Saturday, December 24, 2011

ஈரோடு பதிவர் சந்திப்பு - ஜாலி பட்டாசுகள் பார்ட் 2


உணவு, சந்திப்பு, உயரிய கொள்கை: 

ஞாயிறு காலை உணவருந்த, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு விரைந்தோம். சீனா ஐயா, தருமி, ப.கந்தசாமி போன்ற சீனியர்கள் அங்கு ஆஜர். ஷர்புதீன், வீடு சுரேஷ், தமிழ் பேரன்ட்ஸ் சம்பத், தமிழ்வாசி பிரகாஷ், யுவகிருஷ்ணா மற்றும் பிற நண்பர்களை சந்தித்தேன். நாய் நக்ஸ் ஒரு இட்லியை கையில் எடுத்து முன்னும் பின்னும் சில நொடிகள் திருப்பி பார்த்தார். ஏனோ தெரியவில்லை. பிறகு அனைவரும் வெளியே வருகையில் ஆறடி உயரத்தில் ஜிம் பாடியுடன் ஒருவர் வந்தார். நெற்றியில் விபூதி குங்குமம். அட நம்ம சிபி!! மொத்தமாக நிகழ்ச்சி நடந்த ஹாலுக்கு நுழைந்தோம்.

                               ஈசன்(பிரபா), சங்கவி, மோகன் சார், ஆரூர் முனா, கேஆர்பி                   

போட்டோ குறிப்பு:
ஈசன் இடுப்பளவை சரிபார்க்கும் சங்கவி, ஈசன் நீள்முடி கண்டு பொருமும் கேஆர்பி.

கடைசி வரிசையில் பிரபல பதிவர்களுக்கு தனிஇடம் ஒதுக்கி இருந்தனர். சிபி அங்கே போய் அமர்ந்து கொண்டார். நக்கீரன், தமிழ்வாசி பிரகாஷ் ஆகியோர் 'ஹல்லோ இங்க வாங்க' என்று அதட்ட என் அருகே அமர்ந்தார் சிபி. 'நீங்க நம்ம ஆளு. இங்க உக்காருங்க. கலகலப்போம்' என்றோம். திடுதிப்பென கேமரா ஷூட்டை ஆரம்பித்தார் தமிழ்வாசி. 'என்ன போட்டோ எடுத்தா, அதை நாலு நாளைக்கு பாத்து விடாம சிரிப்பீங்க. வேண்டாம்' என்றாலும் மனிதர் அசரவில்லை. வேறுவழியில்லை என்றதும், சிபியிடம் இருந்த கூலரை இரவல் கேட்டு போஸ் குடுத்தேன். என்னைப்பார் யோகம் வரும்!! 

                                         ஈசன் (எ) பிரபாகரன், டாக் லிக்ஸ் நக்கீரன், நான்.  

பொதிகை டிவி செய்தி வாசிப்பாளரை கண்டதும் கேமராவுடன் பறந்தார் சிபி. அப்போது நக்கீரர் அடித்த கமன்ட்: 'உக்காந்திருந்த கில்மா எந்திரிச்சி போகுது'. அடிக்கடி சிபி போயும்,வந்தும் கொண்டிருந்தார். நாங்கள் வேறு டாபிக் பேசினாலும் 'என்னைத்தானே கிண்டல் பண்ணீங்க' என்று கேட்டார். முதல்ல டாக்டரை பாருங்க தல. நக்ஸை பார்த்து கேஆர்பி "இத வச்சி சீக்கிரம் பதிவு போட ஆரம்பிங்க". நக்ஸ் "பதிவு போட்டுட்டுதான் ஈரோடே வந்தேன்". கிறுகிறுத்தார் கேஆர்பி. நக்ஸ் அண்ணனிடம் கஸாலி போனில் பேசிக்கொண்டே பதிவு போட்டார். ''நக்கீரரே, நீங்க பேசுவதை லைவ்வாக போஸ்ட் போடுகிறார் கஸாலி'' என்றதும் கதிகலங்கி பார்த்தார் நக்ஸ். ரோகினி சிவா மற்றும் சிலரை பார்த்தோம்(சிலர் பெயர் மிஸ் ஆகி இருந்தால் மன்னிக்க).

                             மீல்ஸ் அடிக்கும் 'சென்னை செல்லம்' ஆரூர் முனா செந்தில்              

சிபியின் ஜிம் பாடி கண்டு சற்று ஜெர்க் ஆனேன். "சார். ஜிம்முக்கு போவீங்களா? உங்கள பத்தி யார்னா தப்பா எதுனா சொன்னா/எழுதுனா கோச்சிப்பீங்களா?". சிபி "டெய்லி ஒடம்ப முறுக்கேத்துவேன். என்ன திட்டுனாலும் டென்ஷன் ஆவ மாட்டேன்" என்றார் ட்ரேட்மார்க் சிரிப்புடன். வெட்டியாக நேரத்தை வீணாக்க விரும்பாமல் நான், தமிழ்வாசி, நக்கீரர் இணைந்து கொள்கைத்தீர்மானம் நிறைவேற்ற ஆரம்பித்தோம். மினி ஜடா முடியுடன் பிரபாகரன் திரிந்து கொண்டிருந்தார். என்ன கொள்கை? இந்த பதிவர் சந்திப்பு குறித்து எத்தனை பதிவு போடலாம்? வேறன்ன. "அடுத்த ஊரில் பதிவர் சந்திப்பு நடக்கும் வரை ஈரோடு சந்திப்பு பற்றிய பதிவுகளை போட்டுக்கொண்டே இருக்கலாம்", "ஈரோடு தொடர்பதிவு போடலாம்", "முதல் 24 பதிவுகளில் ஊரைவிட்டு ஈரோடு வந்தது குறித்து பதிவிடலாம். வெள்ளிவிழாப்பதிவில்தான்  நாம் சந்தித்ததை பதிவிட ஆரம்பிக்க வேண்டும்", "வேண்டாம். ஈரோடு பதிவர் சந்திப்பு எனும் பெயரில் தனியாக ஒரு வலைப்பூ ஆரம்பித்து அதில் 365 பதிவுகள் போடலாம்" என சமூக அக்கறை நிறைந்த, உன்னதை ஐடியாக்களை அள்ளி வீசினர்.  

நக்ஸ் அண்ணன் மொபைலில் மனோ 'சாட்'டடித்தார். நான் என்று சிபியையும், அவரென்று என்னையும் நக்கல் அடித்தார். எப்படிண்ணே  இப்படி?

                                                        சிறப்பு உறுப்பு தள்ளுபடி 


சீமான் ரசிகர் படை, ங்கொய்யா:  
  
சந்திப்பு ஒருவழியாக முடிந்து எல்லாருக்கும் டாட்டா காட்டிவிட்டு ஈரோடு ரயில் சந்திப்பை அடைந்தோம். வாசலில் மேலே இருந்த விளம்பரத்தை பார்த்ததும் அசந்தே போனோம். தள்ளுபடி விலையில் சிகிச்சை பெற தள்ளாதபடி ஓடுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம். இரவு உணவு சாப்பிட வெளியே வந்தபோது "தம்பி(கேஆர்பி) இந்த காரை தள்ளுங்க. ப்ளீஸ்" என  காரில் இருந்து வயதான அம்மா குரல் தந்தார். சீமானின் ரத்தவெறி ரசிகர் படை காரை தள்ள ஆரம்பித்தது. கார்  தள்ளாமல் இந்த சரித்திர காட்சியை  படம் பிடித்த பிலாசபி, உனக்கு இருக்குய்யா ஒரு நாளைக்கி!

                                   'ஆ..தள்ளு தள்ளு தள்ளு' - நான், ஆ.மு.செ, கேஆர்பி

'லேசா லேசா' என சிக்னல் காட்டி டாஸ்மாக் செல்ல பர்மிஷன்/நிபந்தனை  கேட்டனர்/போட்டனர் மூவர். அவர்களுடன் சோமபான கடைக்கு சென்றேன். . பத்தாவது இறுதித்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களைப்போல் படு சீரியசாக பெஞ்சுகளில் குத்த வைத்தவாறு ஆலோசனை செய்து கொண்டு இருந்தனர் ஈரோட்டு வாசிகள். பெரியார் இருந்திருந்தால் பிரம்பாலேயே பின் பக்கம் பழுக்க அவர்களை கிளப்பி பட்டையை கிளப்பி இருப்பார். வாழ்க சனநாயகம்.

நமக்கு வழக்கம்போல பெப்புசி. சரக்கு பாட்டில் கழுத்தை ஆரூர் முனா ஒரே திருப்பில் நெறித்து ஓப்பன் செய்ததை கண்டு மலைத்தோம். "சைட் டிஷ் என்ன இருக்கு?" என பிலாசபி வினவ "ங்கொய்யா" என்றார் டாஸ்மாக் அண்ணன். முடியை சிலுப்பியவாறு "கொய்யாவா?" என கத்தினார் பிரபா. இதற்கு முன் இருவருக்கும் ஏதோ சண்டை போல என எண்ணினோம். தாகசாந்தி செய்த மூவருடன் வெளியே நடக்க ஆரம்பித்தபோது டாஸ்மாக் கிச்சனை அந்நியன் முடியை ஒதுக்கிவிட்டு எட்டிப்பார்த்தார் பிலாசபி. அங்கே ஆரஞ்சு மற்றும் கொய்யா பழங்களை கண்டதும்தான் அவருக்கு விஷயமே புரிந்தது. இல்லாவிடில் அவருக்கு வந்த கோவத்திற்கு டாஸ்மாக் அண்ணனை செவுலில் அறைவது போல் கற்பனை செய்து கொண்டு சுவரேறி குடித்து ஓடி இருப்பார்!!

அளவுக்கு மீறி தண்ணி அடித்த நான்
                            
ஈரோடு போகையில்தான் அரக்க பறக்க ரயிலை பிடித்தோம் என்றால் திரும்பி செல்லும்போதும் அதே போல ஓட வேண்டிய நிலை. தமிழ் சினிமா க்ளைமாக்ஸ் தோத்தது போங்க. இம்முறையும் டிக்கட் பிரச்னையால் தனி கோச்சில் ஆரூர் முனா வர வேண்டிய கட்டாயம். தம்மாதூண்டு வயதில் கடைசியாக ஊருக்கு ரயிலேறிய பிறகு ஈரோடு பதிவர் சந்திப்புதான் என்னை மீண்டும் ரயிலேற்றியது. தூங்கும் முன் ஜன்னலருகே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மொடக்கென்று நீர் குடித்தேன். 'ரயிலில் இலவசமாக தண்ணீர் தருவது நல்ல விஷயம்' என்றதற்கு பிரபகாரன் 'யோவ். அது கீழ் பெர்த்ல இருக்குற ஆளோட தண்ணியா. மொத்தத்தையும் காலி பண்ணிட்டோம். விடிஞ்சா சிக்குனோம்' என்று அலாரம் அடித்தார்.

விடியும் வரை அந்த திகில் வேறு. சென்னை வந்ததும் எல்லாரும் இறங்க ஆரம்பிக்கையில் 'தண்ணீர் பாட்டில் ஓனர்' மட்டும் செவ்வாய் கிரகத்திற்கு சென்று கொண்டிருந்தார். சும்மா இல்லாமல் இந்த பிலாசபி அவரை எழுப்பி 'ஹல்லோ..சென்னை வந்துடிச்சி' என்றார். அதற்கு கேஆர்பி சொன்னது  ''சென்னை வரலை. நாம்தான் சென்னைக்கு வந்தோம்''.  எங்க அந்த நபர் தூக்கம் தெளிஞ்சி ''எவன்டா கடைசி சொட்டு வரை விடாம உள்நாக்கால என் தண்ணிய நக்குனது" என்று வெறி ஆவாரோ எனும் அச்சத்தில் பிளிறிய என் நிலையை புரிந்து கொள்ளாமல் இருவரும் டமாசு செய்ததை மறக்கவே முடியாது.

என்றும் மனதில் நிற்கும் இனிய தருணங்கள். பதிவர் சந்திப்பை தவற விட்ட மக்களே, அடுத்த முறை இணையுங்கள். சந்தோஷங்கள் பல காத்திருக்கும். விரைவில் சென்னை புத்தகக்கண்காட்சியில் சந்திப்போம். பக்கம் பக்கமாக  பல்லாயிரம் பதிவுகளை  தேத்துவோம்!! ஓம்!!!


வாழ்த்துகள்.
கவுண்டமணி - செந்தில் ரசிகர் மன்றம் 
....................................................................................
                   
Posted by:
! சிவகுமார் !
                                                                    
                                           

Tuesday, December 20, 2011

ஈரோடு பதிவர் சந்திப்பு - ஜாலி பட்டாசுகள்!


சிக்கு புக்கு: 

சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோடு செல்லவிருந்த ட்ரெயினை கடைசி நொடியில் ஓடிப்போய் பிடிக்க வேண்டி இருந்தது. கேஆர்பி, 'வீடு திரும்பல்' மோகன்குமார் சார்(முதல் சந்திப்பு), ஆரூர் முனா செந்தில், ரமேஷ்(இவரும் ப்ளாக்கராம், கேஆர்பி தம்பி. செம ரவுசு பார்ட்டி) மற்றும் 'ஈசன்' ஜெராக்ஸ் பிலாசபி பிரபாகரன் என அனைவரும் ஏக் ட்ரெயினுக்குள் ஏறினோம். ப்ரோபைல் போட்டோவில் டெர்ரராக இருந்த ஆ.மு.செ நேரில் மீசை, தாடி எடுத்துவிட்டு 'அந்தக் கொழந்தையே நாந்தான்' ரேஞ்சில் இருந்தார். அதனால் அவரை மட்டும் மழலைகள் சிறப்பு கோச்சில் தனியாக அமர வைக்க வேண்டிய கட்டாயம்.   

                                      படு  பவ்யமாக மோகன்குமார் சார்(டி ஷர்ட்)  

சைக்கிளில் போனால் கூட ஜன்னல் ஓர சீட்டில்தான் அமருவேன் என்று வம்பு செய்யும் எனக்கு இம்முறை அந்த வாய்ப்பு இல்லை. அதை ஏற்கனவே புக் செய்தவர், இடையில் ஏறி (அதாவது 'கொஞ்ச தூரம் தாண்டியதும்'. உங்க புத்தி எங்க போகும்னு தெரியும்) 'அதெல்லாம் முடியாது. ஜன்னல் ஓரத்லதான் 'சிட்'டுவேன்' என்று எனக்கு முதல் ஆப்பு வைத்தார். பக்கத்தில் இருந்த யூத், பெரியவர் மற்றும் சில நடுத்தர வயது பெண்களிடம் மூன்றும் கலந்த கேஆர்பி நாத்திக வசியம் செய்துகொண்டிருந்தார். அவர் எது சொன்னாலும் அதற்கு மினி நாத்திகர் பிராபகரன் 'ஆமா. கரக்ட்' என்று கோரஸ் பாடினார். அவர்களுக்கு பின் சீட்டில் மூன்று இளம் பெண்கள். எந்திரித்து நின்றவாறு இறைநம்பிக்கை சரிதான் என அவருக்கு எதிர்வாதம் செய்ய ஆரம்பித்தேன். நான் ஏதோ சைட் அடிக்கத்தான் நின்று கொண்டு பேசுகிறேன் என அந்த மூன்று பெண்களும் முதலில் தவறாக பார்த்தனர். பேட் கேர்ல்ஸ். ஹவ் டேர்!!

மோகன்குமார் சாரிடம் பதிவுலக மேட்டர்கள் குறித்து பேசுகையில் 'போதும் பொத்து. இந்த பிஸ்கெட்டை வாய்ல அமுக்கு' என குட் டே பிஸ்கெட்டை வாங்கித்தந்தார். ட்ரெயின் ஈரோட்டை நெருங்க ஆ.மு.செந்திலுக்கு சி.பி.செந்தில்(எத்தன செந்தில்டா...செந்திலாண்டவா!!)  கால் கடுக்க நின்று கொண்டு காலுக்கு மேல் காலடித்தார். 'வந்துட்டோம். வந்துட்டோம்' என்று ஆ.மு.செ அல்வா தந்து கொண்டே இருந்தார். வெறியான சிபி யாரையும் பார்க்காமல் சென்னிமலைக்கு மலையேறி விட்டார்(நாலு எக்ஸ்ட்ரா பதிவு அவுட்டு). 

ரூமும், ரூம்பாயும்: 
                                                                       
                                          பரிசு பெறும் எங்கள் சிங்கம் கேஆர்பி   

இரவு ரூமில் நால்வர் தங்க 'உற்சாக' ட்வின்ஸ் பிலாசபி மற்றும் ஆ.மு.செ. இருவருக்கும் தனி ரூம் தந்துவிட்டோம். காலை எழுகையில் பிலாசபி மீது   ஆ.மு.செ. உருண்டு நசுக்கி இருப்பாரோ என்ற திகில் வேறு எனக்கு. இரவு கவிதை வீதி சவுந்தர் போன் அடித்தார். 'உங்களுக்கு ராத்திரி ஒரு மணிக்கு போன் பண்ணி தூங்கவிடாம செய்வேன்' என்றார். 'அது நடக்க வாய்ப்பில்லை. நான் தூங்குறதே காலை 3 மணிக்குதான்' என்றேன். தலைவர் காலை 3 மணிக்கும் போன் செய்தார். அப்படி என்னதான் சார் பண்ணீங்க தூங்காம? காலை எழுந்ததும் தம்மாதூண்டு டம்ளரில் நாலு சொட்டு காப்பியை இட்டுவிட்டு நாங்கள் குடித்த பின் 'இது பில்டர் காப்பி சார். ஈச் கப் ஜஸ்ட் 15 ஓவாய் மட்டுமே' என்று கேஆர்பியின் பி.பி.யை எகிற வைத்தார் ரூம் பாய்(பாய்க்கு வயசு 50 இருக்கும்).

'வம்ப வெலைக்கு வாங்குவோம்ல' மணிவண்ணன்(மதுரை) ஊரிலிருந்து வந்து சேர்ந்தார் எங்கள் ரூமுக்கு. என்னைப்பார்த்ததும் பதற்றத்துடன் அவர் சொன்ன முதல் வசனம் "தெரியாம பிலாசபி, ஆ.மு.செ.  ரூமுக்கு போய்ட்டேங்க. கதவை தெறந்ததும் அப்படி ஒரு நறுமணம். அங்கனயே மயங்கி விழுந்துட்டேன். ரூம் பாய்(!) வந்து மூஞ்சில ப்ளீச் ப்ளீச்னு சோடா அடிச்சி என்னை எழுப்புனாரு. இங்கன ஒடியாந்துட்டேன்' என்றார். பிறகு ரிஷப்சனில் அனைவரும் அமர்கையில் பிரபல பதிவர்கள்/ஓட்டுனர்கள்(பஸ்ஸர்ஸ்) வந்த வண்ணம் இருந்தனர். ப்ரோபைல் போட்டோவில் இருப்பவர்கள் நேரில் வேற லுக்கில் இருந்தனர். ராமமூர்த்தி கோபி சாரை எனக்கு அறிமுகம் செய்தார் மோகன்குமார் சார். யாரென்று அடையாளம் தெரியாமல் முதலில் குழம்பி பிறகு தெளிந்து வணக்கம் போட்டேன். உண்மையான உண்மைத்தமிழன், தனசேகர், வெள்ளுடை வேந்தர் விந்தைமனிதன் உள்ளிட்ட பலரை ரிஷப்ஷனில் சந்தித்தேன்.   

வாசலில் நின்ற எல்லாரையும் தெருவில் நின்று கொண்டு போட்டோ எடுத்தார் தனசேகர் சார். போட்டோ செஷன் முடிந்து அனைவரும் பதிவர் சந்திப்பு நடக்கும் இடத்திற்கு கிளம்ப போகையில் கோபத்தில் கத்தினார் தனசேகர் "*&@#$ என்னை போட்டோ எடுங்கடா'' என்றார். அந்த வார்த்தையை கேட்டபிறகுதான் 'அட இது நம்ம ஜாக்கி' என 100% கன்பர்ம் ஆனது எனக்கு. 
.....................................................................................

ஜிம்பாய் சிபி, ஜாலி தமிழ்வாசி, லொள்ளு நக்கீரன்(நாய் நக்ஸ்), வழக்கம்போல் பல்ப் வாங்கிய நாஞ்சில் மனோ  மற்றும் இனிய நண்பர்கள்...விழா அரங்கில் நடந்த சரவெடி சம்பவங்கள்.

பார்ட் - 2 தொடர்ந்தே தீரும்(தீருமா?!).    
.....................................................................................

..................................
Posted by:
.................................