Thursday, April 18, 2013

ஒட்டக பால்ல டீ போட்றா




                                                           


இந்தியன் ஏர்லைன்ஸ் புட்போர்ட் ட்ராவல் கொடுமை முடிந்து கச கச சென்னை  வெயிலில் கால் பதிக்கிறார் கானா புகழ் அப்து அண்ணன்: 

அப்து: போதும் நிப்பாட்டுய்யா வண்டிய. (சலிப்புடன்) ஏர் ஹோஸ்டசை மாத்துங்கடான்னா கேக்கறானுங்களா....  

தமிழ்நாட்டு பார்டரை தாண்டாத லோக்கல் பதிவர் அண்ணனை வரவேற்கிறார். 

லோக்கல் பதிவர்: ஏன் மச்சா.. கானா போயிட்டு வந்தீங்களே..எனக்கு ஒரு ஜீன்ஸ்  வாங்கிட்டு வரக்கூடாதா..
 
அப்து: இந்த மாதிரி கலர் ஜீன்ஸ் எல்லாம் போடறதுக்கு ஒனக்கு ஒரு தகுதி வேணும்டா. கருவாப்பயலே. ஏன்டா எவ்வளவு நாளைக்கிதான்டா மாசக்கூலி, ப்ளஸ்ஸு, ஃபேஸ் புக்னு திரியப்போறீங்க? என்ன மாதிரி நியூயார்க், கானா போனமா, ஜர்னலிசம் படிச்சி ISD புகழ் வாங்குனமா, சென்ட் அடிச்சமா, செட்டில் ஆனமான்னு இல்லாம...இன்னு உங்கப்ப ஈசாக்கு மாதிரியே திரியறியேடா..

லோ.ப : மச்சா...முன்ன விட நீரு இப்ப ரொம்ப ஜில்ல்ல்லுனு இருக்கீரு...

அப்து: மாப்ள நா மட்டுமாடா ஜில்லுனு இருக்கேன். கானாவே ஜில்லுனு தான்டா கெடக்கு. ஏன்டா மாப்ள. கானா மலைப்பாம்ப பாத்து இருக்கியாடா நீயி?

லோ.ப : நா எங்க பாத்தேன். நீருதான் சரவணா ஸ்டோர்ஸ் போயிட்டு வர்ற மாதிரி பொசுக்கு பொசுக்குன்னு எல்லா நாட்டுக்கும் போயிட்டு வர்ரீறு...

அப்து:  அதுக்கெல்லாம் ஒரு யோகம் வேணுமடா. மாப்ள..அந்த ஊரு பாம்ப நான் உத்து பாத்ததும் என்ன கொத்த வந்துருச்சி..

லோ.ப : அப்படியா?

அப்து: பின்ன. விடுவனா நானு. கழுத்தா மட்டைல நாலு போட்டு  தோலுரிச்சி கட்டுன பெல்ட் தான்டா இது. இதெல்லாம் அனுபவிக்காம உள்ளூர்லயே சைக்கிள் தள்ளிட்டு திரியறயே...சனியனே...சனியனே...

லோ.ப : அப்ப என்னத்துக்கு நீரு திரும்ப இங்க வந்தீரு..

அப்து: டேய்....என்னடா பொசுக்குன்னு மரியாத இல்லாம பேசிப்புட்ட? ஏன்டா இங்க வந்து நாலு கட்சி தலைவருங்கள பாக்கனுமே, மண்ணை மாத்தனுமேன்னு பிரயாசப்பட்டு வந்தா....எடு செருப்ப ராஸ்கல்.

_______________________________________________

Thursday, April 4, 2013

அபி அப்பா - தி அமேசிங் உ.பி


                                                             

அபி அப்பா... வசீகர எழுத்து நடையால் பதிவுலகை ஒரு காலத்தில் கட்டிப்போட்ட சீனியர். தற்போது அரசியல் சாராத முகநூல் பதிவுகளில் தனது முத்திரையை பதித்து வருபவர். என்ன தி.மு.க.வை எதிர்த்து ஏதேனும் புள்ளை பூச்சிகள் துள்ளி குதித்தால் மட்டும் வழக்கத்திற்கு மாறாக அண்ணனின் டெம்பரேச்சர் எகிறோ எகிறென்று எகிறிவிடும். அக்கோவம் என்னதான் சீரியசாக இருந்தாலும் சில பல நேரங்களில் வாசகர்கள் சிரிப்பை அடக்க முடியாத நிலைக்கு சென்று விடுவது கண்கூடு. அவற்றில் ஒரு சில சாம்பிள்களை பார்க்கலாம் வாருங்கோள்.

பல மாதங்களுக்கு முன்பு 'ஈழத்தமிழர்களே..எங்கள் தலைவர்தான் புளியமரம். அவரை பிடித்து தொங்கிக்கொள்ளுங்கள். உங்களை காப்பாற்ற அவர் மட்டுமே உள்ளார்' என ஒரு பதிவு போட்டார். அதைக்கண்டு வெறியாகி இலங்கை, மலேசியா, உகாண்டா என பல்வேறு நாட்டு பதிவர்கள் அண்ணனுக்கு சிறப்பு கும்பாபிஷேகம் நடத்தியது பதிவுலகம் அறிந்தது.வெற்றிகொண்டான் டுடோரியல் காலேஜில் முதல் வகுப்பு மாணவர்களில் ஒருவராக இருப்பவரை இப்படி ரவுண்டு கட்டி திட்டியது தமிழக அரசியலில் நேர்ந்த மாபெரும் வரலாற்றுப்பிழை என்பதை திட்ட (மா)வட்டமாக தெரிவித்து கொள்கிறேன். (.முதல்வர் கரண்ட் தந்தால் அவரை 'மின்சார கன்னி' என்று அழைக்கலாம் என்று ஐடியா தந்த அண்ணன் வெ.கொ.டு. காலேஜில் டிஸ்டிங்சன் பெற வாழ்த்துகள்).  

நக்கீரனை தவிர அனைத்து பத்திரிக்கையும் டிஸ்யூ பேப்பர் ரகம்தான் என்பது கழக கண்மணிகளின் அசைக்க முடியா அவதானிப்பு. தற்போது ஜூனியர் விகடன் சர்வே கண்டு உக்கிரத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டார் அபி அப்பா. "யாரைக்கேட்டு அடுத்த தலைவர் ஸ்டாலின் என்று ஜூ.வி. சொல்கிறது? வெறும் 5,000 பேரிடம் சர்வே எடுத்தால் அதுதான் இறுதியானதா?" என்பது அண்ணனின் முதல் கேள்வி. 

"அதுக்கு பேருதான் சர்வே. ஏழரை கோடி பேரிடம் எடுத்தால் அதுக்கு பேரு ஆல்மோஸ்ட் எலெக்சன் தானுங்களே''ன்னு யாருய்யா அது கூட்டத்துல கத்துறது. படுவா.

"1300 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்காங்க. அவங்ககிட்ட சர்வே எடுங்க. அதுதான் சரி" என்பது அண்ணனின் அதிரடி டிப்ஸ். 

"தங்கத்தளபதி ஸ்டாலின், அவருக்கு அடுத்து 'வெள்ளி வென்றாள்' குஷ்பு, மூன்றாவதாக 'வெண்கல கிண்ணம் கொண்டான்' அழகிரி இதுதான் ஜு.வி. சர்வே ரிசல்ட். ஒருவேளை பொதுக்குழு சர்வே முடிவில் குஷ்புதான் அடுத்த தலைவி என்று அறிவிப்பு வந்தால் அதை அப்படியே செயல்படுத்துமா கட்சி" என்று மாங்காய், தேங்காய் மடையர்கள் கேட்க வாய்ப்புண்டு. ஆண்டாண்டு காலமாக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கை காட்டும் நபரை மட்டுமே தலைவராக தேர்ந்து எடுக்கும் ஜனநாயக நாகரீகம் தெரிந்த கழகத்தை பார்த்து சில அரை ட்ரவுசர்கள் அப்படித்தான் பேசும். யூ கண்டினியூ அண்ணே.

                                                           


"டெ'ஷோ' மாநாட்டிற்கு போற எங்க ஆளுங்க முகத்த பாருய்யா. போராட்டம்னு சொன்னா பொண்ணு பாக்க போற மாதிரி குஷியா போற ஒரே கோஷ்டி அது எங்க கோஷ்டிதான்" என்று சில வாரங்களுக்கு முன்பு புளகாங்கிதம் அடைந்தார் எங்கள் அண்ணா. 

ஆனால் அது பொறுக்காத சில புல்லுருவிகள் "அது கெடக்குது ஒருபக்கம். 200 பெரிய தலைங்க. குறிப்பா 40+ கட்சி தலைவர்களை கூப்பிட்டும் வெறும் 7 கட்சி தலைவர்கள்தான் டெல்லி மாநாட்டுக்கு வந்தாங்களாமே" என்று கொக்கரித்த கொடுமையை கண்டுதான் ஏப்ரல் மாதத்தில் கூட மழை அடிக்காமல் வெயில் பல்லைக்காட்டிக்கொண்டு அடிக்கிறது. எகத்தாளம் பேசுனவனை எல்லாம்  தூக்கி வெயில்ல போட. #$@^&&*".      

தலைவர் ரெஸ்ட் எடுக்கிற கேப்பை(GAP..வேற மீனிங் இல்லீங்ணா) யூஸ் பண்ணிக்கிட்டு "அசந்தா ஜோக் அடிக்கறது தலைவர் பாலிசி. அசராம ஜோக் அடிக்கறது இந்த அபி அப்பா பாலிசி"ன்னு பின்றீங்கோ போங்கோ. என்னதான் மாங்கு மாங்குன்னு பதிவு எழுதுனாலும் கட்சில இருக்குற (மாதிரி) பரபரப்பை க்ரியேட் பண்ணி இணையத்துல வலம் வர்ற சுகமே தனிதான். 'நட்ட நடு சென்டர் எஸ்கலேட்டர் முன்னணி சார்பா நாளைக்கி ஒரு போராட்டத்துல கலந்துக்க போறேன். அதுக்கு ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணீங்கன்னா உங்க புகழ ஊர் முழுக்க தமுக்கு அடிச்சி பரப்பிடுவேண்ணே....

அது வந்து....வந்து...

நீங்க ஆவேசமா போராட்டத்துல ஈடுபடும்போது வளச்சி வளச்சி போட்டோ எடுக்கறாரே அவரோட வெலாசம்....வெலாசம்!!
.............................................................................

அபி அப்பாவின் தீவிர ரசிகர் ஆரூர் முனா செந்தில் அவர்கள் மெகா சைஸ் ஊசியை எனக்கு பின்னால் சொருக உசேன் போல்ட் வேகத்தில் ஓடிவருவது வன்முறையின் உச்சம். மஞ்சள் துண்டை தலையில் போட்டு ஓடியவாறே இதை அறிவிக்கிறேன் ஆன்றோர் பெருமக்களே.

.........................
Posted by:
!சிவகுமார்! 
........................