மற்ற படங்கள் எல்லாம் போட்ட பணத்தில் போஸ்டர் ஒட்டிய காசு கூட வரவில்லை என்கிறார்கள். (போஸ்டர் ஒட்டிய காசு எப்படி 'கூட' வரும். கொஞ்சம் குறைவாகத்தான் வரும்)  எல்லா படங்களையும் அடி மாட்டு ரேட்டுக்கு கேட்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள். மம்மி ஆட்சி மாறும் வரை இதே டயலாக்கை நான் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பேன். கேட்பது உங்கள் விதி!!
############################################


புதிய தலைமை செயலகத்தில் ஆஸ்பத்திரி கட்டும் ஐடியாவை மம்மி சொன்னதில் இருந்து என்னைப்போன்ற ஆளும்கட்சி எதிர்ப்பாளர்கள்..குறிப்பாக என் பாலோயர் கலைஞர் கூட கதிகலங்கி போய் இருக்கிறார். வேறு வழியில்லை. பாராட்டி ஆக வேண்டும். அட்லீஸ்ட் என் கொக்கு பரோட்டாவை சாப்பிட்டு விட்டு வயித்தை கலக்கிக்கொண்டு அல்லாடும் ரசிகர்களுக்காவது இந்த மருத்துவமனை பயன்படட்டும். 
###########################################


நான் எழுதும் விமர்சனங்களுக்கு பல விதமான ரெஸ்பான்ஸுகள் அப்படத்தை இயக்கிய இயக்குனர்களிடமிருந்து, நடிகர், நடிகைகளிடமிருந்தும், டெக்னீஷியன்களிடமிருந்தும் வரும்(ஆனா வராது). சில சமயம் எழுதாத போது போன் செய்தும் கேட்பார்கள்(ASK சந்தா கட்டவைத்துவிட்டேன்). சில படங்களின் காட்டமான விமர்சனத்தை போலவே காட்டமாய் பேசியதும் உண்டு(நானும் எத்தனை மொக்கை படம்தான் பாக்குறது). பின்னர் வெகு நேர கலந்துரையாடலுக்கு பிறகு புரிந்து கொள்வார்கள். (நான் எழுதும் விமர்சனத்திற்கு நான் மட்டுமே வாசகன் என்று) பின்பு அவர்களின் நெருங்கிய நண்பனாக ஆகிவிடும் அளவிற்கு  நெருக்கமும் வளர்ந்திருக்கிறது(சாப்பாட்டுக்கடை வெற்றிநடை போட வேண்டாமா?).  அப்படி ஒரு இயக்குனர் சென்ற வாரம் ஃபேஸ்புக் இணையளதள வாசகர்களுக்காக ஒரு சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்திருந்தார்(கடைசி வரை ஒரு சிறப்பு காட்சி கூட படத்தில் இல்லை என்பது வேறு விஷயம்). அப்படத்திற்கு நான் விமர்சனம் எழுதினேன். என்னைத் தவிர படம் பார்த்த ஒருவர் கூட விமர்சனம் செய்யவில்லை(ஏனென்றால் நான் மட்டும்தான் பார்த்தேன்). காலையிலேயே கோபமாய் பேசினார். நான் எப்படி எழுத வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். எனக்கு என்ன அறிவில்லை என்று சொன்னார். நான் ஒரு தயாரிப்பாளரின் அலுவலகத்தில் இருப்பதை சொல்லி பிறகு பேசுகிறேன் என்றேன். பிறகு நான் பேச அழைத்த போது எடுக்கவில்லை. நான் அவருக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன். Thanks for your review about my___________ review, and about me. என்று. பின்பு கூப்பிட்டார். பேசினேன். என் மேல் வைக்கும் விமர்சனத்தை நான் ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். I expect the same too Nanba. இதை எழுதி ஒரு வாரம் ஆகியும் அவரிடம் இருந்து நோ ரெஸ்பான்ஸ்.  எனவே என் மேல் வைக்கப்பட்ட விமர்சனம் பற்றி ஒரு விமர்சனத்தை நாளை எழுதப்போகிறேன். 
###########################################


தத்துவம்
சில சமயம் நம் வாழ்க்கையின் அத்தனை கதவுகளும் மூடப் பட்டுவிட்டதாகவே தோன்றும். ஆனால் எல்லாம் மூடப்பட்ட கதவுகள் அடைக்கப்படுவதில்லை(டைரக்டர் சான்சு கிடைக்கிறது சும்மாவா?) கதவை மெல்ல அழுத்தித் திறக்கும் கைகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. கதவை திற காற்று நிச்சயமாய் வரும்(ரஞ்சிதாவும் வருவாரா?)

அவனால் செய்ய முடியுமென்றால் உன்னாலும் நிச்சயமாய் செய்ய முடியும் - எவனாலும் செய்ய முடியாது என்றால் நிச்சயம் நீ செய்ய வேண்டும்.-ஜப்பானிய பழமொழி. (ரஜினி நடிச்ச ஜப்பான் பட டப்பிங் மாதிரி இருக்கே)

அவனால் செய்ய முடியுமென்றால், அவனே செய்யட்டும், யாராலும் செய்ய முடியாது என்றால் “ஆணியே புடுங்க வேண்டாம்” விட்டுருங்க.- நம்மூர் பழமொழி (கேட்டியா கொடுமைய)

விவாதிப்பதை விட வளைந்து கொடுத்து போவது நல்லது.
அர்த்தமுள்ள மெளனம், அர்த்தமில்லாத வார்த்தையை விட சிறந்தது.

(வாங்குன கடனுக்கு பதில் சொல்லிட்டு இதை எழுதி இருக்கலாம்) 
############################################

கார் கீ,  ஆ.மூ.கி., படகோட்டி ஆகியோர் தளபதி பட வசனத்திற்கு செமையாக டப்பிங் பேசி இருக்கிறார்கள். கார் கீ குரல் அப்படியே ரஜினி குரல் போல இருந்ததை கேட்டு நான் எழுந்து விழுந்து பிறகு விழுந்து எழுந்து சிரித்தேன். அந்த ஒரிஜினல் ரஜினி குரல்..சேன்ஸே இல்லை கார் கீ.  எ டிவைன் வாய்ஸ்!! நீங்களும் கேட்டு மலைத்துப்போங்கள். 
   
############################################


மை சென்டர்: 
"ழ" கபேயில் நாங்கள் பாடும் பாட்டை கேட்டு பட்ட பாட்டால் இப்போது அந்த கடையின் பெயரை ஒருவழியாக "லா லலல்லா" கபே என்று மாற்றிவிட்டார்கள். மன்றம் வந்த தென்றலுக்கு பாடலை நான் பாட ஆரம்பித்ததுமே ரூம் முழுக்க லோ வோல்டேஜ் (ஆதாரம்: கீழே). வெற்றிலைப்பாக்கு கவிஞர் 'விந்தை மனிதன்'எனது வலப்புறத்தில் வெத்து இலையாக அமர்ந்து கொண்டு பல்லைக்கடித்துக்கொண்டு இருந்தார்.  "நான் தாம்பா ஏ.வி.எம். சரவணன்" ரேஞ்சில் கையை கட்டியவாறு 'தகதகக்கும் சூரியன்' அப்துல்லா இந்த பேரிம்சையை சகித்துக்கொண்டிருந்தார்.   

       
ஆத்தா பாடலுக்கு அப்துல்லா பாட ஆரம்பித்ததும் ராஜாராமன் இனி தப்பிக்க வழி இல்லை என்பதை உணர்ந்து விட்டதால், கூட சேர்ந்து தப்புத்தாளம் போட ஆரம்பித்தார். வெள்ளுடை வேந்தர் வீறிட ஆரம்பித்ததும் அவருக்கு பின்னாலே இருந்த டி.வி.யில் ஒளிவட்டம்(சத்தியமாக உதய சூரியன் அல்ல) தெரிய ஆரம்பித்தது (ஆதாரம்: காணொளியில்). அந்த ஒளிவட்டத்தை தனக்கு சாதகம் ஆக்கிக்கொள்ள சாதகம் செய்வது போல் நடித்து அப்துல்லாவிற்கு பின்னே ஒரு அ.தி.மு.க. அனுதாபி (பார்க்க புதிய பதிவர் போல் இருந்தார்) ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தார். டெபாசிட்டாவது   தேறுமா எனும் ஆசையில் அப்துல்லா உயிரை குடுத்து/எடுத்து பாடினாலும் கதவோரம் சாய்ந்து இருந்த கபே ஊழியர் கடைசிவரை கண்டுகொள்ளவே இல்லை. ஆட்சி மாறுனா யாருமே மதிக்க மாட்டானுங்களா!! அய்யகோ அப்துல்லா!! 





##################################################


அடல்ட் சென்டர்:


அடல்ட் சம்மந்தப்பட்ட படு கிளுகிளுப்பான செய்தி படிக்க இங்கே (கிளு)கிளுக்கவும் ':


அடல்ட்ஸ் ஒன்லி 

################################################## 

இப்பதிவை எழுதச்சொல்லி ஊக்கப்படுத்திய கேபிள் அண்ணனுக்கு ஜெ ஜே!

கபாலம் முதல் கணுக்கால் வரை இப்பதிவிற்கு ஆலோசனை வழங்கிய கே.ஆர்.பி. அண்ணன் வாழ்க. 
                      
- இப்படிக்கு அண்ணன்மார்களின் விழுதுகள். 
......................................................................................................


Thursday, August 11, 2011

கால் கிலோ அல்வா: நாஞ்சில் மனோ பேட்டி



கவுண்டமணி: எலா. யாருலா இந்த ஆபீசர். இதுக்கு முன்னாடி இவரை நான் பாத்ததே இல்லியே?

செந்தில்: அண்ணே இவர்தான் நாஞ்சில் மனோ. 

கவுண்டமணி: 'நான் ஜில்' மனோவா? எந்நேரமும் Fridge  உள்ள இருப்பாரா?

செந்தில்: அவர பத்தி உங்களுக்கு தெரியாது. இப்போதைக்கு மும்பைய அலற வக்கிற முக்கிய புள்ளியே அவருதான். 

கவுண்டமணி:  ஏன்..பாட்ஷா - 2 படத்துல நடிக்கறாரா?

செந்தில்: ஆமா. முதல் பாதி மும்பைல.  2 - வது பாதி பஹ்ரைன்ல ஷூட்டிங். 

கவுண்டமணி: ஏயப்பா. பெரிய ஆளுதான். வா.. மனோ ஆபீசர் பேட்டில என்ன சொல்றாருன்னு பாப்போம்.

                                                          பஹ்ரைன் 'பாட்ஷா' 


1. உங்க ப்ளாக் ப்ரோபைல்ல கலைஞரின் புத்தகங்கள் புடிக்கும்னு சொல்லி இருக்கீங்களே? அது என்ன புக்குன்னே?  


தென்பாண்டி சிங்கம்,  ரோமாபுரியில் பாண்டியன் ம்ம்ம்ம் அப்புறம் நெஞ்சிக்கு நீதி மக்கா, கடைசி பாகம் படிக்கலைன்னு நினைக்கேன், ஏன்னா அதுக்குள்ளே ஆசுபத்திரி பக்கத்துல வந்துருச்சிடே ஹி ஹி....

2. நீங்க சி.எம். ஆனா முதல்ல போடப்போற மூணு ஆணைகள் என்ன?

1 : கூவம் உண்மையிலேயே கரையேறனும்லேய் மக்கா.....
2: தமிழ்நாட்டுக்குள்ளே இருக்குற கருப்பு பணம் எல்லாத்தையும் புடுச்சி ஏதாவது மக்களுக்கு நன்மை செய்யனும்லேய் மக்கா...
3 : தமிழ்நாட்டை முன்னுதாரணமா மத்த மாநிலங்கள் மாத்திரம் இல்லைடே, உலகமே பார்க்கணும்....!

3. சிபி,  விக்கி ரெண்டு பேருக்கும் நடுவுல உக்காந்துகிட்டு 20 மணி நேரம் பஸ்சுல போற நிலைமை வந்தா எப்படி தப்பிப்பீங்க? கண்டிஷன்: இடத்தை விட்டு நகரக்கூடாது,  ஹெட்செட்ல பாட்டு கேக்கக்கூடாது, தூங்கக்கூடாது.

ஐயோ அப்பிடி ஒரு பாக்கியம் [[பெண் அல்ல]] கிடைச்சா அந்த நாள் இனிய [[நாசமாபோச்சு போ]] நாளாக இருக்கும், காரணம், அண்ணன் சிபி'கிட்டே பிட்டு பட ஸ்டோரி சொல்ல சொல்லி கேட்பேன், விக்கி அண்ணன்கிட்டே ஃபிகர் கதை பற்றி கேட்பேன், கதை சொல்லியே நொந்து [[இருவது மணி நேரம் ]]ரெண்டு ராஸ்கலும் டயர்ட் ஆகி நொந்துருவாணுக ஹி ஹி, அப்புறம் அது கில்மா பயணம் அப்பிடின்னு நான் ஒரு பதிவை தேத்திருவேம்லேய் மக்கா....

4. இந்த படத்துக்கு ஜாலி கமன்ட் போடுங்க(அட்டாச் செய்யப்பட்டுள்ளது)

                                                                     
எந்த படத்துக்குலேய் ஜாலி கமெண்ட் போட சொல்லுதே ஒரு படத்தையுமே காணோம்....?? எனக்குதேன் கண்ணு எளவு தெரியல்லியா...!!!


(மனோ அண்ணாத்த ..இப்ப தெரியுதா படம். கமண்ட்டை போடுங்க)


5. உங்க வீட்ல நடந்த மறக்க முடியாத காமடி சம்பவம் எதுனா ஒண்ணு சொல்லுங்க.

சிறு வயதில் ஒரு பஸ் பிரயாணத்தில் செம கூட்டம், அப்போது என் அப்பா அம்மா டிக்கெட் எடுத்துருபாவ'ன்னு நினச்சி சும்மா இருந்தாவ, எங்க அம்மா அப்பா டிக்கெட் எடுத்துருப்பாவ'ன்னு நினச்சிருக்காவ.......ஆக மொத்தம் ரெண்டு பேருமே டிக்கெட் எடுக்காம இறங்கிருக்காவ இதை இப்பவும் சொல்லி சிரிப்போம்.......!!!

6. நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்னு பஞ்ச் டயலாக் சொல்றீங்க. அந்த 'நன்று' என்னன்னு மக்களுக்கு சொல்லுங்க? 

பிளாக் எழுதனும்னு நினச்சா அதை அன்னைக்கே உடன எழுதி மக்களை கலவர படுத்தணும் ஹி ஹி...[[போதுமா]] 

7. நீங்க வாங்குனதுல மிகப்பெரிய 'பல்ப்' எது? 

ஐந்தரை மணிக்கு ரயில் ஈரோடு போகும் சிபி'யை அங்கே பார்க்கலாம்னு சொன்னாரு ஆபீசர், ஆனால் ரயில் மூன்றரை மணிக்கு ஈரோடு போனது, சிபி கிட்டே திட்டு வாங்குனது ஹி ஹி.....

8. நைட்ல பப்பரப்பேன்னு கொட்டாவி விடும்போது வாய்க்குள்ள பெருச்சாளி மாட்டிக்கிட்டா என்ன பண்ணுவீங்க? (கண்டிசன்: ஒரு மணி நேரம் போராடணும்)

இது ஒரு நல்ல கேள்வி மட்டுமில்ல நாட்டு மக்களுக்கு தேவையானதும் கூட [[அருவாளை எங்கே வச்சேன் பிச்சிபுடுவேன் பிச்சி....??]] உடனே சிபிக்கு போனை போட்ருவேன் டேய் அண்ணே சீக்கிரமா ஓடி வாலேய் உனக்கு சினிமா எடுக்க ஒரு பெருச்சாளி வசமா தம்பி கையில ஸாரி வாயில சிக்கிருச்சிலேய், ஒரு மணி நேரம்தேன் டைமு வந்தியன்னா அமலா பாலை வச்சி ஒரு சூப்பர் படம் பூலான்தேவி கதை மாதிரி சினிமா எடுத்து தமிழ் மக்களை அடுத்த மாநிலத்துக்கு ஓட வச்சிரலாம் ஓடிவா ஹே ஹே ஹே ஹே....


9. உங்களுக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் உள்ள ஆறு ஒற்றுமைகள் என்ன? (ஆறையும் சொல்லியே தீரனும்)

1 : பிளாக் "எழுதி" மக்களை கலவரபடுத்துறது.....
2 :  பிளாக் "எழுதி" மக்களை கலவரபடுத்துறது..... 
3 :  பிளாக் "எழுதி" மக்களை கலவரபடுத்துறது.....
4 :  பிளாக் "எழுதி" மக்களை கலவரபடுத்துறது.....
5 :  பிளாக் "எழுதி" மக்களை கலவரபடுத்துறது.....
6 :  பிளாக் "எழுதி" மக்களை கலவரபடுத்துறது.....
[[அப்பாடா தப்பிச்சாச்சு ஹி ஹி]]


10. கவுண்டமணி - செந்தில் காமெடில உங்களுக்கு பிடிச்சது எது? 

செந்தில் பெட்ருமாஸ் லைட் மேன்டலை புடுங்கி ஓடின பிறகு வரும் பெண்ணிடம் கவுண்டர் கேட்கும் கேள்வி, பெட்ருமாஸ் லைட்டேதான் வேணுமா..........? [[படம் வைதேகி காத்திருந்தாள்]





பேட்டி:
! சிவகுமார் !
madrasbhavan.blogspot.com  
........................................................................................................................

விரைவில் இன்னொரு பிரபல பதிவருடன் அடுத்த பேட்டி
........................................................................................................................







Sunday, August 7, 2011

டிக்கிலோனா



                                                                   
தல(கவுண்டமணி): என்னடா இன்னிக்கி ஒரு பயலும் சலூன் பக்கம் வரல.  சன்டே கூட ஈ ஓட்டுற நெலம வந்துருச்சே..

செந்தில்: இப்பல்லாம் எவன் சித்தப்பு  முடி வெட்டறான். சேவல் கொண்டை தலை, ஸ்ப்ரிங் ரோல் தலைன்னு வச்சிக்கிட்டு அலையறானுங்க. வருசத்துக்கு ஒரு தரம் வெட்டுனாலே அதிசயம்..

தல: அதை ஆளவந்தான் மண்டைய வச்சிக்கிட்டு நீ சொல்லாதடா. சரி..சரி.. பேப்பரை எடுத்து நம்ம பலைஞர் கண்டனக்கூட்டம் நடத்துன மேட்டர படி. 

செந்தில்: பூண்டு கலைமாணனை கைது செய்ததை எதிர்த்து பலைஞர் தலை... மையில்..

தல: தலை..மையா..அவரு எப்படா டை அடிச்சாரு?

செந்தில்: தலைக்கும் மைக்கும் நடுவுல நாக்கு ரோலிங் ஆயிருச்சி சித்தப்பு.

தல: மவனே ரோடு போட்ற ரோலர் மாதிரி இருந்துகிட்டு லவுட்டா விட்ற? மேல படிடா.  

செந்தில்: அவரு என்ன சொன்னாருன்னு முழுசா படிக்கறேன். கேளுங்க.  "ஜெயா அரசு போட்டது பொய் வழக்கு". 

தல: மொதல்ல நீ பல்ல வெளக்கு. அந்த பக்கம் திரும்பிப்படி. அது என்ன "ஜெயா" அரசு? செல்லமா கூப்புடற அளவுக்கு டெவெலப் ஆயிட்டாங்களா? 

செந்தில்: "ஒரு கலைமாணனை கைது செய்தால் ஓராயிரம் கலைமாணர்கள் முளைப்பார்கள் என எச்சரிக்கிறேன்"

தல: பார்ரா 

செந்தில்: "தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது"

தல: மறுபடியும் பார்ரா.

செந்தில்: "இங்கே இருக்கும் பத்திரிக்கையாளர்கள் ஜெயா சொத்து குவிப்பு வழக்கை பற்றி எழுதுவதே இல்லை. எங்கள் கட்சி பற்றி மட்டும் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள்"

தல: அதானே. ராஸ்கோல்ஸ். ஜெயா அரசை பத்தி பலைஞர் டி.வி. மட்டுமே எத்தனை தரம் தனித்தவில் வாசிக்கும். ஊதுங்கடா ஒத்து! அப்பதான் நீங்க ஒர்த்து.

செந்தில்: "கோர்ட்டில் அம்மையாருக்கு 130 முறை வாய்தா தந்துள்ளனர். இதற்கு காரணம் அவர் உயர்சாதியை சேர்ந்தவர் என்பதால்தான்".

தல: என்னடா மெயின் மேட்டருக்கு வரலியேன்னு பாத்தேன். அது என்னடா ஜாதில உயர்ஜாதி, உயராத ஜாதி. நானும் நாப்பது வருசமா இந்த இம்சைய கேட்டுக்கிட்டு இருக்கேன்.

செந்தில்: அது எனக்கு தெரியும். உயர்ஜாதில இருக்குற எல்லாரும் கொஞ்சம் ஒசரமா இருப்பாங்க சித்தப்பு. 

தல: மவனே சாமி சிலைன்னு கூட பாக்க மாட்டேன். எடுத்து மண்டைய ஒடச்சிருவேன். மீதிய படிடா. 

செந்தில்: "தமிழக மக்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. காலையில் எந்த போலீஸ் அதிகாரி நம்மை எழுப்புவாரோ என்று பயந்து போய் உள்ளனர்"

தல: அப்டியா? போன ஆட்சி நடந்தப்ப கரண்ட் கட்ல கொசு அடிச்சதுக்கும், கொறட்டை விட்டு கொன்ன உன்னை அப்புனதுக்கும் இப்ப எவ்ளவோ பரவால்ல.  

செந்தில்: "வீரபூண்டி ஏறுமுகம் ஒரு வழக்கில் ரிலீஸ் ஆனால் மறு வழக்கில் கைது செய்யப்படுகிறார்"

தல: உப்பு தின்னா தண்ணி குடி. தப்பு செஞ்ச தலைல அடி. சும்மாவா சொன்னாங்க நம்ம தாத்தன்ஸ்!!

செந்தில்: "இப்படி அநியாயம் நடக்கிறதே. இது என்ன நாடா? இல்லை கரும்புலி வாழும் காடா? இப்படி இருந்தால் நாட்டில் அமைதி இருக்குமா?"

தல: நாடா. காடா. வாடா. போடா. முடியல...என்ன இருந்தாலும் போன ஆட்சில தமிழ்நாடு அமைதிப்பூங்காவா இருந்துச்சி. ஆனா இந்த மேடம் அந்த பூங்காவை எங்கயோ ஒளிச்சி வச்சிட்டாங்க. பேட் மம்மி. 

செந்தில்: அண்ணே. பெட்டிச்செய்தி செம காமடியா இருக்கு. யாரோ ஒரு முன்னாள் மந்திரி போன தரம் ஏகப்பட்ட நிலத்தை லவட்டும்போது அவசரத்துல தெரியாம தன்னோட சொந்த நிலத்தையே ஆப் ரேட்டுக்கு மிரட்டி வாங்கிட்டாராம்.  

தல: ஹா...ஹா..சூப்பர் அப்பு. நல்ல வேளை நம்ம வாடகைக்கு கடை வச்சிருக்கோம். அது போகட்டும். ஏழாம் அறிவு சூட்டிங் முடிஞ்சுருச்சாம். சூர்யாவுக்கு போன் போட்டு வரச்சொல்லு. இப்ப அவருக்கு இருக்குற முடிய வெட்டுனாலே ஒரு மாசத்துக்கு வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கிடலாம்!!

.....................................................................

Posted by:

! சிவகுமார் !

.....................................................................



Saturday, August 6, 2011

Rise of the Planet of the Apes



                                                                 
தல(கவுண்டமணி): டேய் தகப்பா..நில்றா. ராத்திரி 12 மணி ஆச்சி. எங்கடா சைட் அடிச்சிட்டு வர்ற இடி அமீன் மண்டையா..   

செந்தில்:  பையர். நான் சைட் அடிக்க போகல. நம்ம ஊர் கொட்டாய்ல புதுசா வந்த 'ரைஸ் ஆப் தி பிளானெட் ஆப் தி ஏப்ஸ்' இங்க்லீஷ் படம் நைட் ஷோ பாத்துட்டு வர்றேன் பையர். 

தல: என்னது ரைஸ், ப்ளேட், ஏப்பமா? முக்குல இருக்குற முனியாண்டி விலாஸ்ல புல் கட்டு கட்டிட்டு வந்து அதை இங்கிலீஷ்ல சொன்னா எனக்கு தெரியாதாடா தேன்கூடு தலையா...

செந்தில்: நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க மகர்.  அதுக்கு பேரு Rise of the Planet of the Apes ஆக்கும். 

தல: முதியோர் கல்வி டீச்சரோட நீ சுத்துறப்பவே நெனச்சேன். அப்படி என்னடா அந்த படத்துல இருக்கு. சொல்லுடா எங்கம்மா புருஷா..

செந்தில்: ஜுராசிக் பார்க், காட்டு ஜில்லா(Godzillaa) மாதிரி எல்லாருக்கும் புடிக்கற மாதிரி ரொம்ப நாள் கழிச்சி ஒரு படம் வந்துருக்கு. சிம்பன்சி கொரங்குங்களை வச்சி கதை சொல்லி இருக்காங்க. விஞ்ஞானி ஒருத்தர் 'சிம்பன்சி'ங்களுக்கு மனுஷன மாதிரி யோசிக்கற அளவுக்கு ஒரு மருந்து கண்டு புடிக்க முயற்சி செய்றாரு. அந்த லேப்ல அட்டகாசம் செய்ற ஒரு கொரங்கை சுட்டுடுறாங்க. அதோட புள்ளைதான்தான் படத்தோட ஹீரோ. அதை கொஞ்ச நாள் விஞ்ஞானி வீட்ல வளக்கறாரு. அங்க அது பண்ற லொள்ளால குரங்கு ஜெயில்ல அடைக்கறாங்க. அங்க மத்த கொரங்குங்களோட சேந்துகிட்டு புரட்சி செய்றாரு ஹீரோ. மத்ததை எல்லாம் தியேட்டர்ல போயி பாருங்க.

தல: அதை ஏண்டா தியேட்டர்ல போயி பாத்துக்கிட்டு. அதான் தினம் 24 மணிநேரமும் உன்ன பாக்கறனே. அது போதாதா. தூங்கும்போது மட்டும் கொஞ்சம் வித்யாசமா கரடி கக்கூஸ் போற மாதிரி சவுண்டு குடுக்கற..மத்தபடி உனக்கும் சிம்பான்சிக்கும் ஒரு வித்யாசமும் இல்லையேடா கேடி.  சாரி....... டாடி. 

                                                                 
செந்தில்: படத்துல செம சீன்லாம் இருக்கு. கேக்கறீங்களா மை சன்.

தல: இல்லன்னா மட்டும் விட்டுறவா போற. நம்ம பரம்பரைல மொத தரம் இங்கிலீஷ் படம் பாத்துருக்க. அடிச்சி விடு தண்டோராவை. 

செந்தில்: ஹீரோ கொரங்க பாத்து ஒரு நாய் கத்தும்போது அதுக்கு எதிர் சவுண்ட் விடுறது, வித விதமான முகபாவத்தை காட்டுறது, லீடர் மாதிரி கூட்டத்தை கூட்டுறது, க்ளைமாக்ஸ்ல அதகளம் பண்றதுன்னு வெளுத்து வாங்கி இருக்காரு குரங்கு வேஷம் போட்டு நடிச்ச ஆன்டி செர்கிஸ். 

                                                                     Andy Serkis     

தல: என்னாது உங்க ஆண்ட்டி சர்க்கஸ்ல இருந்தாங்களா?

செந்தில்: கிண்டல் பண்ணாதீங்க மை சன்! மிஸ்டர். டீச்சர் கூட படம் நல்லா இருந்ததுன்னு சொன்னாங்க.

தல: உலகம் பூரா  ஜூவுல வேலை செய்றவன் எல்லாம் 10, 15 கொரங்கோட நிம்மதியா இருக்கான். இந்த ஒத்த கொரங்க வச்சிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே.. அய்யய்யையோ! இப்ப முடிவா என்னதாண்டா சொல்ல வர்ற பிதாஜி.

செந்தில்: எல்லாரும் பாக்குற மாதிரி நல்ல ஒரு டைம்பாஸ் படத்தை தங்குருக்காங்க. கண்டிப்பா கொறஞ்சது 50 நாள் ஓடும்னு சொல்றேன்.

தல: ஆமா..ஏண்டா ராஸ்கோலு, படத்த நீ தமிழ்ல பாத்தியா இங்கிலீஷ்ல பாத்தியா?

செந்தில்: இங்க்லீஷ்லதான் பாத்தேன். அதே மொழில கீழ சப் டைட்டில் போட்டாங்க. தியேட்டர் புல்லா நல்ல கூட்டம். நீங்களும் போய் பாருங்க Son-in-Law.

தல: என்னது Son-in-Law வா?

செந்தில்: ஆமா. சட்டப்படி நீங்க என் சன் தான? அதான் Son-in-Law ன்னு சொன்னேன்.

தல: ஒத்த இங்கிலீஷ் படம் பாத்ததுக்கே இப்படி சொத்த மாதிரி பேசறானே. இவன் இன்னும் ஒரு படம் பாத்தா ஸ்பீல்பெர்க் எல்லாம் பீல் பண்ணி ஜெர்க் ஆய்டுவாங்க போல இருக்கே. 

                                                             Director: Rupert Wyatt

செந்தில்:  அத விடுங்க புதல்வர். படம் நல்லா இருக்கு. அதுக்கப்புறம் உங்க இஷ்டம்.
            
தல: அப்டீங்கற? எனக்கென்னவோ உன் பரம்பரை புகழை உலகமே தெரிஞ்சிக்க இந்தப்படத்த பாக்க சொல்றியோன்னு மைல்டா ஒரு டவுட்டு வருது. இருந்தாலும் நாளைக்கு காலைல ஒரு சேஞ்சுக்கு வெளிநாட்டு சிம்பன்சி மூஞ்சில முழிச்சி பாக்கறேன். ஆனா மகனே...சாரி அப்பனே.. படம் பாத்துட்டு வர்றதுக்குள்ள நீ டீச்சர் வீட்டுக்குள்ள நொலஞ்ச..உன்ன பொலி போட்டுருவேன் படுவா. பேசிக்கிட்டு இருக்கும்போது எங்க போயி தொலஞ்சான். டேய் ஆப்ரிக்கா கொரங்கே..தென்ன மரத்துல என்னடா பண்ற.

செந்தில்: பேரிக்கா பறிக்க போனங்க...

தல: தென்ன மரத்துல ஏதுடா பேரிக்கா? பக்கத்துக்கு வீட்டு பொண்ணு குளிக்கரத எட்டி பாக்க மரத்துல தவ்வி இருக்கியா கம்முனாட்டி பையா. மரியாதையா எறங்கிடு.

கவுண்டமணி கல்லை எடுத்து வீச, அடுத்த மரத்துக்கு பாய்கிறார் தகப்பர் செந்தில்!


Rise of the Planet of the Apes -  பாருங்கங்கோ. 




.....................................................................

Posted by:

! சிவகுமார் !

(nanbendaa.blogspot.com)
...................................................................

Thursday, August 4, 2011

தமிழக பட்ஜெட் 2011


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வாசலில் தேங்காய் கடை வைத்திருக்கும் தல கவுண்டமணி அவருடைய அசிஸ்டன்ட் செந்திலிடம்  இன்று போடப்பட்ட தமிழக  பட்ஜெட்டை அலசுகிறார்  வெளுக்கிறார். 

                                                               
செந்தில்:  Finance Minister O.Panneer reads out 2011-12 tamilnadu budjet.....

தல(கவுண்டமணி): டேய்...

செந்தில்:  Mono rail works to begin soon.....

தல: டேய்.. டண்டணக்கா.. நிறுத்துடா. இவரு பெரிய லண்டன் லபக்குதாசு. இங்க்லீஸ் பேப்பர்தான் படிப்பாரு. அந்த ஓசி பேப்பர ஓரமா வச்சிட்டு தமிழ் பேப்பர்ல பட்ஜெட் பத்தி என்ன போட்டுருக்குன்னு படிடா.

செந்தில்: அண்ணே. சூப்பர் பட்ஜட்னே இது. மேலும் 106 கோயில்ல அன்னதானம் போடுறாங்களாம். ப்ரீ ஆடு, மாடு வழங்க ஏகப்பட்ட கோடி, நெல்லை மற்றும் ஒரத்த நாடுல மாட்டு ஆஸ்பத்திரி துவங்கப்படும். 

தல: ஆஹா..உன் பரம்பரைக்குன்னே ஸ்பெஷலா போட்ட மினி பட்ஜெட் மாதிரி இருக்கே.

செந்தில்: சும்மா இருங்கண்ணே. அரசு கேபிள் டி.வி. விரைவில் தொடங்கப்படும். அது யாருன்னே அரசு? 

தல: அடேய் அடிபம்ப் தலையா. அரசு யாருன்னு தெரியாதா? திருமலை படத்துல மொட்ட மாடில நம்ம விசய் அண்ணன் "யார்டா இங்க அரசு, யார்டா இங்க அரசு, நீ அரசா.. நீ அரசா.."அப்டின்னு நாக்குல நொறை தள்ள அலறுவாறே அவர்தாண்டா அந்த அரசு. இப்ப கேபிள் பிசினஸ் ஆரம்பிச்சி இருக்காரு. 

செந்தில்: ஓஹோ..படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு ஸ்கர்ட்டுக்கு பதில் சல்வார் கமீஸ் வழங்கப்படும். கிராமப்புற பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படும். இலங்கை அகதிகளுக்கு 25 கோடி ஒதுக்கீடு.

தல: அதுதாண்டா மேடம். கண்டிப்பா பாராட்டனும். 

செந்தில்: அண்ணா பிறந்த நாள் முதல் இலவச விஸ்கி வழங்கப்படும். அட. இன்னிக்கிதான் எங்க அண்ணன் பிறந்த நாளு. நான் போய் விஸ்கி வாங்கிட்டு வந்துடறேன் அண்ணே. 

தல: நில்றா டேய். அடிச்சன்னா தல தண்டவாளத்துல போய் விழும். மவனே அது இலவச மிக்சிடா. என்ன சொன்ன? உங்க அண்ணன் பிறந்தநாளா? பன்னாட நாயே. பேரறிஞர் அண்ணா பிறந்தா நாள்டா அது. 

                                                                  
செந்தில்: ஐ ஆம் வெரி சொரி(sorry)ண்ணே. கண்ணு ஸ்லிப் ஆயிருச்சி.   இது அஞ்சி பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பட்ஜெட் என முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி கருத்து.

தல: எப்ப ஆளுங்கட்சி பட்ஜெட் போட்டாலும் இதே டயலாக்தானா? ரீலு அந்து போச்சி. மொதல்ல இந்த தமிழ்நாட்டு அரசியல்வாதி, நடிகனுங்க பேருக்கு முன்னாடி அடைமொழி வைக்கிறதுக்கு ஆப்பு வக்கணும். இவனுங்க இம்சை தாங்க முடியலடா. 

செந்தில்: அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் மின்வெட்டு முற்றிலும் சரி செய்யப்படும். இன்னும் ஒரு வருஷம் நமக்கு சோதனையா..அய்யய்ய!!

தல: நீயே நரி மோந்த சோதனைக்குழாய்ல பொறந்தவன். அதப்பத்தி நான்தாண்டா கவலைப்படணும். இன்னும் ஒரு வருசத்துக்கு கரண்ட் இல்லாம இருட்ல உன் தூங்கும்போது உன் மூஞ்ச பாக்கணுமே.. அட கர்த்தரே!! பட்ஜெட் தாக்கல் செய்றதுக்கு முன்னாடி கைல அம்மா படம் போட்ட பெட்டியை வச்சிக்கிட்டு மேடம் பின்னால பன்னீர் அன்னம் பவ்யமா வந்த காட்சி இருக்கே. பம்மல் திலகம்டா அவரு. 

                                                                    
செந்தில்: சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இலவச, வேஷ்டி சேலை வழங்க நிதி ஒதுக்கப்படும். 

தல: ஏற்கனவே சட்டசபைல சண்டை போட்டு எத்தனையோ வேஷ்டி கிழிஞ்சிருக்கு. அவங்களுக்கு கண்டிப்பா இலவச வேஷ்டி தேவைதான். என்னாது நேரடி ஒளிபரப்பா?  (வேஷ்டி) கிழிஞ்சது போ. எம்.எல்.ஏ. எல்லாம் கோவம் வந்தா  சட்ட, வேஷ்டிய கிழிச்சிகிட்டு நிப்பாங்களே.  ரம்பா மாதிரி தொடைய காமிச்சிக்கிட்டு சண்டை போடுவாங்களே..அதை வேற பாக்கணுமா? 

செந்தில்: வெளிமாநில அரிசி கடத்தல் தடுக்கப்படும், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க 912 கோடி ஒதுக்கப்படும். 

தல: அப்படியே உள்மாநிலத்து ஹோட்டல்ல இலவ அரிசிய கடத்தி இட்லி, தோசை போடுறவங்களுக்கு சவுக்கடி குடுத்தா நல்லா இருக்கும். லேப்டாப் வேற வரப்போகுதா. அந்த புள்ளைங்கள பெத்தவங்க  ப்ளாக்கரா இருந்தா அவ்வளவுதான். ரெண்டே மாசத்துல ஓவர்டைம் வொர்க் பண்ணி அதை ரிப்பேர் ஆக்காம விட மாட்டாங்க. இவங்கள திருத்தவே முடியாது. சரி சரி.. நேத்து நம்ம thengai-to-shangai.blogspot.com சைட்ல எழுதுனதுக்கு தமிழ்மணத்துல எத்தனை ஓட்டு விழுந்துருக்கு பாரு. 

செந்தில்: ஆறு ஓட்டுண்ணே..

தல: ஓ மை ட்ரிப்ளிகேன் பார்த்தசாரதி கடவுளே.  what a pity. ஒரு ஓட்டு கொறையுதே. டேய். நம்ம கோயில் வாசல்ல உண்டைகட்டி வாங்க க்யூல நிக்குறார் பாரு. அவரும் பிளாக்கர்தான். இந்தா இளநீர் வெட்ற அருவா. இதை அப்படியே அவரு கழுத்துல வச்சி பக்கத்துல இருக்கற பிரவ்சிங் சென்டருக்கு  கூட்டிட்டு போயி தமிழ்மணத்துல ஏழாவது ஓட்டு போட வைய்யி. ரொம்ப ரவுசு பண்ணா அவர் கழுத்துல ஏழு வெட்டு போடு. விடாதே!

....................................................................
Posted by:

! சிவகுமார் !

....................................................................