Sunday, March 20, 2011

டிக்கிலோனா - 4
















                                                             
.................................................................


வடிவேலு 'ரெண்டு அம்பது' ரீமிக்ஸ்:
(நகைச்சுவைக்கு மட்டும்)

பைகோ: மேடம் அந்த 21....

மேடம்:  இருய்யா தர்றேன். எல்லாருக்கும் சில்லறை தர வேண்டாம். 

சிறிது நேரம் கழித்து...

பைகோ: எல்லாருக்கும் தந்துட்டீங்க..என்னோட 21.....

மேடம்: ஏய்யா..நச்சு நச்சுங்கற. வைட் பண்ணு. 

பைகோ: அவங்க சில்லறைய மட்டும் கரெக்டா பிரிச்சிக்கறாங்க. நம்ம பங்க கேட்டா மட்டும் இப்படி கொந்தளிக்கராங்களே..சாமி.

மேடம்: யோவ் இந்தாங்க 60. பிரிச்சி எடுத்துட்டு அவர் பங்க குடுத்து அனுப்புங்க.

உதிரி அணிகள்: வாங்க பாஸ் உங்க பங்க வாங்கிட்டு போங்க. 

பைகோ: அப்பாட. நல்ல வேலை..ரோசப்பட்டு குடுத்துட்டாங்கய்யா.  இந்த அனத்து அனத்தலன்னா கெடைக்குமா...என்ன எல்லாரும் பங்க வாங்கிட்டு நேரா ஒயின் ஷாப்புக்கு போறானுங்க. பூனை வாலை விட்டுட்டு புலி வாலை புடிச்சதுக்கு ஆப்பு வக்க போறானுங்களா??

உதிரி 1: வாங்க சார். நாங்க உங்களுக்கு எவ்ளோ தரணும்?

பைகோ: இருவத்தி ஒண்ணுங்க.

உதிரி 2: எவ்ளோ சொன்னீங்க?

பைகோ:  இருவத்தி ஒண்ணுங்க

உதிரி 3: எவ்ளோ?

பைகோ:  இருவத்தி ஒண்ணுங்க.

உதிரி 1: எப்டி..எப்டி. நான் 21. அவன் 21. இவன் 21. மொத்தம் உங்களுக்கு 63 தரணுமா??

பைகோ: அய்யய்யோ.. அப்படி இல்லீங்க?

உதிரிகள் கோரஸாக: அப்படித்தான். எல்லாரும் சேந்து அடிங்கடா. சியர்ஸ்!  
..........................................................


இந்நூற்றாண்டின் இணையற்ற பாடல் வரிகள்:       
உபயம்: சிம்பு.

சில வரிகள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளது. முக்கியமான வரிகள் மட்டும் உங்கள் பரவசத்திற்கு:

உன்ன பாத்தா பஸ்ட் செகண்ட்ல என்ன காணும். 
தேடிப்பாக்குறேன் கண்டபடி நானும். 
சத்தியமா எனக்கு நீ வேணாம். கண்டிப்பா எனக்கு நான் வேணும்.
ஒன்ன என்ன கண்டுபுடிச்சி கொடு. இல்ல ரொம்ப சிம்பிள். உன்ன எனக்கு குடு.
இல்ல தயவு செய்து ஒரு கன் எடுத்து என்ன சுடு.

எவண்டி உன்ன பெத்தான்.பெத்தான். பெத்தான். பெத்தான்.
கைல கெடச்சா செத்தான். செத்தான். செத்தான். செத்தான்.

என் பேஸ்புக் ஸ்டேட்டசும் நீதான். என் ட்விட்டர் ட்வீட்டிங்கும் நீதான்.
என் ஸ்கைப் காலும் நீதான். என் ஐ போன், ஐ பேட் எல்லாம் நீதான். நீதான்.
என் ஐ ட்யூன் ப்ளே லிஸ்ட் நீதான். அதில் லவ் சாங்கும் நீதான். 
அதில் ப்ளே ஆகுற ஸ்பீக்கர் நீதான். என் அப்பாவும் நீதான். அம்மாவும் நீதான்.
என் சொத்து சோகம் எல்லாமே நீதான். என் கடவுளும் நீதான். என் உயிரும் நீதான். எனக்கு எல்லாமே நீதான். நீதான்.

எவண்டி உன்ன பெத்தான்.பெத்தான். பெத்தான். பெத்தான்.
கைல கெடச்சா செத்தான். செத்தான். செத்தான். செத்தான்.

உன் பேஸ்ட் பிரஸ்ஸும் நாந்தான். உன் ஷவர் ஜெல்லும் நாந்தான். 
உன் மானம் காக்கிற மேலாடை நாந்தான். உன் அழகு கூட்ற மேக்கப் நாந்தான்.
உன் டெட்டி பேர் நாந்தான். உன் பெட் அண்ட் பில்லோ நாந்தான்.

உன் வீட்டோட நைட் வாட்ச்மேன் நாந்தான். உன் நகமும் சதையும் நாந்தான்.
உன் அலும்பும் நரம்பும் நாந்தான். உனக்கு எல்லாமே நாந்தான். நாந்தான்.

எவண்டி உன்ன பெத்தான்.பெத்தான். பெத்தான். பெத்தான்.
கைல கெடச்சா செத்தான். செத்தான். செத்தான். செத்தான்.

...................................................

என் முன்னேற்றத்துக்கு ஸ்டெப்..நீ. ஸ்டெப் நீ..
(சாம் ஆண்டர்சனா..கொக்கா)                                                          




.......................................................

posted by:
! சிவகுமார் !




                                                                      

Sunday, March 13, 2011

டிக்கிலோனா - 3







நாங்கள் உங்க வீட்டு பிள்ளை. இது ஊர் அறிந்த உண்மை!

                                                                

.................................................................                                                                   
                                                                   
மாற்றம் ஒன்றுதான் மாறதாது. அதுக்காக இப்படியா?


மார்ச் 14 -  8.45 AM

                                                             

மார்ச் 14 -  8.47 AM

                                                             
                                                       
                                                            
மார்ச் 14 -  8.50 AM


                                                             

மார்ச் 14 -  8.59 AM


                                                       
.................................................

டேய்..டேய்..செகப்பு சட்ட:


கோடான கோடி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த காணொளி வெளியிடப்படுகிறது. உணர்ச்சிவசப்பட்டு எங்கள் மன்றத்துக்கு நேரில் வந்து கண்ணீர் மல்க நன்றி சொல்ல வேண்டாம் என உங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் எங்கள் கடமையைத்தான் செய்திருக்கிறோம். 

என்சாய் மாப்ளே: 




காணொளி மக்கர் செய்தால் எஸ்கேப் ஆக வேண்டாம். கீழே உள்ள இணைப்பை அமுக்குங்கோ:

.................................................


வலை வீச்சு:

ஒருத்தன சுத்தி இத்தன பேரா.. இதெல்லாம் ரொம்ப 'ஓவர்' டா!


                                                              
...........................................................


அறை எண் 310 இல் மங்குனி?

சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பில் ஒரு சில டாப் பதிவர்கள் என்னிடம் கேட்ட கேள்வி "யாருப்பா இந்த மங்குனி அமைச்சர்? சென்னை ஆளுன்னு மட்டும் தெரியுது. மத்தபடி விவரம் தெரியலையே? உங்களுக்கு தெரியுமா? " அப்டின்னு கேட்டாங்க. நானும் "தெரியல சார்"னு சொல்லிட்டு மத்த நண்பர்கள் கிட்ட கேட்டா அவங்களுக்கும் தெரியல. இதே கேள்வியை புத்தக கண்காட்சி நடந்தப்ப கூட சிலர் கேட்டாங்க. இம்சை அரசே, எதிரி நாட்டு மன்னன் என்றோ போர் நிறுத்தம் அறிவித்து விட்டான். அரண்மனையின் எந்த இண்டு இடுக்கில் இருந்தாலும் சரி. பொங்கும் வேர்வை மழையை துடைத்து விட்டு வெளியே வரவும். இல்லாவிடில் சிரிப்பு போலீஸ் தங்களை உடனடியாக கைது செய்ய கிளம்புவார் என்று எச்சரிக்கிறோம்!


                                                                
...........................................


நான் அவன் இல்லை. நான் அவன் இல்லை. நான் அவன் இல்லை!!!


என்னாது...... நான் ரேஸ்ல ஜெயிச்சதுக்கு "சிரிப்பு போலீஸ்" ரமேஷ் ட்ரீட் கேக்க வர்றாரா? என் ரெண்டு காலும் நாலு கிலோ மீட்டருக்கு அங்குட்டு கெடக்கு. இருந்தாலும் பரவா இல்ல. கைல காசு இல்லை. நான் எஸ்கேப்.........!!!

                                  

குதிரையின் ஓட்டத்தை காண படத்தை அமுக்குங்கோ!                                     
 ..............................................................


Posted By:

! சிவகுமார் !




Sunday, March 6, 2011

டிக்கிலோனா





 யார் போலி? யார் போலீஸ்?


                                                                 

                                                  

                                                     
                                                    
    
                                                          

                                                                                                                              
                                                      
 ......................................

குறளின் குரல்:

இளைஞனே, உனக்கு மனசாட்சி இருக்கிறதா. தந்தை பணத்தை திருடி பல விந்தை செயல் புரிகிறாய். திரை அரங்கு, டாஸ்மாக், கடற்கரை இன்னும் பல இடங்களில் பொழுதை வீண் அடிக்கிறாய். எத்தனை ஆசிரியர் உனக்கு வழி காட்டினாலும் அவர்களை விழி பிதுங்க வைக்கிறாய். இனி பொறுப்பதில்லை. இதோ பொங்கும் வெள்ளமாக உன் உள்ளத்தில் நான் தங்கும் நேரம் வந்துவிட்டது. 

வள்ளுவன் குரலை கேட்டு வாழாதது உன் கெட்ட நேரம். வல்லவன் தந்தை குரலை இனி நீ கேட்கப்போவது உன் நல்ல(!!!) நேரம். என் மொத்த அறிவுரையையும் கேளு. அதுக்கப்புறம் நீதான் நம்பர் ஒன் ஆளு.

  


கேட்டு முடிச்சிட்டீங்களா? காதுக்குள்ள குருவி சத்தம் சும்மா 'கொய்யுன்னு'
கேக்குமே. அதை சரி செய்ய கீழே உள்ள பாடலை கேளுங்கள். 'சுத்தமாக' சரி ஆயிடும்!

முழு பரவசத்தை அனுபவிக்க ஹை வால்யூமில் வைத்து கேட்கவும். 







                                                                            
.......................................................

கவுண்டரின் ஈகை குணம்:


                                                                      

பிரபல குணச்சித்திர நடிகர் பீலி சிவம், தனது இனிய நண்பர் கவுண்டமணி பற்றி ஒரு முறை அளித்த பேட்டி:

"நாங்கள் இருவரும் சிறு வயதில் நாடகங்களில் நடித்து வந்த காலம் அது.  கவுண்டமணி என் உயிர் நண்பன். ஒரு நாள் இரவு, வீதியில் நடந்து கொண்டு இருந்தோம். இருவரும் அன்று சாப்பிடவில்லை. எனக்கு கடும் பசியாக உள்ளதென அவனிடம் கூறினேன். இருவரிடமும் பணம் இல்லை. கவுண்டமணி என்னிடம் 'சிறிது நேரம் பொறுத்திரு. இதோ வருகிறேன்' என்று சொல்லிவிட்டு சென்றான். ஒரு சில மணி நேரம் கழித்து கையில் பரோட்டா பொட்டலத்துடன் வந்தான். அதை என் கையில் தந்து விட்டு சாப்பிட சொன்னான்.  'உன்னிடம் தான் பணம் இல்லையே? எப்படி வாங்கினாய்?' என்று கேட்டேன். அவன் பதில் சொல்லவில்லை. நான் தொடர்ந்து வற்புறுத்தி கேட்டதும் அவன் சொன்ன பதில் "அருகில் உள்ள ரத்த வங்கிக்கு சென்று என் ரத்தத்தை தானம் செய்து கிடைத்த பணத்தில் வாங்கினேன்" என்றான். என் கண்கள் கலங்கி விட்டன. நண்பன் பசிக்காக தன் ரத்தத்தை விற்று உணவு தந்த அவனை என் வாழ்நாளில் எப்படி மறப்பேன்". 


                                                            

நட்புக்கு உதாரணமாய் திகழும் தலைவர் கவுண்டமணி அவர்கள் வாழ்க பல்லாண்டு!

.........................................................


 posted by:
 !சிவகுமார்!


                                                



Friday, March 4, 2011

"பிரபல பதிவர்" கவுண்டமணியின் சர்ச்சைக்குரிய பதிவு..

                                                      dated :-5/03/01.time:-9.30 am


                                                    தமிழ்மணம் +1/ -1,80,387

                       
                                         நிலா ..வச்சுக்கோ  பலா..!!

நிலா..நிலா..ஓடிவா..!!
நில்லாமல் ஓடிவா!!
மலை மேல ஏறிவா..
மல்லிகபூ கொண்டுவா..!!!
 

posted by :- கவுண்டமணி      
label:- பொனைவு,காவிய கவிஜ,நடிகைநிலா..          
                              
            
இன்டிலி  1 vote                          
                                      தமிழ்மணம் +1/ -1,80,387 votes

கும்மி/பம்மியவர்கள் -> -> ->99,524 மக்காஸ் ...

பின்னூட்டங்கள்  :-
-----------------------------

1. செந்தில் said  ..

  அண்ணே..வடை எனக்கே...!!

2 .மன்னன் said ....

 கதம்...கதம்...:)

3 . கவுண்டமணி said....

@செந்தில்//அண்ணே..வடை எனக்கே...!!//

வாடா..போண்டா மண்டையா...! அந்த வாழப்பழத்தயும் அமுக்கிட்டு இப்ப
வடையுமா..பொழச்சுட்டு போ நாயே..!!

@மன்னன் 

வாங்க சூப்பர் ஸ்டார்...முதல் வருகைக்கு நன்றி...ஆனா ஒண்ணுமே கம்மென்ட் போடாமல் போறிங்களே..

4 .மன்னன் said   ....

@ கவுண்டமணி 
நான் ஒரு கம்மென்ட் போட்டால் 100 கம்மென்ட் போட்டமாதிரி..இது எப்புடி இருக்கு..ஹா...ஹா..ஹா...

101 . செந்தில் said  ....


அட ஜாலி...அண்ணே அப்போ இந்த கம்மென்ட் 101

102 . கோவை சரளா said ...

என்னைய அந்த ப்லாக் ல தொடர்பதிவு எழுத கூப்டாக..வேற ப்லாக் ல கும்மியடிக்க கூப்டாக...என் கெரகம்..இங்க வந்து கம்மென்ட் போட வேண்டிருக்கு...

103 . கவுண்டமணி said  ....


வாம்மா வா ...இதையும் சேர்த்து சொல்லவேண்டியது தானே ..தமிழ்மணத்தில் எழுத கூப்டாக..வலைச்சரத்தில் எழுத கூப்டாகனு...பதிவர்களே...இந்தம்
மா சொல்றதெல்லாம் கலர் கலர் பொய்யி..சுதாரிச்சுக்கோங்க...

.....................


.....................
9,875. நமிதா said  ....

மச்சான்!! நீ பொயட்ரீ நல்லா சொல்லுது...

9,876.  chitra said......

:-)

9,995. ஆனந்தி.. said  ...

:)))))))


9,997. வுண்டமணி said ....

@ chitra  :-))

@ஆனந்தி.. :)))))))))))))))))))))))))))))
))))))

10,000 .   பத்தாயிரம் வட வாங்கி said ....

ஹேய்...வட வட...எனக்கு தான்...

..............................
........................................
..............................
........................................



.................

..................
68,879. ராகவன் from நியூஜெர்சி  said.....

அதாவது...அந்த நிலா,பலாவை கொடுக்கும் போது உணர்வுகளின் நித்திரையில் இருந்து வேறு சில கலா, உலா வந்து யாப்பெழுத மாட்டாளா..?? அபிராமி..அபிராமி....

68,880 . கவுண்டமணி said ....

@ ராகவன் from நியூஜெர்சி
?!!!)???!!!! ...

76,987. கரகாட்டகாரன் said ...

நடிப்ப விட்டு ஓடிவந்து..அண்ணே!
பதிவு கிதிவு போடாதிங்க....
விட்டுறுங்கன்னே..இது வேணாமுன்னே..
மக்களு எல்லாம் ஒங்கள  நம்பி....!!!


76,985 . கவுண்டமணி said  ....
@கரகாட்டகாரன்  
தேங்க்ஸ் மில்க்கி மேன் !! பாலு கறக்க போலியா இன்னும் நீ ?? 


82,976. திருப்பாச்சி கோவிந்தன் said ...

பாலு...பட்டாசு பாலு...

82,978.  சாலமன் பாப்பையா said ....

அருமைய்ய்யா அருமை..

82,979. major சுந்தராஜன் said ...
well said man..!! அருமையா  சொன்னிங்க !
...........................
...........................

90,001. ஓட்ட வட நாராயணன் said  ....
வடை போச்சே....

91,876. சிலம்பரசன்@சிம்பு  said ....
எனக்கு நடிக்க தெரியாதுங்க...இப்ப கூட மைனஸ் வோட்டு தான் போட்டேன் உங்களுக்கு..எனக்கு பொய் சொல்ல தெரியாதுங்க...

91,877. கவுண்டமணி said ......

@சிலம்பரசன்@சிம்பு
//எனக்கு நடிக்க தெரியாதுங்க//
ha ha..அதான் ஒலகத்துக்கே தெரியுமே...

.........................

.........................


96,043. Prime minister Manmohan singh said....
कवुंडा मणि जी..!! अरुमै..अरुमै !! 


97,576 . கவுண்டமணி said  ....

@Prime minister Manmohan singh
ननरी जी..:)

98,650. மிஷ்கின்  said  ....

하루속히 적용할것을 요구 《〈고교무상화〉에서의 조선학교배제를 반대하는 련락회》 성원들을 비롯한 일본시민과 동포들이 2월 28일 내각부와...


98,767. கவுண்டமணி said ....

@ மிஷ்கின் 
?!????

98,768. செந்தில் said  ..
@ கவுண்டமணி

அண்ணே...மிஷ்கின் கொரியா மொழியில நல்லா இருக்குனு சொல்றாரு...
99,334 . ஆடு சிக்கிருச்சு said  ...

டேய்..நீ நிலாவின் அடிவருடி...பதிவு போடுற பாரு..பதிவு...வெளங்கல...

99,335. செந்தில் said ...
@கவுண்டமணி  அண்ணே...சூப்பர் ஆடு சிக்கிருச்சு....இன்னைக்கு கெடாவெட்டிர வேண்டிறது தான்...:)))


99,336. கவுண்டமணி  said ...

கவனிச்சேன்டா கோகனட் மண்டையா...மாசி போகட்டும் பங்குனில வெட்டிறலாம்...:))))


99,337. J.Jeyalalitha said...
அண்ணா நாமம் வாழ்க...It's nice yaar!!

99,338. கவுண்டமணி said ..

thanks mummy...:))


99,339. Obama said...

Nice Blogging man....

99,340. வெட்கம் கெட்டவன் said  ...
அண்ணே...பிச்சு ஒதறிட்டிங்கன்னே...நறுக்குன்னு நாலு ஓட்டு குத்திட்டோம்ல...
அண்ணே...நம்ம பக்கமும்கொஞ்சம் எட்டி பாக்குறது ...
www. கூழைக்கும்பிடு.ப்லாக்ஸ்பாட்.காம்

........................
........................


99,341. சி.பி.செந்தில்குமார்  said....
பாஸ்..!! சூப்பர் அட்ராக்சன் டைட்டில்..!! இன்டிலி ல கொறஞ்சது 90 வோட்டு வரலாம்...தமிழ்10 ல 150 வோட்டு விழுகும்...தமிழ்மணத்தில் இந்த வாரம் நீங்க தான் நம்பர் 1 . அடுத்து 18 + போஸ்ட் போடுங்க தலைவா !!...


99,342. கவுண்டமணி said ...

@சி.பி.செந்தில்குமார்  வாங்க தல...ஹீ...ஹீ....ரொம்ப நன்றி தல....

...................
...................

99,523. செந்தில் said ....
@கவுண்டமணி...ஐயோ..அண்ணே...எல்லாம் போச்சு...தமிழ்மணத்தில் பாருங்க...1,80,387 மைனஸ் வோடடுண்ணே...இந்த பதிவு செம பலாப் போல...

99,524,  கவுண்டமணி said ..

@ செந்தில்.....அட பரதேசி...அப்போ நீ கூட மைனஸ் வோடடு தான் போட்டியா?? டேய்..இதுல ஒரு தொழில் ரகசியம் பாரு...எனக்கு வந்த மைனஸ் வோடடு எல்லாமே எனக்கு வந்த ஹிட்ஸ் டா...ஹா...ஹா...சூப்பர் ஹிட்ட்டு டா  மாங்கா பயலே !! ஹிட்டு..ஹிட்டு...ஸ்டார்ட் மியூசிக்.......

Wednesday, March 2, 2011

அஞ்சாசிங்கத்தின் காட்டு தர்பார் - பழைய தளபதி பஜய்



இன்று நம்ம  பஞ்சாயத்து மேடையை சுற்றி கூட்டம் அதிகம் . மேடையை மறைத்து கொண்டு மனித தலைகள் எக்கச்சக்கமாக இருக்க
உள்ளே நுழைகிறார் நம் தலைவர் கவுண்டர் அவருடன் செந்திலும் .

கவுண்டமணி :- டேய் அரவேக்காட்டு மண்டையா எவனடா இன்னைக்கி பிடிச்சிட்டு வந்திருக்கானுங்க இவளோ கூட்டம் இருக்கு ?

செந்தில் :- அது யாரோ பழைய தளபதி பஜய்யாம் பக்கத்துல ஏதோ சூட்டிங் வந்திருக்காப்புல நம்மளும் தீர்ப்பு சொல்லி ரொம்ப நாள் ஆய்டுச்சா .அதான் நம்ம ஆளுங்கள விட்டு பிடிச்சுட்டு வர சொன்னேன் .

கவுண்டமணி :- அட வறுமைக்கு பொறந்தவனே சும்மா போறவன் வர்றவன் எல்லாம் இப்படி பிடிச்சுட்டு வந்து தீர்ப்பு சொல்லுன்னா ஜனங்க நம்மள பத்தி என்ன நெனைப்பாங்க போ போயி அவங்கள பத்தி விட்டுட்டு வா .

செந்தில் :- அண்ணே அவங்க தப்பு பண்ணிருக்காங்க நம்ம கோவிந்தன் சொன்னான் அவன் தான் பஞ்சாயத்த கூட்ட சொன்னான் சும்மா வாங்கணே என்னன்னு விசாரிப்போம் .

அனைவரும் விலகி வழி விட அங்கே  பழைய தளபதி பஜய் தோளுக்கு குறுக்கே கைகளை போட்டுகொண்டு லேசாக குத்தவைத்த நிலையில் பின்புறத்தை ஆட்டி கொண்டு நிற்கிறார் .

கவுண்டமணி :- நாயே நடை பாதையில் உக்காறதே கொஞ்சம் நகந்து உக்காரு .........
டேய் கோழியூர் கோவிந்தா என்னடா பிரச்சனை இப்படி பெரிய மனுசங்கள எல்லாம் பிடிச்சிட்டு வந்துருக்கே ?

கோழியூர் கோவிந்தன் :- அண்ணே நான் சிவனேன்னு நம்ம ஊரு கண்மாயில மீன் பிடிச்சிக்கிட்டு இருந்தேன் .
அப்போ இவரு காருல வந்து என்னை தைரியமா இலங்கைக்கு போய் மீன் பிடின்னு சொல்றாருனே . நான் செத்துட்டா இவரு பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் தந்தி குடுப்பாராம் . அதுனால நான் இலங்கைக்கு போய் மீன் பிடிக்கணுமாம் .

கவுண்டமணி :-டேய் எல்லாம் தள்ளி வந்துருங்க கடிச்சி  வச்சிர போறான் . தம்பி உன் அமைப்பே சரி இல்லையே டேய்  நிமிர்ந்து  நில்லு தோளில் இருந்து கைய எடு  படுவா பிச்சி புடுவேன் பிச்சி..........

பழைய தளபதி பஜய் :- ...ன்னா ........நான் என்னங்கணா அப்படி தப்பு பண்ணீட்டேன் எங்க நைனா சொல்லி குடுத்தத சொன்னேன் இது ஒரு தப்புகளானா............ இலங்கை காரன் நம்ம தமிழ் மீனவர்களை கொல்றாங்க அதனால நீ எங்கே  மீனவர்களை பார்த்தாலும் போய் ஆறுதல் சொல்லு அப்பதான் நீ முதலமைச்சர் ஆக முடியும் நானும் துணை முதல்வர் ஆகணும்ன்னு எங்க நைனா சொன்னாருங்கனா ..இவரு மீன் பிடிச்சிக்கிட்டு இருந்தாரு அதான் இவருக்கிட்ட சொன்னேன் ....

 கவுண்டமணி :-  டேய் அது கடல்ல மீன் பிடிக்கிறவங்க கிட்ட போய் சொல்லணும் இப்படி கண்மாய்ல மீன் பிடிக்கிறவன் கக்கூசுக்கு போறவன் கிட்ட எல்லாம் போய் சொல்ல கூடாது இதெல்லாம் உங்கப்பன் உனக்கு சரியா சொல்லி தரலையா ?

பழைய தளபதி பஜய் :- அப்படீங்கலானா அப்போ இவங்கள எல்லாம் இலங்கை காரங்க சுட மாட்டாங்களா ?

கவுண்டமணி :- ஏன் உங்க அப்பன் கிட்ட சொல்லி அதுக்கும்  ஏற்பாடு பண்ணேன் . சரி இவளோ அறிவு கொழுந்தா இருக்கியே நீ முதலமைச்சர் ஆகி என்னை பண்ண போறே சொல்லு ............

பழைய தளபதி பஜய் :- அது எல்லாம் எங்க நைனாக்கு தானுங்கண்ணா தெரியும் நான் திரிஷா கூட சூட்டிங் போவேன் .அப்புறம் என் ரசிக பசங்களுக்கு எல்லாம் என் படம் போட்ட டீசர்ட் குடுப்பேன் . எல்லா தியேட்டர்லயும் என் படத்தை ஓட வைப்பேன் .
வேற எதுவும் செய்யனுங்கலானா ...........?

கவுண்டமணி :- நீ ஒன்னும் செய்ய வேண்டாம் இதுவே போதும் நாடே நமச்சல் எடுத்து போய்டும்........... எப்பா இந்த கொசுவ அடிச்சி துரத்துங்கடா முழுசா இன்னும் நடிக்கவே கத்துக்கல அதுக்குள்ள முதலமைச்சர் ஆகணுமாம் புளியான்கொட்டை .......
இன்னொரு முறை உன்னை இங்க பார்த்தேன் ..... அப்படியே உன்னை இலங்கைக்கு பார்சல் பண்ணிடுவேன் ஜாக்கிரதை ....
டேய் சிலிண்டர் மண்டையா இவனை நம்ம ஊரு எல்லை வரைக்கும் பத்தி விட்டுட்டு வா ........
இனிமேல் என்னை இந்த மாதிரி வெந்தது வேகாதது அரைவேக்காடுகளுக்கு எல்லாம் பஞ்சாயத்து பண்ண கூப்புடாதீங்கடா ..
நான் கெளம்புறேன் ............





posted by அஞ்சாசிங்கம்