Sunday, June 30, 2013

நாங்களும் எழுதுவமில்ல காதல் (கவுஜ)கடிதம்...!

டிஸ்கி : திடங்கொண்டு போராடு சீனு ஒரு காதல் கடிதம் எழுதும் போட்டி நடத்துவது நமது பதிவர்கள் அனைவருக்கும் தெரியும். அந்த போட்டியில் நமது தீவிர இலக்கியவாதியும், நற்சிந்தனையாளரும்!?, எங்கள் அண்ணன் நக்கீரன் கலந்து கொண்டிருக்கின்றார். அவர் தன்னுடைய பால்ய கால காதலியான அருக்காணிக்கு ஒரு அழகான காதல் (கவிஜ) கடிதம் வரைந்து அனுப்பியிருக்கின்றார்....அதை கவுண்டமணி செந்தில் தளத்தில்தான் பதிவிட வேண்டும் என்று ஒற்றைக்காலில் சற்று தள்ளாடியபடி வேண்டிக் கொண்டார்.



அன்பே எங்கக்கா மவளே அருக்காணி
உங்கப்பன் ஒரு மொள்ளமாரி
உன் வூட்டுப் பக்கம் நான் வந்தாலே
பேசுறான் வசைமாரி
அதனால நான் மொட்டை மாடியில
படுத்துகினு யோசிச்சேன்
இதோ எழுதினேன் ஒரு கடுதாசி...!

என் ஊரு சிதம்பரம்
உன் பக்கத்து வூட்டுக்காரன் ஏகாம்பரம்
அவனுக்கு வாங்கித்தந்தேன் பலாப்பழம்
அவன்கிட்ட கொடுத்து வுட்டேன் காதல் கடிதம்
அந்த நாதாரி புல் மப்புல மட்டையானான் டிச்சு ஓரம்......!

குளிருக்கு ஆவாது மெக்டோவலு
காதலுக்கு ஆவாது அல்லக்கையி
அதனால நானே நல்ல கடிதம் எழுதி
கொண்டு வரேன் நாளான்னிக்கி....!

உன் மஞ்சா கலரு தாவணி
ஒண்ணே முக்காலு ரூவா பாண்ட்ஸ் பவுடரு....!
வானத்தைப் பாக்கும் உன் கூந்தலு
எம் மனசு நீ வந்துகினு உக்காரும் ஸ்டூலு
அமலா பாலு, திரிசா எல்லாருக்குமே நீ ஒரு ஸ்கூலு!

நான் குடிக்கும் கிங் பிசரு பீரு நீதாண்டி
நான் வெச்சிருக்கிற நோக்கியா போனு நீதாண்டி
என்னோட லேப்டாப்பும் நீதாண்டி....
என்னோட கமெண்ட் பாக்சும் நீதாண்டி
நான் எழுதும் பிளாக்கும் நீதாண்டி
என் காதலுக்கு நீ தாடி சம்மதம்
இல்லையின்னா நான் டிராப்டில் இருக்கும் ஒலக எலக்கியம்....!

அன்புடன்


”கவிக்கோ”பால் பல்பொடி (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது) ”முனைவர் நக்கீரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!”

---------------------------------------------------------------------------------------------

சீனுவின் போட்டி தொடர்பான பதிவு : http://www.seenuguru.com/2013/06/contest-updates.html

11 comments:

கார்த்திக் சரவணன் said...

ஹா.. ஹா...

கடவுளே, சீனுவுக்கு படத்துல இருக்கிற மாதிரியே பொண்ணு அமையனும்...

திண்டுக்கல் தனபாலன் said...

அப்படிப் போடு...! ஹா.. ஹா...

Anonymous said...

சிதம்பர கோபுரம் சாய்வதில்லை.

'மாமா பிதுக்கு மருந்து மாமா'

Anonymous said...

இதல்லவா காவியக் காதல் கவியகள். உவ்வ்வ் !

வெளங்காதவன்™ said...

தம்பி நாங்களும் களமெறங்கிட்டம்.

வெளங்காதவன்™ said...

:-)

Unknown said...

இதுக்குத்தான் குடுக்கணும் பெஸ்ட்டு(1) பிரைசு!

saidaiazeez.blogspot.in said...

கலர் கலரா எய்தினா கலர் மடியும்னு ஏதோ பேமானி சொல்டான் போல இந்த பிஸ்கோத்தும் எய்துடுச்சி காதல் (கவுஜ)கடிதம்.
போட்டிவச்ச சீனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் (அருக்காணியும் ஜூலியும் இல்லைங்க, நான் சொல்றது வேற!)

நாய் நக்ஸ் said...

உலக இலக்கிய கடிதம்.....
எழுதுவோம்ல.....!!!!!!!!!!!

Theepz said...

Hupaaaaaah

ராஜி said...

நான் ஜகா வாங்கிக்குறேன்