Saturday, December 13, 2014

லிங்கா - நம்பலாமா ? நம்பப்படாதா ?

BEWARE OF NUDITY CONTENT...!

“யப்பா... லிங்கா படம் நல்லா இருக்கா இல்லையா ? பாக்கலாமா ? வேணாமா ? நம்பலாமா ? நம்பப்படாதா ? இது எனக்கு தெரிஞ்சாகணும்...”

“இதுக்கு ஏன்பா இத்தனை தடவை திரும்புற. இதுக்கு ரஜினி ஃபேன்சே தேவலை போலிருக்கே...”

“முருகேஷா... லிங்கா மொக்கை’ங்குறத சில அறிகுறிகள வச்சி கண்டுபிடிச்சிடலாம்...”

“எப்படி...?”

“தூ....ரத்துல இருக்குற நாட்டுலருந்து FDFS பார்த்து விமர்சனம் போடுறவங்க, வழவழ கொழகொழ’ன்னு எழுதி கடைசியா ரஜினிக்காக பார்க்கலாம்’ன்னு முடிச்சிருப்பாங்க.”

“யப்பா... நெஜமாலுமே இதே மாதிரி அங்க எழுதியிருக்காங்கப்பா...”

மணிமாறன் – ரஜினிக்காகவும் அந்த பிளாஷ்பேக்குக்காகவும் ஒரு தடவை பார்க்கலாம். (வேறென்ன... அப்படித்தான் முடிக்கணும்).

Filmibeat ஷங்கர் – ரஜினி படத்தைப் பொறுத்தவரை, அவரது ரசிகனுக்கு எதுவுமே குறையில்லை. அவர் ‘வந்தா மட்டும் போதும்தான்’. ஆனால் மற்றவர்களுக்கு...?

“நான் கேட்டேனா...?”

“இல்ல”

“அப்புறம், விமர்சனம் எழுதச் சொன்னா ரஜினி ரஜினி ரஜினி ரஜினி... ரஜினி ரஜினி ரஜினி ரஜினி’ன்னு இம்போசிஷன் எழுதியிருப்பாங்க...”

“யப்பா... இந்த மாதிரியும் அங்க எழுதியிருக்காங்கப்பா...”

ஆரூர் மூனா – லிங்காவைப் பற்றி வேறென்ன சொல்ல. ரஜினி ரஜினி ரஜினி மட்டும்தான் படமே.

செங்கோவி – பாஸிடிவ் பாயிண்ட்ஸ்: சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார்

“நான் கேட்டேனா...?”

“இல்ல”

“கதே மட்டும் கேக்கணும்... நோ க்ராஸ் கொஸ்டின்ஸ்... கேட்டா ? என்னதிது...?”

“லிங்கம்”

“பிச்சு எறிஞ்சிடுவேன்...”

“அவ்வ்வ்வ்வ்...”

“அப்புறம், ப்ர்ர்ர்ர்ர்...”

“என்னாது...?”

“ப்ர்ர்ர்ர்...”

“என்னா...து...?”

“வயித்தால போற சத்தம்...”

“கே.எஸ்.ரவிகுமாருக்கு வயித்தால போயிடுச்சு. அதனால தான் படம் சரியா எடுக்கல. ஏ.ஆர்.ரகுமான் பேக்குல கட்டி வந்ததால நின்னுக்கிட்டே மொக்கையா மியூசிக் போட்டிருக்காரு’ன்னெல்லாம் எழுதுவாங்க...”

“அய்யோ... வயித்தால போற சத்தமும் கேக்குதுப்பா...”

ArulSelvan - K.S. Ravikumar should be banned from taking tamil movies. After Barasuram, Linga is the worst BGM (even some songs) scored by Rehman.

AaVee Kovai - Lingaaaaaawww! யாருப்பா படத்தோட எடிட்டர் ?

“நான் கேட்டேனா...?”

“இல்ல”

“அப்படியே கொஞ்சம் கொஞ்சமா ஒன்னு ரெண்டு நாள்ல, நெகடிவ் ரிவ்யூஸா கெளம்பும்...”

“யப்பா... கெளம்பிருச்சுப்பா கெளம்பிருச்சுப்பா...”

“எங்க...?”

“அங்க”

AndichamyGA – பரமா... சாவு பயத்தை காமிச்சுட்டாய்ங்கடா... மூணு மணிநேரம் மூச்சுத் திணற திணற அடிச்சாய்ங்கடா...!!

SathishTamilselvan - Comparatively Baaba was better.. If this had been made without Rajini, may be by Vijay, it'd have been laughed at..

“நீ ஏன் விமர்சனத்தல்லாம் படிச்சிட்டு சிரிக்கிற...?”

“நான் சிரிக்கலைய்யா... ஊரே கைகொட்டி சிரிச்சிட்டிருக்குய்யா...”

Friday, May 16, 2014

பரோட்டா பாதி... சால்னா மீதி...! – 1

ஒரிஜினல்: சாத்தான் பாதி… கடவுள் மீதி – 1!

பரோட்டா சூரியின் காமெடியை ரசிக்காதவர்களே இல்லை. நானும் சூரி ரசிகன் தான். ஆனால், சூரியிடம் நான் காமெடியை மட்டும் ரசிக்கவில்லை. வேறு சில பண்புகளையும் ரசிக்கிறேன். முதல் விஷயம், அவருடைய பேச்சு. அவர் பேசும்போது சுமார் பத்தடி தூரத்திற்கு எச்சில் வந்து தெறிக்கும். அச்சமயத்தில் அவருக்கு முன்னால் சென்று அமர்ந்துகொண்டால் குற்றால அருவியில் குளித்தது போல இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் பலரும் இந்த நூதன குளியல் முறையை பின்பற்றுகின்றனர். 

கல்லூரி பருவத்தில் நான் பரோட்டாவுக்கு மாவு பிசைய ஆசைப்பட்டேன். ஒரு நாளில் குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் ஷகிலா படம் பார்க்க வேண்டும் என்றார் மாஸ்டர். விட்டுவிட்டேன். ஏனென்றால், நான் ஏற்கெனவே ஏழெட்டு மணி நேரம் என் படிப்புக்காகச் செலவிட்டுக் கொண்டிருந்தேன். நான் சொல்வது சரோஜா தேவி புத்தகங்கள். ஸ்க்ரூ டிரைவரை போல எழுத்தாளனாக வேண்டும் என்றால் உலக இலக்கியத்தையெல்லாம் படித்தாக வேண்டும் என்ற வெறி. பைத்தியத்தைப்போல் படித்தேன்.

சூரி அதே வார்த்தைகளைச் சொல்லுகிறார். ஐம்பது பரோட்டாக்களை ஒரே மூச்சில் சாப்பிட வேண்டும் என்றால் பரோட்டா மீது பைத்தியமாக இருக்க வேண்டும் என்கிறார்.

பரோட்டா சூரியை போலவே அடத்தூ பேசும்போதும் எச்சில் தெறிக்கும். அடத்தூ சூரியை விட நன்றாக தூறல் போடுவார் என்று வானிலை நிபுணர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அடத்தூவுக்கு சூரி அளவிற்கு தூரமாக துப்பும் மனோபலம் இல்லை. சாந்தியும், நித்யாவும் அவரை வேறு திசையில் இழுத்துக்கொண்டு விட்டார்கள். அந்த determination மனோபலத்தைப் பெறுவது மிகவும் சுலபம். காறி உமிழ்ந்தால் அது கைகூடும்.

சூரி வெண்ணிலா கபடிக்குழுவில் பரோட்டா சாப்பிடுவதற்கு முன்பு சால்னாவை கையில் மொண்டு குடிக்கிறார் அல்லவா ? அதற்கு அவர் சொன்ன விளக்கம்: நான் இப்படி இருப்பதற்கு இந்த பரோட்டாதான் காரணம். இது எனக்குக் கோவில் மாதிரி. ஆங்கிலத்தில் gravy என்பார்கள். அது மட்டும் இல்லையென்றால் பரோட்டாவை மொஜக் மொஜக் என்று சாப்பிட முடியாது. அப்படியானால் நம்முடைய வாழ்நாள் முழுவதும் நாம் சால்னாவை வணங்க வேண்டாமா ? சூரியிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அற்புதமான பண்பு இது. கிராமப்புறங்களில் குழம்பை அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன்பு ஒரு கை எடுத்து குடிப்பதை பார்த்திருக்கலாம். சாம்பாரை சட்னியோடு குழைத்து இட்லியில் பெனஞ்சு அடிக்கிறோம். அதற்கான மன்னிப்புக் கோருதலும் வணக்கமுமே அது.

ஆனால், இன்றைய தினம் இந்தியர்களாகிய நாம்தான் சால்னாவை அதிகம் அவமதிக்கிறோம். தமிழர்களுக்கே அதில் முதல் இடம். சால்னா செழிப்பாக இருக்க வேண்டுமென்றால் பரோட்டாவை அதிகம் சாப்பிட வேண்டும். ஆனால், நாமோ நான், குல்ச்சா என்று வட இந்திய டிபன் ஐட்டம்களை அடித்து நொறுக்குகிறோம். தம் வாழ்நாளில் பரோட்டாவே சாப்பிடாத ஆட்கள் பலர் தமிழகத்தில் இருக்கின்றனர். மேற்கத்திய நாடுகளுக்குச் செல்லும் நம்முடைய பார்வையில் படும் முதல் விஷயம் அங்குள்ள ஃபிகர்கள் தான். அங்குள்ள பார்ன் நடிகைகள் எல்லாம் தமக்கு அளிக்கப்படும் சொற்ப அளவிலான திரவ உணவினை வீணடிக்காமல் உட்கொள்வதை கவனித்திருக்கிறீர்களா ?

முன்பெல்லாம் முனியாண்டி விலாஸ்களுக்கு சென்றால் மாவு பிசைவதற்கு என்று ஒரு பெண்ணை வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் மாவை பிசைந்துவிட்டு கடப்பா கல்லில் போட்டு அடிக்கும்போது தொப் தொப் என்று ஒருவித சப்தம் வரும். அதை பார்க்கும்போது எனக்கு எனது தலையில் மசாஜ் செய்வது போல இருக்கும். நன்றாக தூக்கம் வரும். இப்பொழுதெல்லாம் கொழுப்பெடுத்த தடியன்களை வைத்து ஒரு பாடல் முடிவதற்குள் மாவு பிசைந்து முடித்துவிடுகிறார்கள். என் கல்லூரி பருவத்தில் அந்த பரோட்டா மாஸ்டர் சொன்னது எனக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது. ஆனால் ஷகிலா படங்களுக்கும் மாவு பிசைவதற்கும் என்ன சம்பந்தம் என்றுதான் இன்றுவரை புரியவில்லை. இன்னொரு புரியாத சமாச்சாரம் தற்காலத்தியது. சன்னி லியோனி என்று ஒரு நடிகை இருக்கிறாரே, அவருக்கும் திண்டுக்கல் லியோனிக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா ?

Tuesday, April 29, 2014

சோத்துக்காடை - பால கிருஷ்ண பவன், சித்தார்த்புதூர், வைகோ





ஒரிஜினல்:

http://www.sangkavi.com/2014/04/blog-post_28.html

  

ரீமேக்:  

கோவைக்கு பின்புறம் நேற்று உதயமாகி இருக்கும் வைகோ மாவட்டத்தில் புதிதாய் முளைத்துள்ள பாலகிருஷ்ணா பவன் 150 வருட புகழ் பெற்றது. விலையில்லா சைவ உணவுகளை விட இங்கே உணவின் விலை மிக குறைவு என்று டேபிளில் அடித்து சொல்லலாம். இந்த உணவகத்திற்கு நான் 81 மாதங்களாக சென்று வந்து கொண்டிருக்கிறேன் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியே ஹோட்டல் போல இருந்தாலும் உள்ளே பார்க்கும் போதும் ஹோட்டல் போல இருப்பது இதன் தனிச்சிறப்பு. கூட்டம் அதிகமானால் தனது கல்லா சீட்டில் அமரவைத்து சாப்பிட சொல்லும் ஓனரை புகழ வார்த்தையில்லை (வாயில் கொழுக்கட்டை இருப்பதால்). கஸ்டமர்கள் ஒரு முறை சாப்பிட்ட வெள்ளி (எவர் சில்வர்) தட்டை மீண்டும் பயன்படுத்தாமல், புதிது புதிதாக வெள்ளி தட்டுகளை சப்ளை செய்வது இந்த ஹோட்டலின் சுகாதாரத்திற்கு (தட்டை) எடுத்துக்காட்டு.

சரி உணவிற்கு வருவோம் (அடிக்கடி அக்கவுண்ட் வைப்பதால் உணவு உடனே வருவதில்லை எனக்கு. சற்று பொறுமை காக்க). ஆஹா..இதோ காலையில் ஆர்டர் செய்த உணவுகள் மதியம் வந்துவிட்டன. இனிப்பு கொழுக்கட்டை, ஸ்வீட் கொழுக்கட்டை, இலவச சேவை, சில்லி பையன் கோபி மற்றும் சோத்துக்காடை. காடையை தனியே வறுப்பதில்லை இங்கே. தண்ணீர் தேடி அலைந்து கேராகி விழும் காடைகளை பிடித்து அப்படியே கையால் நசுக்கி குழம்பாக்கி சோற்றில் ஊற்றுவது இந்த ஹோட்டலின் ஸ்பெஷல். அதுதான் சோத்துக்காடை.

இங்கு மினி இட்லி சப்ளை செய்யும் விதமே அலாதிதான். மாதம் முதல் தேதி முதல் மாதக்கடைசி வரை ஒரு இட்லிக்கான பில்லை மட்டும் கட்டிவிட்டு டிப்ஸ் தராமல் டேக்கா குடுப்பவன் என்பதால் சப்ளையருக்கு நான் மினி இட்லி கேட்டால் மட்டும் காண்டு ஏறி விடும். தட்டில் இருக்கும் ஒற்றை இட்லியை ஓங்கி குத்துவார். அது மேலே இருக்கும் பேனில் பட்டு தெறித்து எட்டு பீஸாக மீண்டும் என் தட்டில் வந்து விழும். இதோ மினி இட்லி தயார். ஏன் உங்கள் கடையில் சில்லி (குணம் கொண்ட) கோபியை எல்லாம் வேலைக்கு வைக்கிறீர்கள் என்று ஓனரை கேட்டால் முறைக்கிறாரே தவிர இதுவரை பதில் சொன்ன பாடில்லை. தன்மையான கேரக்டர் உள்ள கோபி யாராவது இருந்தால் உடனே ஹோட்டல் ஒன்றை அணுகவும்.  


இந்த ஹோட்டலில் எல்லா உணவுமே வீட்டு சுவையுடன் இருக்கிறதே என்று ஒரு நாள் சப்ளையரிடம் ஆச்சர்யத்துடன் கேட்டேன். ''உனக்கு பக்கத்து சேர், டேபிள்ல உக்கார்ற ஆளுங்களோட லஞ்ச் பேக் அடிக்கடி காணாம போகுதுன்னு கம்ப்ளைன்ட் வந்துட்டே இருந்தது. இப்பதான் விஷயம் புரியுது. அவங்க வீட்டு சாப்பாட்டை நீ ஏன்யா சாப்பிட்ட''என்று ஈவ்னிங் போண்டா, பஜ்ஜிக்கும் சேர்த்து நித்தம் நான்கு வேலை மொத்தம் 30 நாட்கள் மாவாட்ட விட்டு விட்டார்கள்.  

வைகோ வந்தால் மறக்காமல் இந்த ஹோட்டலில் சாப்பிடவும். பரூக் பீல்ட்ஸ் மால் கார் பார்க்கிங் ஓரம் இந்த சோத்துக்காடை உள்ளது. எதிரில் இருக்கும் கார்களை வைத்தே இது எவ்வளவு பிரபல காடைக்கடை என்பதை நீங்கள் கணிக்கலாம். மாலை உணவகம்  7 முதல் 11 வரை வரை. காசு தந்து சாப்பிடும் வாடிக்கையாளர் அனைவருக்கும் ஆளுயர மாலை அணிவித்து சோறு போடுவதால் 'மாலை' உணவகம் என்று இந்த ஹோட்டல் பெயர் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. 

8 மணிக்கு மேல் சென்றால் 'க்யூ' வில் நின்றுதான் சாப்பிட வேண்டும். ஏனென்றால் A முதல் P வரை கார் பார்க்கிங்கிற்கான இடம். Q வில்தான் இந்த கடைக்கு இடம் ஒதுக்கி உள்ளார்கள். அங்கு சாப்பிடும் கூட்டத்தை பார்க்கும் போதுதான் தெரியும் இங்கேயும் சாப்பிட்டு விட்டு வீட்டிலும் போய் சோறாக்கி சாப்பிடுபவர்கள் யாரும் இல்லையென்று. 

பெயர்:   பால கிருஷ்ண பவன், சித்தார்த்புதூர், வைகோ.
இடம்: லேடீஸ் மற்றும் மகளிர் ஹாஸ்டலில் இருந்து தப்பி ஓடும்போது உதை வாங்கி 'தேவுடா' என கத்தும்போது வரும் கோவில் தாண்டி அட்மிட் ஆகும் இராமகிருஷ்ணா மருத்துவமனை செல்லும் வழி. 

எச்சரிக்கை: 'லட்டுக்குதான துட்டு, துட்டுக்குதான் லட்டு' என்று ஓட்டல் முதலாளியிடம் லந்து செய்தால் போண்டா மாஸ்டர் உசிலைமணி கையால் சிறப்பு அர்ச்சனை செய்யப்படும்.  



Friday, January 24, 2014

நீ சப்தம் - தூக்கம் தொண்டையை அடைக்கிறது


Roughly Note -The below post is inspired by:

http://www.nisaptham.com/2014/01/blog-post_23.html




பண்புள்ள நல்லபுள்ள வாவ்.மணிகண்டன் அவர்களுக்கு,

இரவு சாய்ந்து இருட்டு வரும்போது வரும் கொடூரமான விஷயம் உண்டெனில் அது தமிழிசை சௌந்தர்ராஜன் அக்கா கலந்து கொள்ளும் விவாத நிகழ்ச்சியை பார்த்துவிட்டு தூங்கப்போவது அல்ல. தூங்கிய சில மைக்ரோ நொடியில் வரும் எனது சுய சொந்த குறட்டை சத்தம்தான். எட்டுக்கு ஏலே முக்கால் ரூமில் 4 நண்பர்களோடு தூங்குகையில் நித்தம் குறட்டை தொண்டையை அடைக்கிறது. 'அடிங் ^&*@#$. ஏன்டா டைப் ரைட்டிங் மிஷின்ல எல்லா கீயையும் அழுத்தி அப்பறம் ஒவ்வொண்ணையும் படக்கு படக்குன்னு ரிலீஸ் செய்றா மாரி, கண்டத தின்ன காட்டுக்கரடி கடமுடன்னு கக்கூஸ் போற மாரி டிசைன் டிசைனா கொரட்ட விட்டு கொல்ற" என்று நிசப்த விரும்பிகள் என் உசுரை எடுக்கிறார்கள். 

சில நேரம் என் குறட்டை சத்தத்தை கேட்டு நானே பயந்து எழுந்துள்ளேன் என்றால் அதன் அபார வீரிய வில்லங்கம் எப்படி இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். நீ சப்தம் என்று சொல்லும் நண்பர்கள் நிசப்தம் என்று அமைதி கொள்ள ஏன் நீங்கள் என் போன்ற புதியதாய் குறட்டை விடுவோருக்கு அறிவுரை தரக்கூடாது. இதற்கு முன்பு தாங்கள் பரிசளித்த ஹரி உரை நூலில் இருந்த அறிவுரை எப்பயனையும் அளிக்கவில்லை தோழர். உதவுங்கள் ப்ளீஸ். ப்ளீச் ப்ளீச் என்று சோடா அடித்து என்னை எழுப்பும் செலவை மிச்சம் செய்ய ஹெல்ப் மீ ப்ளீஸ்.

நன்றி,
நஸ்ருதீன் ஷா(ருக்).

                                              ***


அன்புள்ள நஸ்ருதீன் மற்றும் ஷாருக்,

தூக்கம் தொண்டையை அடைப்பதெல்லாம் கும்பகர்ண காலத்து கான்சப்ட். எனக்கு அப்படி ஒரு நிலை அரிதாகவோ/அடிக்கடியோ வந்ததுண்டு. யூரியா மாறிய காய்கறி தின்றால் கூட இந்நிலை வரலாம். எனவே ரிலையப்ல் ரிலையன்ஸ் கடையில்தான் வாங்கினீர்களா என்று செக் செய்க. 

''அடிங் ^&*@#$. ஏன்டா^#$%" என்று உங்கள் நண்பர்கள் கயுவி ஊற்றுகிறார்கள். என்னிடம் ஒரே ப்ளோரில் கொத்து கொத்தாக குறட்டை விடும்  ஆபீஸ் கொத்தடிமைகள் ''உன் சவுண்ட் வர வர நெம்ப ஜாஸ்தியா இருக்கே. பொத்திட்டு பட்றா ^#$%" என கெஞ்சுகிறார்கள். அம்புடுதேன். சென்னையில் இருந்து சைதாப்பேட்டை ஆபீஸ் செல்லும்போதெல்லாம் செக்யூரிட்டி ஷட்டரை திறந்த மறுநொடி கேபினுக்கு கீழ் சென்றுவிட துடிப்பேன். காரியம் தொண்டை கூட சில சமயம் விநாயக, முருகனையும் துதிப்பேன். 

இதை எப்படியோ சக சகா ஒருவன் காலை ஆப்பம் தின்னும் வேளையில் மோப்பம் பிடித்து மேனேஜரிடம் ஓதிவிட்டான்.  "அதுக்கு என் தூக்கத்த ஏன்டா கெடுத்த ம%ர்  புடு$கி" என்று அவனது பங்களா நாய் முடியை பிடித்து உலுக்கி விட்டார் அவர். 'சரி. சி.சி.டி.வி. கேமராவில் இருந்து தப்பிப்பது எப்படி?' என்றொரு இடியாப்ப சிக்கல் என் நெஞ்சில் இடியாக இறங்கியது. எனவே ஒரு நாள் இரவோடு இரவாக அந்த கேமராவில் தேவகவுடா போட்டோவை ஒட்டி விட்டேன். அதைப்பார்த்து தூங்கிய செக்யூரிட்டிகள் இன்னும் எழுந்த பாடில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


அதுபோகட்டும். குறட்டை விட்டதால் உங்கள் அறையில் மொத்தம் எத்தனை விரிசல்கள்? நீங்கள் மவுண்ட் ரோடு பக்கம் உள்ளீர்களா? அப்படி என்றால் மெட்ரோ ரயில் சுரங்கம் அமைத்ததால் விரிசல் விட்டது என்று சொல்லி உங்களுக்கு நான் நிவாரண் 90 வாங்கித்தருகிறேன். எனது 'ஸ்லீப் ஐ ஸே z/o வேடியப்பன்' புத்தகத்தை தெரியாமல் வாங்கி, பிறகு என்னிடம் ரூ. 10,000 தந்து 'நீங்களே வச்சிக்கங்க' என்று சொன்ன மெட்ரோ ரயில் எம்.டி. மங்கு(னி) சிங் என் நண்பர்தான். உங்களுக்கு நிவாரண் 90 கன்பர்ம்.

ஆனால் ஒன்று. குறட்டை ஒழிப்பு என்பது தொடர்ச்சியான பயிற்சி. தொடர்ந்து தூங்குவதால் மட்டுமே அதை ஒழிக்க முடியும். தியான நிலைக்கு செல்ல மேக் அப் போட்ட நஸ்ரியாவை திருமணம் எனும் நிக்கா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து உங்கள் கனவுக்கோட்டைக்கு இஸ்துக்குனு வர வேண்டும். 

ஓப்பனாக சொன்னால் இந்த பயிற்சியை நான் வெறித்தனமாக செய்கிறேன். ஆனால் "போங்கள். நீங்கள் மண்டை ஜாஸ்தி உள்ள முதல் பெஞ்ச் மாணவர் போல் இருக்கிறீர்கள்" என்று வெக்கப்பட்டுக்கொண்டே 'மாயி' வாம்மா மின்னலை விட வேகமாக ஓடிப்போய் விடுகிறார் நஸ்ரியா. எனவே சீ சீ இந்தப்பழம் புளிக்கும் என்றெண்ணி அவருக்கு பதிலாக அட்லீஸ்ட் சுமார் மூஞ்சி குமாரி யாராவது சிக்குவார்களா என்று விட்டத்தை பார்த்து கொட்டாவி விட பிடிக்க தொடங்கினேன். அந்நேரம் பார்த்தா பக்கத்து வீட்டு பார்த்தாவின் மனைவி ஜெயமாலினி ஆன்ட்டி சுட்ட வடையை வாயில் போட்டு விட்டுப்போக வேண்டும் அந்த கட்டைல போற காக்கா???. (சனியனே. உன் தலைல அண்டங்காக்கா பேல).

அந்த வடையை மறைப்பதாக நினைத்து கொள்ள வேண்டாமென்று தங்கள் வலது கால் சுண்டுவிரலை இழுத்து பிடித்து கேட்டுக்கொள்கிறேன்.

சத்தியமாக குறட்டையை போக்க இதுபோன்று அரட்டை அடிப்பதை தவிர என்னிடம் வேறு பெரிய சாத்திரங்கள் இல்லை. மயிலை  சத்திரம் ஒன்றின் முகவரி மட்டுமே உள்ளது. அங்கு எந்த எடுவாப்பய இம்சையும் இல்லாமல் நீ(ங்கள்) சப்தமாக தூங்கலாம்.

இதோ இப்போதே ''தந்தி'' டி.வி. மூலம் அம்முகவரியை உங்களுக்கு ஸ்க்ரோலிங்கில் அனுப்புகிறேன். மயிலை கபாலி உங்கள் முகத்தில் வரி(ஐ மீன் என்னைப்போல் 'ப்ளேடு') போடாமல் இருந்தால் உங்கள் அதிர்ஷ்டம். ஒருவேளை (அல்லது மூன்று வேளை) நீங்கள் தூங்கிக்கொண்டு இருந்தால் வெறி ஆகாமல் சில நொடி ஸ்க்ரோலிங் செய்தவாறே உருண்டு போய் அச்சேனலை பார்க்கவும்.

வாழ்த்துக்கள்,

போGO. மணிகண்டன்.
Neesaptham.calm
 .....................................................................


Posted by:

சிவகுமார் 
madrasbhavan.com