Thursday, April 12, 2012

வியாழக்கிழமை ஆறுச்சாமி, வெட்டியா ஆபீஸ்ல தூங்கிடு சாமி (32.13.2013)



                                                                 
இந்த படத்தோட ஹைலைட்டே 'மன்மத லீலையை வென்றார் உண்டோ?' பாடல்தான். மூணு லட்சத்திற்கும் மேற்பட்ட கில்மா ஸ்டில்களை போட்ட என்னை பார்த்த பிறகும் 'மன்மத லீலையை வென்றார் உண்டோ?' என்று கேட்கும் அளவிற்கு இந்த பாகவதருக்கு என்ன ஆணவம் இருக்கும். அதனால்தான் 'உன் படங்கள் மேல் எனக்கு பாராமுகம்..' என்று பாடிவிட்டு தியேட்டருக்கு செல்லாமல் தவிர்க்க போகிறேன். தீபாவளிக்கு வர வேண்டிய படம். பாவம் தமிழ் புத்தாண்டுக்கு வருகிறது. ஈரோட்டில் ரிலீஸ் ஆகவில்லை. என்னை பகச்சி கிட்டா இதுதான் கதி!!


இதுவும் எப்போதோ எடுத்த படம்தான். ஹனி தடவிய மூன் போல இருக்கும் ஹன்சிகாவை ஹனிமூன் கொண்டாடும் தம்பதிகள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். ஸ்டாலின் சன் (உதயநிதி) தானம் செய்த பணத்தில் சந்தானம் காமடியில் வெளுத்து வாங்கி இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அவர் பேசிய வசனங்கள் அனைத்தையும் என் பதிவில் போடப்போகிறேன் என்பதை கேள்விப்பட்ட உதயநிதி "ஐயா தயவு செஞ்சி வேண்டாம். வேணும்னா போன மாசம் வந்த 'முரசொலி'ல உங்களுக்குன்னே மூணு பக்கம் ஒதுக்கி தர சொல்லி தாத்தா கிட்ட சொல்றேன். அதுல எழுதிக்கங்க. இதையே எங்க ஆட்சில செஞ்சி இருந்தீங்கன்னா உங்களுக்கு 'வேற விதத்துல' வெகுமானம் தந்துருப்போம்.." எனக்கெஞ்சினார். ஓக்கே. ஓக்கே என்று டீலை முடித்தேன்.


இந்தப்படத்தில் ஒல்லியாக இருக்கும் ஓணான் ஒன்று 'மங்கிசா பாயாசா' லேக்கியத்தை சாப்பிட்டு ஒரே நைட்டில் ஒன்பது மாடி பில்டிங் சைஸ் ஜந்துவாக வளர்ந்து நிற்கிறது. இதெல்லாம் ஒரு கதையா? சென்ற வாரம்தான் 'டின் டின்' விமர்சனத்தில் அந்த ஆளு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கை வெளுத்து வாங்கினேன். அப்பவும் திருந்தவில்லை. "உங்கள் படத்தின் லாஜிக் மிஸ்டேக் மற்றும் நீங்கள் பல்ப் வாங்கிய இடங்கள்" பகுதியை இணைத்து மெயில் கூட அனுப்பினேன். ஆனால் "தமிழ் தெரியாது" என்று எஸ்கேப் ஆகிவிட்டார். அதற்கு நான் "எனக்கு கூடதான் இங்கிலீஷ் தெரியாது. தமிழ் டப்பிங்ல உங்க படத்தை பாக்கலையா?. அது மாதிரி என் லெட்டருக்கு இங்கிலீஷ் டப்பிங் செஞ்சி படிங்க" என்று மடக்கினேன். அவரும் மடக்கினார்....லெட்டரை. சுத்த பயந்தாங்கொள்ளி...ஹி..ஹி...

நாளைக்கி ஜுராசிக் பார்க் ரிலீஸ் ஆகட்டும். அப்ப இருக்கு அந்த ஆளுக்கு. 'ஜுராசிக் பார்க்கில் ஜிகிடிகள் செய்த ஜில்ஜில் மல்மல் சில்மிஷங்கள்' அப்படின்னு தலைப்பு வச்சி ஒரு போஸ்ட் போடறேன். அப்பதான் என் பவர் தெரியும். 

                                                                   
நல்ல பாம்பு பெயரில் நல்ல பாம்பு படம் எடுப்பது போல காட்சிகளை வைத்து எடுக்கப்பட்ட படம். ஏற்கனவே இந்த நல்ல பாம்பு சிலமுறை சொந்தமாக படம் எடுத்து தோற்றுள்ளது. ஒரு முறை ஷகீலாவின் 'ஒருக்களித்து படுத்த ஓமணக்குட்டி' படத்தை ஈரோடு ஆபரேஷன் தியேட்டரில் நான் கிளுகிளுப்பாக பார்த்து கொண்டிருந்த போது இதே நல்ல பாம்பு என் சீட்டின் நடுவே என் இரண்டு கால்களுக்கும் இடையில் 'உஸ்.உஸ்..' என உறுமியது. 'நேரங்கெட்ட நேரத்துல உனக்கு படம் ஒரு கேடா' என்று அதன் காதை பிடித்து திருகி பைக் ஸ்டாண்டில் வீசிவிட்டு வந்தேன். அது முதல் இந்த நல்ல பாம்பு எடுத்த எல்லா படமும் தோல்விதான்.

இந்த எல்லா படத்தையும் ஈரோட்டில் நாளை காலை பகல் காட்சி பார்த்து விட்டு பட்டென சிட்டாக பறந்து வந்து பதிவு போடுகிறேன். ஒரே நேரத்தில் எப்படி நாலு படத்தையும் பாத்து பதிவு போட முடியும்னு கேக்கறீங்களா? என்ன மாதிரியே மூணு பேருக்கு டூப் போட்டு படம் பார்ப்பேன். கணக்கு டால்லி ஆயிடுச்சா? ஹி..ஹி..


###############################################

18 comments:

பால கணேஷ் said...

’பிரபல பதிவரின் ரகசியங்கள்’ன்னு குறும்படம் எடுத்து வெளியிடுவீஙக போலருக்கே... ஹி... ஹி...

Unknown said...

ஹன்சிகாவை ஹனிமூன் கொண்டாடும் தம்பதிகள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.////
சின்ன திருத்தம் தம்பதிகள் அல்ல பேச்சிலர் என்று இருக்க வேண்டும்....

சிபிசெந்தில்குமார் said...

எனக்கு போட்டியா பிச்சிபுடுவேன் பிச்சி!ஆயிரம் ஹிட்ஸ் போச்சே!ஆயிரம் ஹிட்ஸ் போச்சே!சொக்கா அவனில்லை அவன் வரமாட்டான்.....வரவே மாட்டான்....

Unknown said...

ஷகீலாவின் 'ஒருக்களித்து படுத்த ஓமணக்குட்டி' படத்தை ஈரோடு ஆபரேஷன் தியேட்டரில் நான் கிளுகிளுப்பாக பார்த்து கொண்டிருந்த போது இதே நல்ல பாம்பு என் சீட்டின் நடுவே என் இரண்டு கால்களுக்கும் இடையில் 'உஸ்.உஸ்..' என உறுமியது.//////

ங்கொய்யால A பையன்யா நீர்!

goundamanifans said...

//கணேஷ் said...
’பிரபல பதிவரின் ரகசியங்கள்’ன்னு குறும்படம் எடுத்து வெளியிடுவீஙக போலருக்கே... ஹி... ஹி...//

இதெல்லாம் ரகசியமே இல்லை சார். அன்றாட நிகழ்வுகள்தானே..!!

வெளங்காதவன்™ said...

//வீடு சுரேஸ்குமார் said...
ஷகீலாவின் 'ஒருக்களித்து படுத்த ஓமணக்குட்டி' படத்தை ஈரோடு ஆபரேஷன் தியேட்டரில் நான் கிளுகிளுப்பாக பார்த்து கொண்டிருந்த போது இதே நல்ல பாம்பு என் சீட்டின் நடுவே என் இரண்டு கால்களுக்கும் இடையில் 'உஸ்.உஸ்..' என உறுமியது.//////

ங்கொய்யால A பையன்யா நீர்!
////

A one

:-)

goundamanifans said...

//வீடு சுரேஸ்குமார் said...
ஹன்சிகாவை ஹனிமூன் கொண்டாடும் தம்பதிகள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.////
சின்ன திருத்தம் தம்பதிகள் அல்ல பேச்சிலர் என்று இருக்க வேண்டும்....//

உலகம் இப்ப எங்கயோ போய்கிட்டு இருக்கு..நீங்க என்ன ஓய் இப்படி சொல்லிட்டீர்.

goundamanifans said...

//வீடு சுரேஸ்குமார் said...
ஷகீலாவின் 'ஒருக்களித்து படுத்த ஓமணக்குட்டி' படத்தை ஈரோடு ஆபரேஷன் தியேட்டரில் நான் கிளுகிளுப்பாக பார்த்து கொண்டிருந்த போது இதே நல்ல பாம்பு என் சீட்டின் நடுவே என் இரண்டு கால்களுக்கும் இடையில் 'உஸ்.உஸ்..' என உறுமியது.//////

ங்கொய்யால A பையன்யா நீர்!//

எல்லாப்புகழும் குரு 'சிபி'யானந்தாவிற்கே!!

goundamanifans said...

//வெளங்காதவன்™ said...
//வீடு சுரேஸ்குமார் said...
ஷகீலாவின் 'ஒருக்களித்து படுத்த ஓமணக்குட்டி' படத்தை ஈரோடு ஆபரேஷன் தியேட்டரில் நான் கிளுகிளுப்பாக பார்த்து கொண்டிருந்த போது இதே நல்ல பாம்பு என் சீட்டின் நடுவே என் இரண்டு கால்களுக்கும் இடையில் 'உஸ்.உஸ்..' என உறுமியது.//////

ங்கொய்யால A பையன்யா நீர்!
////

A one

:-)//

பேட் பாய்ஸ். எப்படி நல்ல அர்த்தம் போட்டாலும் வேற மாதிரியே யோசிக்கராங்களே...

ஷகிலா said...

என் திரைப்படத்தை விளம்பரப்படுத்தியதற்கு நன்றி.

goundamanifans said...

//ஷகிலா said...
என் திரைப்படத்தை விளம்பரப்படுத்தியதற்கு நன்றி.//

அதெல்லாம் இருக்கட்டும். சிபி அண்ணன் விட்டுட்டு போன கர்சீப்பை ஒழுங்கா திருப்பி தந்துடுங்க...ஆமாம்..!!

நாய் நக்ஸ் said...

:))))))))))))))))

ஹி....ஹி...ஹி....ஹி....

Philosophy Prabhakaran said...

// நல்ல பாம்பு என் சீட்டின் நடுவே என் இரண்டு கால்களுக்கும் இடையில் 'உஸ்.உஸ்..' என உறுமியது //

யோவ்... எதார்த்தமா எழுதினேன்னு மட்டும் சொல்லிடாத... சுட்டேபுடுவேன்...

கோவை நேரம் said...

அநியாயத்திற்கு ரொம்ப A வா இருக்கே....

Thalapolvaruma said...

அண்ணா செம்ம SUPER

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் யோவ் அந்த பாம்ப மண்டைலயே போடுறத விட்டுட்டு சும்மாவா வந்தீங்க....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////'மாநிற எம்.ஜி.ஆர்.' விசய் பேரவை/////////

வெளங்கிரும்..........! (இன்னும் எத்தன கலரு இருக்கோ?)

கிஷோகர் said...

நம்ம சி.பி அண்ணன் நல்லவரா கெட்டவரா?