Wednesday, July 17, 2013

கோனைவில்: கோவை நேரம் – வடிவுக்கரசி – அஞ்சரைக்குள்ள வண்டி – லொட்டு லொசுக்கு


பார்த்த படம்: அஞ்சரைக்குள்ள வண்டி
புதிதாக திருமணமான ஷகிலாவுக்கு தன்னுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் மணமகன் அமையவில்லை. அவர்களுடைய எதிர்வீட்டில் ஒரு வாட்டசாட்டமான ஆள் குடி வருகிறார். இருவருக்குமிடையே கள்ளக்காதல் மலர்கிறது.

மாலை ஐந்தரை மணிக்கு வருகிற ரயிலிலேறி ஓடிப்போக முடிவு செய்கிறார்கள். விஷயம் எப்படியோ ஷகிலாவின் கணவருக்கு தெரிந்து விடுகிறது. அப்போது தான் எதிர்வீட்டு ஆசாமி பற்றி ஒரு உண்மை தெரிய வருகிறது. ஷகிலா என்ன ஆனார் என்பதை படம் பார்த்து அறியுங்கள் !

மலையாளத்தில் மட்டும் எப்படி தான் இவ்வளவு அழகான கதைகள் வருகிறதோ ? பெரும்பலான காட்சிகளில் வசனம் போன்ற சமாசாரம் அதிகம் இன்றி ஒரு சுவாரஸ்ய படத்தை தந்திருக்கிறது இந்த டீம்.

அவசியம் பாருங்கள் !

அழகு கார்னர்
வடிவுக்கரசி – கண், மூக்கு, உதடு, வாய், கழுத்து என அனைத்தும் சரியாய் இருந்தும் ஏனோ தமிழில் அதிகம் ஸ்கோர் செய்யாமல் போனது வருத்தமே. நம்ம பாக்யராஜ் கூட கன்னி பருவத்திலே படத்தில் இவரை ஹீரோயினாக்கி முன்னுக்கு கொண்டுவர முயற்சி செய்தார்.

வரணும். அம்மணி மீண்டும் ஒரு ரவுண்டு வரணும்.


போஸ்டர் கார்னர்

அய்யய்யோசாமி கார்னர்
சென்ற வாரம் ஒரு நாள் காய்கறி வாங்க சென்றார் அய்யய்யோசாமி. போனவர் சும்மா இருந்திருக்கலாம் இல்லையா ? கீரை விற்கும் ஆயாவிடம் போய் விளிம்புநிலை மனிதருக்கான பேட்டி காண முயற்சி செய்திருக்கிறார். அந்த நேரம் பார்த்து அங்கே வேறொரு வேலையாக வந்த ஹவுஸ்பாஸ் அய்யய்யோசாமியை ஆயாவும் கையுமாக பிடித்துவிட்டார்.

வீட்டுக்கு வந்ததும் ஹவுஸ்பாஸ் அய்யய்யோசாமியை கடுமையாக அர்ச்சனை செய்தார். ஆனால் அய்யய்யோசாமி வழக்கம்போல ஒரு பெரிய புஸ்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிப்பதுபோல சீன் போட்டார். விடுவாரா ஹவுஸ்பாஸ் ? பூரிக்கட்டை, பூந்திக்கரண்டி என்று கிச்சனில் கிடைத்ததை எல்லாம் அய்யய்யோசாமியின் மீது தூக்கி எரிய ஆரம்பித்துவிட்டார். அய்யய்யோசாமி பாதுகாப்பாக வீட்டின் ஒரு கார்னரில் போய் பதுங்கிக்கொண்டார். அதுவே அய்யய்யோசாமி கார்னர் என்றழைக்கப்படுகிறது.

பதிவர் பக்கம் – கோவை நேரம்
நண்பரை கலாய்த்து எழுதும்போது – நம்மையே கலாய்த்து எழுதுற மாதிரி கொஞ்சம் கூச்சமா இருக்கு (க்கும் நண்பரை கலாய்க்கிறதுக்கு கூச்சபடுற ஆளா நீயி? - மனசாட்சி)

கோவை நேரம் என்கிற பெயரில் பதிவெழுதும் நண்பர் ஜீவா – இந்தப் பக்கத்தில் இருந்து பார்க்கும்போது அலைபாயுதே மாதவன் மாதிரி இருக்கிறார். ஒருவேளை அந்தப்பக்கம் சென்று பார்த்தால் அஜித்குமார் மாதிரி இருக்கலாம்.

ஒரு விசிட் அடித்து வாருங்களேன் !

என்ன பாட்டுடே – அடிக்குது குளிரு !
என்னை முதன் முதலாக கவர்ந்த பாடல் என்றால் – அது அடிக்கிது குளிரு தான் !

பள்ளியில் படித்த காலம் அது –

முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பைப் போல உன் அம்பை தேடுது !

என்ற வரிகள் ரொம்பவே பிடித்து  விட்டது. என்னமா யோசிச்சிருக்காரு பாட்டு எழுதியவர் என நினைத்து நினைத்து வியந்தேன்.

அற்புதமாய் பாடத் தெரிந்த ரஜினிகாந்த், அருமையாய் முகபாவம் காட்ட கூடிய விஜயசாந்தி, கருத்தாழம் மிக்க வரிகள் என எல்லா பக்கமும் சிக்சர் அடிக்கும் பாட்டு.

இப்பாடலை பாடியமைக்கு ரஜினிகாந்துக்கு தேசிய விருது கிடைத்தது.

வா கட்டபொம்மன் பேரா... கட்டழகு வீரா...!”

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி !  
கவுண்டமணி செந்திலில் ஆடிக்கொன்று அமாவாசைக்கொன்று என்று பதிவு வெளியிட்டு வந்ததை தாங்கள் அறிவீர்கள். ஆனால் இனி வாரத்திற்கு ஒரு பதிவாவது நிச்சயம் வரும். அதுவும் மற்ற பதிவர்களை பகடி செய்யும் பதிவாக இருக்கும். யாரை கலாய்க்கலாம் என்று வாசகர்களும் அய்யய்யோசாமிக்கு ஐடியா கொடுக்கலாம். போக போக இது இன்னும் அதிகமாக கூகிள் ஆண்டவரை வேண்டுவோம் !

43 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

தலைப்புல எல்லா அம்சமும் கரக்ட்டா பொருந்தியிருக்கு....

தமிழ்வாசி பிரகாஷ் said...

இந்த டைப்ல வாராவாரம் யாரோ பதிவு போடுவாங்களே???????

பால கணேஷ் said...

அய்யய்யோ சாமியோட பாணி அத்துபடியாய்டுச்சு போல. சிரித்து ரசித்தேன்.

முத்தரசு said...

ம்
அய்யய்யோ சாமி

Unknown said...

நண்பரே தாங்கள் மிக அருமையாக எழுதுகின்றீர்கள், அதுவும் பேட்டி எடுத்துப் போடும் பாங்கு மிக..மிக...அருமை...தொடருங்கள்....நாங்க அப்படியே காஷ்மீர் பக்கம் ஓடிவிடுகின்றோம்...!

Unknown said...

அய்யோ நான் பாக்கவேயில்லை இப்பத்தான் பாக்குறேன் தலைவி ஷகிலாவின் படத்தை....போங்க அய்யாச்சாமி வெக்கவெக்கமா வருது 'கன்'னை மூடிக்கிட்டேன்னா பாத்துக்கங்களேன்..!

Unknown said...

அலோவ் வடிவுக்கரசியப் பத்திப் போட்டு வயசு குறைச்சலான ஆளுன்னு காட்டிக்கிறீங்களா...?உங்க வயசுக்கு சௌக்கார்ஜானகி பாட்டியப்பத்திதானே போடணும்...!என்ன கொடுமை சார் இது...?

Philosophy Prabhakaran said...

@ வீடு சுரேஸ்குமார்

பாயிண்ட் நோட்டட்... அடுத்தது செளகார் ஜானகியை போடுறோம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மறுபடியும் அஞ்சரைக்குள்ள வண்டியா?

cheena (சீனா) said...

அன்பின் பிரபாகரன் - படங்களும் பதிவும் அருமை - இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ராஜி said...

அழகு கார்னர்தான் சூப்பர்

sathishsangkavi.blogspot.com said...

ஆஹா இங்கு நையாண்டி தர்பார் நடக்குது....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுல டீவி சீரியல், விஜய் டீவி ரியாலிட்டி ஷோ மேட்டர்ஸ் எதுவும் வரலியே, அய்யாசாமி டீவி இல்லாம எழுத மாட்டாரே.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கீரை விற்கும் ஆயாவிடம் போய் விளிம்புநிலை மனிதருக்கான பேட்டி காண முயற்சி செய்திருக்கிறார். ///

அந்த ஆயா கைல கேமராவ கொடுத்து இவர ஒரு போட்டோ எடுக்க சொல்லி இருப்பாரே, அது எங்கே?

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி

அது தொல்லைக்காட்சி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Philosophy Prabhakaran said...
@ வீடு சுரேஸ்குமார்

பாயிண்ட் நோட்டட்... அடுத்தது செளகார் ஜானகியை போடுறோம்...//////

போடுங்க போடுங்க, அடுத்து பட்டிக்சும் சண்டைக்கு வரட்டும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Philosophy Prabhakaran said...
@ பன்னிக்குட்டி

அது தொல்லைக்காட்சி....//////

ஓ அது வேற டிப்பார்ட்மெண்ட்டா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இந்தப் பக்கத்தில் இருந்து பார்க்கும்போது அலைபாயுதே மாதவன் மாதிரி இருக்கிறார். ஒருவேளை அந்தப்பக்கம் சென்று பார்த்தால் அஜித்குமார் மாதிரி இருக்கலாம்.//////

அப்போ பின்னாடி இருந்து பாத்தா பவர்ஸ்டார் மாதிரி இருப்பாரா?

நாய் நக்ஸ் said...

Aaha.....
Thundu......

Kilappungal......
Thaarai....
Thappattai-gal...
Kizhiyattum.....!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////யாரை கலாய்க்கலாம் என்று வாசகர்களும் அய்யய்யோசாமிக்கு ஐடியா கொடுக்கலாம். /////

முடிஞ்சா உங்க மொபைல் நம்பர போட்டுட்டு நாய் நக்ச கலாய்ச்சிப்பாருங்கய்யா...... அப்புறம் இருக்கு எல்லாருக்கும்....!

goundamanifans said...

இப்படைப்பிற்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்த பாலகணேஷ் அண்ணாச்சியின் பாதம் தொட்டு வணங்கி பாதாம் பால் இனாமாக வழங்குகிறோம்.

goundamanifans said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுல டீவி சீரியல், விஜய் டீவி ரியாலிட்டி ஷோ மேட்டர்ஸ் எதுவும் வரலியே, அய்யாசாமி டீவி இல்லாம எழுத மாட்டாரே.....?//

பொறுத்தார் பூமி ஆ'ழ்'வார்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////goundamanifans said...
இப்படைப்பிற்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்த பாலகணேஷ் அண்ணாச்சியின் பாதம் தொட்டு வணங்கி பாதாம் பால் இனாமாக வழங்குகிறோம்./////

ஆட்டுக்கு மஞ்சத்தண்ணி தெளிக்கிற மாதிரியே இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////goundamanifans said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுல டீவி சீரியல், விஜய் டீவி ரியாலிட்டி ஷோ மேட்டர்ஸ் எதுவும் வரலியே, அய்யாசாமி டீவி இல்லாம எழுத மாட்டாரே.....?//

பொறுத்தார் பூமி ஆ'ழ்'வார்.///

அதெல்லாம் இருக்கட்டும், பர்ஸ்ட் போட்டோல அந்தாளோட கைய எடுத்து விடுங்க, எவ்ளோ நேரமா அங்கயே வெச்சிட்டு இருக்கான்.....?

goundamanifans said...

உங்களைப்போன்ற கல்நெஞ்சம் கொண்டோருக்கு என்ன தெரியும் ஈர மனதைப்பற்றி.... :(((

Manimaran said...


//பார்த்த படம்: அஞ்சரைக்குள்ள வண்டி//
படத்தில் நிறைய 'நெஞ்சைத் தொடும்' காட்சிகள் இருக்கும் போல...

Manimaran said...

//நம்ம பாக்யராஜ் கூட கன்னி பருவத்திலே படத்தில் இவரை ஹீரோயினாக்கி முன்னுக்கு கொண்டுவர முயற்சி செய்தார்.//

எவ்வளவுதான் 'முன்னுக்கு கொண்டுவர' முயற்சித்தாலும் அம்மணி நடிக்கனுமில்லையா...

//வரணும். அம்மணி மீண்டும் ஒரு ரவுண்டு வரணும்.//

என்னது அடுத்த ரவுண்டா,,,,,ஏற்கனவே ரெண்டு ரவுண்டு சுத்தியிருக்கேயா...

Manimaran said...

ஹா... ஹா... கலக்கல்

எப்படி எல்லாம் யோசிக்கறாங்க

இரசித்தேன்

த.ம. 111

சன்னலை மூடு..!

”தளிர் சுரேஷ்” said...

உங்க ரசனையே ரசனை! தொடருங்கள்! காத்திருக்கிறோம்! நன்றி!

கோவை நேரம் said...

இதுல என்னைய வேற கோர்த்து விட்டிருக்கீங்க....ம்ம்..நடத்துங்கள்...

Unknown said...

அஞ்சரைக்குள்ள வண்டிஷகிலா ,வடிவுக்கரசி ,விஜயசாந்தி காலத்திலேயே இருக்கும் அய்யய்யோ அய்யாசாமியை அமலா பால் .அஞ்சலி காலத்திற்கு அப்டேட் செய்யுமாறு கூ 'கில் 'ஆண்டவரை வேண்டிக் கொள்கிறேன் !

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அடப்பாவிகளே.. ஆரம்பிச்சிட்டிங்களா...?


ஏதோ செம்மையா செய்யுங்க...

Anonymous said...

அடுத்த டார்கெட் செளந்தர்.

நாய் நக்ஸ் said...

ம்ம்ம்ம்ம்ம்....அப்படியா.............
சரி...சரி....

நாய் நக்ஸ் said...

BSNL....இன்னிக்கு புட்டுக்குச்சி....மொபைல் மூலமா.....வர முயற்சித்தும்....லோட் ...ஆகலை....

இந்த கமெண்ட் போட..30 நிமிடம் ...ஆகிட்டிட்டு......

மன்னிக்கவும்..குரு...பண்ணி.....

ராஜ் said...

நல்ல ஸ்பூப்.. ரொம்பவே ரசிச்சு சிரிச்சேன். பிரபா, அடிக்கடி இது மாதிரி பதிவு போடுங்க.

வவ்வால் said...

பதிவையே படிக்கலை படம் மட்டுமே பார்த்தேன்,சொன்னா நம்பனும்!

யாருப்பா அவன் மோப்ப நாய விட மோசமா :ஷகிலா ஆண்டிய" மோப்பம் பிடிசிட்டு இருக்கான்,அது மூக்கா இல்லை பீரங்கி குழாயா அவ்வ்!


எனக்கு ஒரு டவுட்டு இம்புட்டு நேரமா மோந்துக்கிட்டு இருக்கானே மூச்சு திணறாதா?
-----------

நக்ஸ் அண்ணாத்த,

//Kilappungal......
Thaarai....
Thappattai-gal...
Kizhiyattum.....!!!!//

உமக்கும் ஒரு 146-ஏ செக்‌ஷன் கேசு தான்,ஏற்கனவே தாரைத்தப்பட்டைனு சொன்னதுக்கு ஹையங்கார் பாடகி கேசு போட்டது மற்ந்துப்போச்சா ,எதுக்கும் ஒரு முன் ஜாமீன் எடுத்து பாக்கெட்டில் வச்சுக்கும் :-))

காட்டான் said...

அஞ்சரைக்குள்ள வண்டி பட லிங்க போட்டிருக்கலாமே மக்கா....!!

Lenin said...

முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பைப் போல உன் அம்பை தேடுது !

Athu 'Ambai theduthu' illainga, 'Anbaitheduthu'.

Anonymous said...

பதிவுலக வரலாற்றிலேயே மலையாள (கில்மா)ப் படத்துக்கும் விமர்சனம் எழுதி சாதனைப் புரிந்த என் அருமை தம்பிக்கும், ஆயாவை பேட்டி எடுக்கப் போய் அர்ச்சனை வாங்கிக் கட்டிய அய்யோசாமிக்கும் வாழ்த்துக்கள் !

Philosophy Prabhakaran said...

@ லெனின்

யாராவது ஒருவர் இதை சுட்டிக்காட்டுவார் என்று எதிர்பார்த்தேன்... அது வேண்டுமென்றே செய்த தவறு...

Unknown said...



//இந்தப் பக்கத்தில் இருந்து பார்க்கும்போது அலைபாயுதே மாதவன் மாதிரி இருக்கிறார். ஒருவேளை அந்தப்பக்கம் சென்று பார்த்தால் அஜித்குமார் மாதிரி இருக்கலாம்.//

இதெல்லாம் அவுங்களுக்கு தெரியுமா..?

Unknown said...

//வடிவுக்கரசி – கண், மூக்கு, உதடு, வாய், கழுத்து என அனைத்தும் சரியாய் இருந்தும் ஏனோ தமிழில் அதிகம் ஸ்கோர் செய்யாமல் போனது வருத்தமே. //

எல்லாம் இருந்தும் முக்கியமான ஒன்னு இல்லையே தம்பி...ஐ மீன் நான் கலர சொன்னேன்.