Monday, May 13, 2013

முனைவர் பட்டாப்பட்டி காலமானார்


நமது நண்பர் திரு,பட்டாப்பட்டி அவர்கள், நேற்று சிங்கப்பூரில் மாரடைப்பால் காலமானார்.
 
பட்டாப்பட்டியின் இயற்பெயர் வெங்கிடபதி. இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

நாளை காலை 8லிருந்து 10 மணிக்குள் கோயமுத்தூரிலிருந்து மேட்டுப் பாளையம் செல்லும் சாலையில் 20வது கிலோமீட்டரில் உள்ள பெரியநாயக்கன் பாளையத்திற்கு உடல் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகவலுக்கு நன்றி : பழனி. கந்தசாமி

website: http://pattapatti.blogspot.in/

24 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

அஞ்சா சிங்கம் said...

rip :-((

”தளிர் சுரேஷ்” said...

அதிர்ச்சியான செய்தி! ஆழ்ந்த இரங்கல்கள்! அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்!

கோகுல் said...

28-வயது தானா அவருக்கு?

கோகுல் said...

இந்த செய்தி பொய்யாக இருக்கவேண்டுமென மனது துடிக்கிறது.

கோகுல் said...

இந்த செய்தி பொய்யாக இருக்கவேண்டுமென மனது துடிக்கிறது.

Unknown said...

if you know the funeral service address in CBE, could you please send it to pandiya AT gmai1?

Thanks.

கவியாழி said...

வருத்தமாக உள்ளது.

ராஜ நடராஜன் said...

நினைவுகளோடு இருப்பாய்!

பின்னூட்ட தோழன் பட்டுக்கு எனது ஆழ்ந்த இரங்க்லை தெரிவித்துக்கொள்கிறேன்.

Anonymous said...

பதிவுலகில் நான் நுழைந்த பொழுது தொடர்ச்சியாக பதிவு எழுதியவர். அரசியல் சார்ந்த எழுத்துகளில் காரம் அதிகம் இருக்கும்.

அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.

அமர பாரதி said...

அன்னாரது ஆத்மா சாந்தியடையவும் அவர்தம் குடும்பம் இழப்பிலிருந்து மீளவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

துளசி கோபால் said...

ஐயோ..... 28வயசுலே இந்தக் கொடுமையா:(

மனம் வருந்துகின்றேன்:(

Unknown said...

என்னால் இன்னும் நம்ப முடியவில்லை...எமது ஆழ்ந்த இரங்கல்கள்...

iniyavan said...

மிகவும் வருத்தமான செய்தி! அவரின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

'பசி'பரமசிவம் said...

28 வயதிலா? மிகப் பெரிய சோகம்.

எச்சரிக்கையாக இருந்திருக்கலாம்.

நம்மால் இரங்கல் மட்டுமே தெரிவிக்க முடிகிறது.

ஸ்ரீராம். said...

மிகவும் வருத்தப்பட வைக்கும் மறைவு. ஆழ்ந்த இரங்கல்கள்.

Anonymous said...

பட்டாப்பட்டியின் இயற்பெயர் வெங்கிடபதி. இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

நாளை காலை 8லிருந்து 10 மணிக்குள் கோயமுத்தூரிலிருந்து மேட்டுப் பாளையம் செல்லும் சாலையில் 20வது கிலோமீட்டரில் உள்ள பெரியநாயக்கன் பாளையத்திற்கு உடல் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Unknown said...

எமது ஆழ்ந்த அனுதாபங்கள்

மாதேவி said...

மிகவும் வருத்தமான செய்தி.

குடும்பத்தினர்கள் துயர் நீங்க வேண்டுகின்றேன்.

அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றேன்.

வவ்வால் said...

நகைச்சுவையாகவும்,கலாய்ப்பாகவும் எழுதுவார்,சிலப்பதிவுகள் படித்ததுண்டு, சமயத்தில் பின்னூட்டங்கள் போட்டிருக்கிறேன் என நினைக்கிறேன்,பட்டாப்பட்டி ஃபாலோவ்ஸ் என விரும்பிய பதிவுகளையும் தொகுத்து திரட்டி வழங்கிக்கொண்டிருந்தார், அவ்வளவாக பழக்கமில்லை,ஆனால் நல்ல மனிதர் என்ற அவதானிப்புண்டு, இளம்வயதில் திடீர் மறைவு அதிர்ச்சியையும்,வருத்தத்தினையும் அளிக்கிறது, அவர் ஆன்மா சாந்தியடையட்டும்,ஆழ்ந்த இரங்கல்கள்!

Angel said...

ஆழ்ந்த இரங்கல்கள் ...அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதல் தருவாராக

pichaikaaran said...

கண்ணீர் அஞ்சலிகள்

Unknown said...

அவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்

Sabarinathan Arthanari said...

இது ஏதோ விளையாட்டு பதிவு என்றே படிப்பதற்கு முன்பு நிணைத்தேன்.

வருத்தமாக இருக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்