Wednesday, August 31, 2016

இரண்டு மருத்துவர்களும் ஒரு செங்கல் சைக்கோவும் ! - கழுகார்

பாரதிக்கு கண்ணம்மா... நீயெனக்கு உயிரம்மா... பழைய விஜய்ண்ணாவைப் போல தலையை ஆட்டியபடி உள்ளே நுழைந்தார் கழுகார்.


என்ன கழுகாரே ஆளையே பார்க்க முடியவில்லை என்றோம்.

பறவையோட குணமே பறக்குறதுதான்... அதை பறக்க விடுங்கம்மா.. என்றபடி ஏற்கனவே யோசித்து வைத்திருந்த டயலாக்கை பேசிவிட்ட பெருமையில் மிளிர்ந்தார்.

சரி சரி விஷயத்துக்கு வாங்க... என்றோம்.

மாசக்கடைசி. கோஹிபா கட்டுப்படியாகவில்லை. சாக்லேட் ஃப்ளேவர்ட் சிகார் ஒன்றை பற்ற வைத்தபடி தொடங்கினார் கழுகார்.

ஒரு முன்னாள் பதிவர்... என்றபடி இழுத்தார்.

பதிவருன்னாலே முன்னாள் தானே... மொக்கை போடாம விஷயத்துக்கு வா கழுகே... செல்லமாக கண்டித்தோம்.

மனுஷனுக்கு ஏழு கழுத வயசாகியும் காதல் பிசாசு பிடிச்சு ஆட்டிண்டிருக்கு...

ஏன் வயசானா காதல் வரக்கூடாதா ஓய்...

தாராளமா வரலாம்... ஆனால் மனுஷன் செய்யுற வால்த்தனத்துக்கு ஒரு அளவில்லையோ... ஆ ஊன்னா தண்ணியப்போட்டு சலம்புனா எப்படி ? அதுவும் ஃபேஸ்புக்கில்...

அதுகூட பரவாயில்லை... அவருடைய காதலி என்று ஒரு கேரக்டர் வருதில்லையா... அதுவே ஒரு புனைவாம்...

ஆஹான் என்றோம் கோரஸாக...

பழைய நிஜக்காதலியின் பொறாமைத்தீயை கிளறி மீண்டும் இன்பமாய் குளிர் காய்வதே அய்யாவின் திட்டமாம்...

ஓஹோ

அது மட்டுமில்லை... கருப்பன் குசும்புக்காரன் சைடுல மீன்குழம்புக்கும் ஆசைப்படுறானாம்... அது நெத்திலியா இருந்தா பரவாயில்லை திமிங்கலமாச்சே...  தூண்டில்ல சிக்குமா...?

போதும் நிறுத்தும்... புதிய செய்தியை கொண்டுவரச் சொன்னால் இறந்து புதைத்த செய்தியை கொண்டு வருகிறீர்களே... இதான் உங்க டக்கா...? என்று எக்காளமிட்டோம்.

கழுகாரின் முகம் வாடியது.. நீண்ட இழுப்பு ஒன்று இழுத்தார்... சிகார் முனையில் கங்கு மிளிர்ந்தது...

குறும்படம் எடுக்கக் கிளம்பிய நம் பதிவுலக மணிரத்னங்களின் கதை தெரியுமா...?

ஓ... அது ரொம்ப பழைய கதையாச்சே...

இல்லை... இது புதுக்கதை... சாக்லெட் புகை அறையெங்கும் படர்ந்தது.

யாருக்கும் பயப்படாத அந்த பதிவர், ஒரு பயங்கரமான ஸ்க்ரிப்ட் வைத்திருக்கிறாராம்... பதிவுலகில் லந்து பண்ணிக்கொண்டிருக்கும் இரண்டு மருத்துவர்களையும் ஒரு சைக்கோவையும் மனதில் வைத்து அந்தக்கதையை புனைந்திருப்பதாக அவரே சொல்கிறார்...

இரண்டு மருத்துவர்கள் என்றால் அவங்க ரெண்டு பேர்தானே என்றோம் ஜாடையாக.

கண்ணடித்து உறுதி செய்தார் கழுகார்.

சரி கதைய சொல்லுங்கோ என்று கொக்கி போட்டோம்.

அத மட்டும் வெளிய சொல்லக்கூடாதுன்னு டைரக்டர் சத்தியம் வாங்கியிருக்கார்... ஆனா அதிர்ச்சி மதிப்பீடுகள் இருக்குமாம்...

சரியா போச்சு போங்க...மருத்துவ சமூகத்தை யாராச்சும் கீறிவிட்டுட்டா தஞ்சாவூரு பொம்மையாட்டம் தவிப்பாரே அந்த டாக்டர்...

அவராச்சும் பரவாயில்லை... மூக்கு புடைப்பானவர்கள் ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று ஏராளமான ஆங்கில ஜார்கன்ஸ் கலந்து, புல்லட் பாயிண்ட்ஸ், புள்ளி விவரங்கள் போட்டு சைக்காலஜிக்கல் அனாலிஸிஸ் செய்வாரே அந்த இன்னொரு டாக்டர் அதை நினைத்தால்தான் எனக்கு கெதக்கென்று இருக்கிறது... கழுகாரின் கண்களில் மரண பயம் தெரிந்தது.

சைக்காலஜிக்கல் அனாலிஸிஸ்ன்னு சொன்னதும் ஞாபகம் வருது... கதையில் ஒரு சைக்கோவும் இருக்குறதா சொன்னீங்களே... அது யாராக்கும், பதிவுலகில் நிறைய சைக்கோக்கள் இருக்கிறார்களே... நைஸாக நூல்விட்டு பார்த்தோம்.

சிகாரை ஆஷ்ட்ரேயில் பொசுக்கிவிட்டு, தலைமுடியை சிலுப்பியபடி விருட்டென்று பறந்தார் கழுகார்...!

Saturday, December 13, 2014

லிங்கா - நம்பலாமா ? நம்பப்படாதா ?

BEWARE OF NUDITY CONTENT...!

“யப்பா... லிங்கா படம் நல்லா இருக்கா இல்லையா ? பாக்கலாமா ? வேணாமா ? நம்பலாமா ? நம்பப்படாதா ? இது எனக்கு தெரிஞ்சாகணும்...”

“இதுக்கு ஏன்பா இத்தனை தடவை திரும்புற. இதுக்கு ரஜினி ஃபேன்சே தேவலை போலிருக்கே...”

“முருகேஷா... லிங்கா மொக்கை’ங்குறத சில அறிகுறிகள வச்சி கண்டுபிடிச்சிடலாம்...”

“எப்படி...?”

“தூ....ரத்துல இருக்குற நாட்டுலருந்து FDFS பார்த்து விமர்சனம் போடுறவங்க, வழவழ கொழகொழ’ன்னு எழுதி கடைசியா ரஜினிக்காக பார்க்கலாம்’ன்னு முடிச்சிருப்பாங்க.”

“யப்பா... நெஜமாலுமே இதே மாதிரி அங்க எழுதியிருக்காங்கப்பா...”

மணிமாறன் – ரஜினிக்காகவும் அந்த பிளாஷ்பேக்குக்காகவும் ஒரு தடவை பார்க்கலாம். (வேறென்ன... அப்படித்தான் முடிக்கணும்).

Filmibeat ஷங்கர் – ரஜினி படத்தைப் பொறுத்தவரை, அவரது ரசிகனுக்கு எதுவுமே குறையில்லை. அவர் ‘வந்தா மட்டும் போதும்தான்’. ஆனால் மற்றவர்களுக்கு...?

“நான் கேட்டேனா...?”

“இல்ல”

“அப்புறம், விமர்சனம் எழுதச் சொன்னா ரஜினி ரஜினி ரஜினி ரஜினி... ரஜினி ரஜினி ரஜினி ரஜினி’ன்னு இம்போசிஷன் எழுதியிருப்பாங்க...”

“யப்பா... இந்த மாதிரியும் அங்க எழுதியிருக்காங்கப்பா...”

ஆரூர் மூனா – லிங்காவைப் பற்றி வேறென்ன சொல்ல. ரஜினி ரஜினி ரஜினி மட்டும்தான் படமே.

செங்கோவி – பாஸிடிவ் பாயிண்ட்ஸ்: சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார்

“நான் கேட்டேனா...?”

“இல்ல”

“கதே மட்டும் கேக்கணும்... நோ க்ராஸ் கொஸ்டின்ஸ்... கேட்டா ? என்னதிது...?”

“லிங்கம்”

“பிச்சு எறிஞ்சிடுவேன்...”

“அவ்வ்வ்வ்வ்...”

“அப்புறம், ப்ர்ர்ர்ர்ர்...”

“என்னாது...?”

“ப்ர்ர்ர்ர்...”

“என்னா...து...?”

“வயித்தால போற சத்தம்...”

“கே.எஸ்.ரவிகுமாருக்கு வயித்தால போயிடுச்சு. அதனால தான் படம் சரியா எடுக்கல. ஏ.ஆர்.ரகுமான் பேக்குல கட்டி வந்ததால நின்னுக்கிட்டே மொக்கையா மியூசிக் போட்டிருக்காரு’ன்னெல்லாம் எழுதுவாங்க...”

“அய்யோ... வயித்தால போற சத்தமும் கேக்குதுப்பா...”

ArulSelvan - K.S. Ravikumar should be banned from taking tamil movies. After Barasuram, Linga is the worst BGM (even some songs) scored by Rehman.

AaVee Kovai - Lingaaaaaawww! யாருப்பா படத்தோட எடிட்டர் ?

“நான் கேட்டேனா...?”

“இல்ல”

“அப்படியே கொஞ்சம் கொஞ்சமா ஒன்னு ரெண்டு நாள்ல, நெகடிவ் ரிவ்யூஸா கெளம்பும்...”

“யப்பா... கெளம்பிருச்சுப்பா கெளம்பிருச்சுப்பா...”

“எங்க...?”

“அங்க”

AndichamyGA – பரமா... சாவு பயத்தை காமிச்சுட்டாய்ங்கடா... மூணு மணிநேரம் மூச்சுத் திணற திணற அடிச்சாய்ங்கடா...!!

SathishTamilselvan - Comparatively Baaba was better.. If this had been made without Rajini, may be by Vijay, it'd have been laughed at..

“நீ ஏன் விமர்சனத்தல்லாம் படிச்சிட்டு சிரிக்கிற...?”

“நான் சிரிக்கலைய்யா... ஊரே கைகொட்டி சிரிச்சிட்டிருக்குய்யா...”

Friday, May 16, 2014

பரோட்டா பாதி... சால்னா மீதி...! – 1

ஒரிஜினல்: சாத்தான் பாதி… கடவுள் மீதி – 1!

பரோட்டா சூரியின் காமெடியை ரசிக்காதவர்களே இல்லை. நானும் சூரி ரசிகன் தான். ஆனால், சூரியிடம் நான் காமெடியை மட்டும் ரசிக்கவில்லை. வேறு சில பண்புகளையும் ரசிக்கிறேன். முதல் விஷயம், அவருடைய பேச்சு. அவர் பேசும்போது சுமார் பத்தடி தூரத்திற்கு எச்சில் வந்து தெறிக்கும். அச்சமயத்தில் அவருக்கு முன்னால் சென்று அமர்ந்துகொண்டால் குற்றால அருவியில் குளித்தது போல இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் பலரும் இந்த நூதன குளியல் முறையை பின்பற்றுகின்றனர். 

கல்லூரி பருவத்தில் நான் பரோட்டாவுக்கு மாவு பிசைய ஆசைப்பட்டேன். ஒரு நாளில் குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் ஷகிலா படம் பார்க்க வேண்டும் என்றார் மாஸ்டர். விட்டுவிட்டேன். ஏனென்றால், நான் ஏற்கெனவே ஏழெட்டு மணி நேரம் என் படிப்புக்காகச் செலவிட்டுக் கொண்டிருந்தேன். நான் சொல்வது சரோஜா தேவி புத்தகங்கள். ஸ்க்ரூ டிரைவரை போல எழுத்தாளனாக வேண்டும் என்றால் உலக இலக்கியத்தையெல்லாம் படித்தாக வேண்டும் என்ற வெறி. பைத்தியத்தைப்போல் படித்தேன்.

சூரி அதே வார்த்தைகளைச் சொல்லுகிறார். ஐம்பது பரோட்டாக்களை ஒரே மூச்சில் சாப்பிட வேண்டும் என்றால் பரோட்டா மீது பைத்தியமாக இருக்க வேண்டும் என்கிறார்.

பரோட்டா சூரியை போலவே அடத்தூ பேசும்போதும் எச்சில் தெறிக்கும். அடத்தூ சூரியை விட நன்றாக தூறல் போடுவார் என்று வானிலை நிபுணர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அடத்தூவுக்கு சூரி அளவிற்கு தூரமாக துப்பும் மனோபலம் இல்லை. சாந்தியும், நித்யாவும் அவரை வேறு திசையில் இழுத்துக்கொண்டு விட்டார்கள். அந்த determination மனோபலத்தைப் பெறுவது மிகவும் சுலபம். காறி உமிழ்ந்தால் அது கைகூடும்.

சூரி வெண்ணிலா கபடிக்குழுவில் பரோட்டா சாப்பிடுவதற்கு முன்பு சால்னாவை கையில் மொண்டு குடிக்கிறார் அல்லவா ? அதற்கு அவர் சொன்ன விளக்கம்: நான் இப்படி இருப்பதற்கு இந்த பரோட்டாதான் காரணம். இது எனக்குக் கோவில் மாதிரி. ஆங்கிலத்தில் gravy என்பார்கள். அது மட்டும் இல்லையென்றால் பரோட்டாவை மொஜக் மொஜக் என்று சாப்பிட முடியாது. அப்படியானால் நம்முடைய வாழ்நாள் முழுவதும் நாம் சால்னாவை வணங்க வேண்டாமா ? சூரியிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அற்புதமான பண்பு இது. கிராமப்புறங்களில் குழம்பை அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன்பு ஒரு கை எடுத்து குடிப்பதை பார்த்திருக்கலாம். சாம்பாரை சட்னியோடு குழைத்து இட்லியில் பெனஞ்சு அடிக்கிறோம். அதற்கான மன்னிப்புக் கோருதலும் வணக்கமுமே அது.

ஆனால், இன்றைய தினம் இந்தியர்களாகிய நாம்தான் சால்னாவை அதிகம் அவமதிக்கிறோம். தமிழர்களுக்கே அதில் முதல் இடம். சால்னா செழிப்பாக இருக்க வேண்டுமென்றால் பரோட்டாவை அதிகம் சாப்பிட வேண்டும். ஆனால், நாமோ நான், குல்ச்சா என்று வட இந்திய டிபன் ஐட்டம்களை அடித்து நொறுக்குகிறோம். தம் வாழ்நாளில் பரோட்டாவே சாப்பிடாத ஆட்கள் பலர் தமிழகத்தில் இருக்கின்றனர். மேற்கத்திய நாடுகளுக்குச் செல்லும் நம்முடைய பார்வையில் படும் முதல் விஷயம் அங்குள்ள ஃபிகர்கள் தான். அங்குள்ள பார்ன் நடிகைகள் எல்லாம் தமக்கு அளிக்கப்படும் சொற்ப அளவிலான திரவ உணவினை வீணடிக்காமல் உட்கொள்வதை கவனித்திருக்கிறீர்களா ?

முன்பெல்லாம் முனியாண்டி விலாஸ்களுக்கு சென்றால் மாவு பிசைவதற்கு என்று ஒரு பெண்ணை வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் மாவை பிசைந்துவிட்டு கடப்பா கல்லில் போட்டு அடிக்கும்போது தொப் தொப் என்று ஒருவித சப்தம் வரும். அதை பார்க்கும்போது எனக்கு எனது தலையில் மசாஜ் செய்வது போல இருக்கும். நன்றாக தூக்கம் வரும். இப்பொழுதெல்லாம் கொழுப்பெடுத்த தடியன்களை வைத்து ஒரு பாடல் முடிவதற்குள் மாவு பிசைந்து முடித்துவிடுகிறார்கள். என் கல்லூரி பருவத்தில் அந்த பரோட்டா மாஸ்டர் சொன்னது எனக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது. ஆனால் ஷகிலா படங்களுக்கும் மாவு பிசைவதற்கும் என்ன சம்பந்தம் என்றுதான் இன்றுவரை புரியவில்லை. இன்னொரு புரியாத சமாச்சாரம் தற்காலத்தியது. சன்னி லியோனி என்று ஒரு நடிகை இருக்கிறாரே, அவருக்கும் திண்டுக்கல் லியோனிக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா ?

Tuesday, April 29, 2014

சோத்துக்காடை - பால கிருஷ்ண பவன், சித்தார்த்புதூர், வைகோ





ஒரிஜினல்:

http://www.sangkavi.com/2014/04/blog-post_28.html

  

ரீமேக்:  

கோவைக்கு பின்புறம் நேற்று உதயமாகி இருக்கும் வைகோ மாவட்டத்தில் புதிதாய் முளைத்துள்ள பாலகிருஷ்ணா பவன் 150 வருட புகழ் பெற்றது. விலையில்லா சைவ உணவுகளை விட இங்கே உணவின் விலை மிக குறைவு என்று டேபிளில் அடித்து சொல்லலாம். இந்த உணவகத்திற்கு நான் 81 மாதங்களாக சென்று வந்து கொண்டிருக்கிறேன் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியே ஹோட்டல் போல இருந்தாலும் உள்ளே பார்க்கும் போதும் ஹோட்டல் போல இருப்பது இதன் தனிச்சிறப்பு. கூட்டம் அதிகமானால் தனது கல்லா சீட்டில் அமரவைத்து சாப்பிட சொல்லும் ஓனரை புகழ வார்த்தையில்லை (வாயில் கொழுக்கட்டை இருப்பதால்). கஸ்டமர்கள் ஒரு முறை சாப்பிட்ட வெள்ளி (எவர் சில்வர்) தட்டை மீண்டும் பயன்படுத்தாமல், புதிது புதிதாக வெள்ளி தட்டுகளை சப்ளை செய்வது இந்த ஹோட்டலின் சுகாதாரத்திற்கு (தட்டை) எடுத்துக்காட்டு.

சரி உணவிற்கு வருவோம் (அடிக்கடி அக்கவுண்ட் வைப்பதால் உணவு உடனே வருவதில்லை எனக்கு. சற்று பொறுமை காக்க). ஆஹா..இதோ காலையில் ஆர்டர் செய்த உணவுகள் மதியம் வந்துவிட்டன. இனிப்பு கொழுக்கட்டை, ஸ்வீட் கொழுக்கட்டை, இலவச சேவை, சில்லி பையன் கோபி மற்றும் சோத்துக்காடை. காடையை தனியே வறுப்பதில்லை இங்கே. தண்ணீர் தேடி அலைந்து கேராகி விழும் காடைகளை பிடித்து அப்படியே கையால் நசுக்கி குழம்பாக்கி சோற்றில் ஊற்றுவது இந்த ஹோட்டலின் ஸ்பெஷல். அதுதான் சோத்துக்காடை.

இங்கு மினி இட்லி சப்ளை செய்யும் விதமே அலாதிதான். மாதம் முதல் தேதி முதல் மாதக்கடைசி வரை ஒரு இட்லிக்கான பில்லை மட்டும் கட்டிவிட்டு டிப்ஸ் தராமல் டேக்கா குடுப்பவன் என்பதால் சப்ளையருக்கு நான் மினி இட்லி கேட்டால் மட்டும் காண்டு ஏறி விடும். தட்டில் இருக்கும் ஒற்றை இட்லியை ஓங்கி குத்துவார். அது மேலே இருக்கும் பேனில் பட்டு தெறித்து எட்டு பீஸாக மீண்டும் என் தட்டில் வந்து விழும். இதோ மினி இட்லி தயார். ஏன் உங்கள் கடையில் சில்லி (குணம் கொண்ட) கோபியை எல்லாம் வேலைக்கு வைக்கிறீர்கள் என்று ஓனரை கேட்டால் முறைக்கிறாரே தவிர இதுவரை பதில் சொன்ன பாடில்லை. தன்மையான கேரக்டர் உள்ள கோபி யாராவது இருந்தால் உடனே ஹோட்டல் ஒன்றை அணுகவும்.  


இந்த ஹோட்டலில் எல்லா உணவுமே வீட்டு சுவையுடன் இருக்கிறதே என்று ஒரு நாள் சப்ளையரிடம் ஆச்சர்யத்துடன் கேட்டேன். ''உனக்கு பக்கத்து சேர், டேபிள்ல உக்கார்ற ஆளுங்களோட லஞ்ச் பேக் அடிக்கடி காணாம போகுதுன்னு கம்ப்ளைன்ட் வந்துட்டே இருந்தது. இப்பதான் விஷயம் புரியுது. அவங்க வீட்டு சாப்பாட்டை நீ ஏன்யா சாப்பிட்ட''என்று ஈவ்னிங் போண்டா, பஜ்ஜிக்கும் சேர்த்து நித்தம் நான்கு வேலை மொத்தம் 30 நாட்கள் மாவாட்ட விட்டு விட்டார்கள்.  

வைகோ வந்தால் மறக்காமல் இந்த ஹோட்டலில் சாப்பிடவும். பரூக் பீல்ட்ஸ் மால் கார் பார்க்கிங் ஓரம் இந்த சோத்துக்காடை உள்ளது. எதிரில் இருக்கும் கார்களை வைத்தே இது எவ்வளவு பிரபல காடைக்கடை என்பதை நீங்கள் கணிக்கலாம். மாலை உணவகம்  7 முதல் 11 வரை வரை. காசு தந்து சாப்பிடும் வாடிக்கையாளர் அனைவருக்கும் ஆளுயர மாலை அணிவித்து சோறு போடுவதால் 'மாலை' உணவகம் என்று இந்த ஹோட்டல் பெயர் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. 

8 மணிக்கு மேல் சென்றால் 'க்யூ' வில் நின்றுதான் சாப்பிட வேண்டும். ஏனென்றால் A முதல் P வரை கார் பார்க்கிங்கிற்கான இடம். Q வில்தான் இந்த கடைக்கு இடம் ஒதுக்கி உள்ளார்கள். அங்கு சாப்பிடும் கூட்டத்தை பார்க்கும் போதுதான் தெரியும் இங்கேயும் சாப்பிட்டு விட்டு வீட்டிலும் போய் சோறாக்கி சாப்பிடுபவர்கள் யாரும் இல்லையென்று. 

பெயர்:   பால கிருஷ்ண பவன், சித்தார்த்புதூர், வைகோ.
இடம்: லேடீஸ் மற்றும் மகளிர் ஹாஸ்டலில் இருந்து தப்பி ஓடும்போது உதை வாங்கி 'தேவுடா' என கத்தும்போது வரும் கோவில் தாண்டி அட்மிட் ஆகும் இராமகிருஷ்ணா மருத்துவமனை செல்லும் வழி. 

எச்சரிக்கை: 'லட்டுக்குதான துட்டு, துட்டுக்குதான் லட்டு' என்று ஓட்டல் முதலாளியிடம் லந்து செய்தால் போண்டா மாஸ்டர் உசிலைமணி கையால் சிறப்பு அர்ச்சனை செய்யப்படும்.  



Friday, January 24, 2014

நீ சப்தம் - தூக்கம் தொண்டையை அடைக்கிறது


Roughly Note -The below post is inspired by:

http://www.nisaptham.com/2014/01/blog-post_23.html




பண்புள்ள நல்லபுள்ள வாவ்.மணிகண்டன் அவர்களுக்கு,

இரவு சாய்ந்து இருட்டு வரும்போது வரும் கொடூரமான விஷயம் உண்டெனில் அது தமிழிசை சௌந்தர்ராஜன் அக்கா கலந்து கொள்ளும் விவாத நிகழ்ச்சியை பார்த்துவிட்டு தூங்கப்போவது அல்ல. தூங்கிய சில மைக்ரோ நொடியில் வரும் எனது சுய சொந்த குறட்டை சத்தம்தான். எட்டுக்கு ஏலே முக்கால் ரூமில் 4 நண்பர்களோடு தூங்குகையில் நித்தம் குறட்டை தொண்டையை அடைக்கிறது. 'அடிங் ^&*@#$. ஏன்டா டைப் ரைட்டிங் மிஷின்ல எல்லா கீயையும் அழுத்தி அப்பறம் ஒவ்வொண்ணையும் படக்கு படக்குன்னு ரிலீஸ் செய்றா மாரி, கண்டத தின்ன காட்டுக்கரடி கடமுடன்னு கக்கூஸ் போற மாரி டிசைன் டிசைனா கொரட்ட விட்டு கொல்ற" என்று நிசப்த விரும்பிகள் என் உசுரை எடுக்கிறார்கள். 

சில நேரம் என் குறட்டை சத்தத்தை கேட்டு நானே பயந்து எழுந்துள்ளேன் என்றால் அதன் அபார வீரிய வில்லங்கம் எப்படி இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். நீ சப்தம் என்று சொல்லும் நண்பர்கள் நிசப்தம் என்று அமைதி கொள்ள ஏன் நீங்கள் என் போன்ற புதியதாய் குறட்டை விடுவோருக்கு அறிவுரை தரக்கூடாது. இதற்கு முன்பு தாங்கள் பரிசளித்த ஹரி உரை நூலில் இருந்த அறிவுரை எப்பயனையும் அளிக்கவில்லை தோழர். உதவுங்கள் ப்ளீஸ். ப்ளீச் ப்ளீச் என்று சோடா அடித்து என்னை எழுப்பும் செலவை மிச்சம் செய்ய ஹெல்ப் மீ ப்ளீஸ்.

நன்றி,
நஸ்ருதீன் ஷா(ருக்).

                                              ***


அன்புள்ள நஸ்ருதீன் மற்றும் ஷாருக்,

தூக்கம் தொண்டையை அடைப்பதெல்லாம் கும்பகர்ண காலத்து கான்சப்ட். எனக்கு அப்படி ஒரு நிலை அரிதாகவோ/அடிக்கடியோ வந்ததுண்டு. யூரியா மாறிய காய்கறி தின்றால் கூட இந்நிலை வரலாம். எனவே ரிலையப்ல் ரிலையன்ஸ் கடையில்தான் வாங்கினீர்களா என்று செக் செய்க. 

''அடிங் ^&*@#$. ஏன்டா^#$%" என்று உங்கள் நண்பர்கள் கயுவி ஊற்றுகிறார்கள். என்னிடம் ஒரே ப்ளோரில் கொத்து கொத்தாக குறட்டை விடும்  ஆபீஸ் கொத்தடிமைகள் ''உன் சவுண்ட் வர வர நெம்ப ஜாஸ்தியா இருக்கே. பொத்திட்டு பட்றா ^#$%" என கெஞ்சுகிறார்கள். அம்புடுதேன். சென்னையில் இருந்து சைதாப்பேட்டை ஆபீஸ் செல்லும்போதெல்லாம் செக்யூரிட்டி ஷட்டரை திறந்த மறுநொடி கேபினுக்கு கீழ் சென்றுவிட துடிப்பேன். காரியம் தொண்டை கூட சில சமயம் விநாயக, முருகனையும் துதிப்பேன். 

இதை எப்படியோ சக சகா ஒருவன் காலை ஆப்பம் தின்னும் வேளையில் மோப்பம் பிடித்து மேனேஜரிடம் ஓதிவிட்டான்.  "அதுக்கு என் தூக்கத்த ஏன்டா கெடுத்த ம%ர்  புடு$கி" என்று அவனது பங்களா நாய் முடியை பிடித்து உலுக்கி விட்டார் அவர். 'சரி. சி.சி.டி.வி. கேமராவில் இருந்து தப்பிப்பது எப்படி?' என்றொரு இடியாப்ப சிக்கல் என் நெஞ்சில் இடியாக இறங்கியது. எனவே ஒரு நாள் இரவோடு இரவாக அந்த கேமராவில் தேவகவுடா போட்டோவை ஒட்டி விட்டேன். அதைப்பார்த்து தூங்கிய செக்யூரிட்டிகள் இன்னும் எழுந்த பாடில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


அதுபோகட்டும். குறட்டை விட்டதால் உங்கள் அறையில் மொத்தம் எத்தனை விரிசல்கள்? நீங்கள் மவுண்ட் ரோடு பக்கம் உள்ளீர்களா? அப்படி என்றால் மெட்ரோ ரயில் சுரங்கம் அமைத்ததால் விரிசல் விட்டது என்று சொல்லி உங்களுக்கு நான் நிவாரண் 90 வாங்கித்தருகிறேன். எனது 'ஸ்லீப் ஐ ஸே z/o வேடியப்பன்' புத்தகத்தை தெரியாமல் வாங்கி, பிறகு என்னிடம் ரூ. 10,000 தந்து 'நீங்களே வச்சிக்கங்க' என்று சொன்ன மெட்ரோ ரயில் எம்.டி. மங்கு(னி) சிங் என் நண்பர்தான். உங்களுக்கு நிவாரண் 90 கன்பர்ம்.

ஆனால் ஒன்று. குறட்டை ஒழிப்பு என்பது தொடர்ச்சியான பயிற்சி. தொடர்ந்து தூங்குவதால் மட்டுமே அதை ஒழிக்க முடியும். தியான நிலைக்கு செல்ல மேக் அப் போட்ட நஸ்ரியாவை திருமணம் எனும் நிக்கா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து உங்கள் கனவுக்கோட்டைக்கு இஸ்துக்குனு வர வேண்டும். 

ஓப்பனாக சொன்னால் இந்த பயிற்சியை நான் வெறித்தனமாக செய்கிறேன். ஆனால் "போங்கள். நீங்கள் மண்டை ஜாஸ்தி உள்ள முதல் பெஞ்ச் மாணவர் போல் இருக்கிறீர்கள்" என்று வெக்கப்பட்டுக்கொண்டே 'மாயி' வாம்மா மின்னலை விட வேகமாக ஓடிப்போய் விடுகிறார் நஸ்ரியா. எனவே சீ சீ இந்தப்பழம் புளிக்கும் என்றெண்ணி அவருக்கு பதிலாக அட்லீஸ்ட் சுமார் மூஞ்சி குமாரி யாராவது சிக்குவார்களா என்று விட்டத்தை பார்த்து கொட்டாவி விட பிடிக்க தொடங்கினேன். அந்நேரம் பார்த்தா பக்கத்து வீட்டு பார்த்தாவின் மனைவி ஜெயமாலினி ஆன்ட்டி சுட்ட வடையை வாயில் போட்டு விட்டுப்போக வேண்டும் அந்த கட்டைல போற காக்கா???. (சனியனே. உன் தலைல அண்டங்காக்கா பேல).

அந்த வடையை மறைப்பதாக நினைத்து கொள்ள வேண்டாமென்று தங்கள் வலது கால் சுண்டுவிரலை இழுத்து பிடித்து கேட்டுக்கொள்கிறேன்.

சத்தியமாக குறட்டையை போக்க இதுபோன்று அரட்டை அடிப்பதை தவிர என்னிடம் வேறு பெரிய சாத்திரங்கள் இல்லை. மயிலை  சத்திரம் ஒன்றின் முகவரி மட்டுமே உள்ளது. அங்கு எந்த எடுவாப்பய இம்சையும் இல்லாமல் நீ(ங்கள்) சப்தமாக தூங்கலாம்.

இதோ இப்போதே ''தந்தி'' டி.வி. மூலம் அம்முகவரியை உங்களுக்கு ஸ்க்ரோலிங்கில் அனுப்புகிறேன். மயிலை கபாலி உங்கள் முகத்தில் வரி(ஐ மீன் என்னைப்போல் 'ப்ளேடு') போடாமல் இருந்தால் உங்கள் அதிர்ஷ்டம். ஒருவேளை (அல்லது மூன்று வேளை) நீங்கள் தூங்கிக்கொண்டு இருந்தால் வெறி ஆகாமல் சில நொடி ஸ்க்ரோலிங் செய்தவாறே உருண்டு போய் அச்சேனலை பார்க்கவும்.

வாழ்த்துக்கள்,

போGO. மணிகண்டன்.
Neesaptham.calm
 .....................................................................


Posted by:

சிவகுமார் 
madrasbhavan.com 


Wednesday, December 4, 2013

புத்தகக் காட்சி பதிவின் டெம்ப்ளேட் – புதியவர்களுக்காக


அன்புள்ள வலைப்பூவிற்கு,

பழைய ஆட்கள் அடுத்த பத்தியை ஸ்கிப் செய்துவிடலாம்.

பபாஸிகாரர்கள் சர்க்கஸ் ஆட்கள் போல ஊர் ஊராக சென்று டெண்ட் அடுத்தாலும் ஜனவரி துவக்கத்தில் சென்னையில் கொட்டாய் போடுவது ரொம்ப ஸ்பெஷல். நம்ம ஆட்களுக்கெல்லாம் அது ஒரு திருவிழா மாதிரி...! சிலரெல்லாம் பத்துநாள் கண்காட்சி என்றால் பத்துநாளும் அங்கேயே பழியாய் கிடப்பார்கள். ‘சென்னை புத்தகக் காட்சி – நாள் ஒன்று’ என்று துவங்கி தினசரி பதிவு போடுவார்கள். இதுல பியூட்டி என்னன்னா நம்ம ஆட்கள் வருடா வருடம் எழுதுகிற புத்தகக்காட்சி பதிவில் எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கும். சொல்லப்போனால் கிட்டத்தட்ட அதே பதிவை தலைப்பில் 35, 36’ன்னு நம்பர் போடுவாங்களே... அதை மட்டும் மாத்தி போஸ்ட் போடுவாங்க. அந்த பதிவோட டெம்ப்ளேட்டை தான் இங்கே சொல்லித்தர போகிறேன். முற்றிலும் புதியவர்களுக்காக.

முதல் பத்தி, ஆரம்பப்பள்ளி பருவத்தில் டாபிக் கொடுத்து கட்டுரை எழுதச் சொல்வார்களே நினைவிருக்கிறதா...? அதுபோல ‘புத்தகக்காட்சியும் நானும்’ என்கிற தலைப்பில் பத்து வரிகளுக்கு மிகாமல் ஒரு பத்தி எழுத வேண்டும். அதாவது, நீங்கள் எந்த ஆண்டிலிருந்து புத்தகக்காட்சி செல்கிறீர்கள்...? புத்தகக்காட்சிக்கும் உங்களுக்குமான இணக்கம் குறித்தெல்லாம் எழுதலாம். முக்கியமாக, புத்தகக்காட்சி முந்தைய ஆண்டுகளில் கா.மி. கலைக்கல்லூரியிலும், புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றதையும் குறிப்பிட்டு எழுத வேண்டும். 

அடுத்த பத்தியில், பு.கா அரங்க வாயிலிலிருந்து அரங்கம் வரை நீங்கள் நடந்து வந்ததை விவரிக்கலாம். எந்தெந்த எழுத்தாளர்களுக்கு தட்டி வைக்கப்பட்டுள்ளது...? எந்தெந்த ஜீ தமிழ் ஆண்ட்டிகள் பதாகைகளில் பல்லிளிக்கிறார்கள்...? எவ்வளவு கூட்டம் வந்திருந்தது...? சாலையிலிருந்து எவ்வளவு தூரம் நடக்க வேண்டியிருக்கிறது...? போன்றவைகளை குறித்துக்கொள்ளவும். அதன்பிறகு, சமகாலத்தில் மக்களிடையே வாசிப்பு குறைந்துவிட்டது. வெறும் ஆனந்த விகடன், குமுதம் மட்டும் படிக்கிறார்கள் என்பது போல எழுதி ஜல்லியடிக்கலாம். 

மெயின் மேட்டருக்கு வருவோம். முதல் வேலையாக மீனாட்சி புத்தக நிலையம் சென்று அங்கிருக்கும் சுஜாதாவின் மலிவு விலை புத்தகங்களை மொத்தமாக மூட்டை கட்டி வாங்கிவிட வேண்டும். வாங்கி அதை கமுக்கமாக வீட்டில் வைத்துவிட்டு வலைப்பதிவில் அதைப்பற்றி ஜம்பமடிக்கலாம். நாம படிக்கப்போறது ஒரு புஸ்தகம். எதுக்காக மூட்டை கட்டணும் என்றெல்லாம் கேட்கப்பிடாது. ஆனால் அங்கே இருக்கும் புஸ்தகங்களை காலி செய்துவிட்டோம் என்று உறுதியாக தெரிந்தபிறகு வலைப்பதிவில் இந்த மாதிரி இந்த மாதிரி ஸ்டால் நம்பர் 68ல் விற்பனை செய்யப்படுகிறது என்று ஒரு தகவல் கொடுக்கலாம்.

புத்தகக்காட்சி அலைச்சலில் உங்களுக்கு ஒன்னுக்கு வரலை என்றோ இளநியில தண்ணி வரலை என்றோ கவலைப்பட வேண்டாம். இருக்கவே இருக்கிறது லிச்சி ஜூஸ். ச்சே என்னதான் காலம் மாறிக்கிட்டே போனாலும் இந்த லிச்சி ஜூஸ் மட்டும் மாறாம இருக்கு பாத்தியா...? என்று நன்றாக வியாக்கியானம் பேசலாம். வலைப்பதிவில் லிச்சி ஜூஸ் எவ்வளவு...? எங்கே கிடைக்கிறது...? என்ற தகவலைக் கொடுத்து லிச்சி ஜூஸ் வாங்கலையோ லிச்சி ஜூஸ் என்று கூவலாம். கவலை வேண்டாம் லிச்சி ஜூஸ் விற்பனையாளர் பத்து சதவிகித லாபத்தை உங்களுக்கு கொடுத்துவிடுவார். ஆனந்த விகடன் மாதிரி மரியாதை தெரியாத ஆளு இல்லை.

அப்படியே கூடாரத்தை ஒருமுறை சுற்றிவந்து விட்டு பாப்பா ரைம்ஸ் கடைகள், வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி, புதினா சட்னி கடைகள், விகடன், கிழக்கு என்று ஒரு அப்டேட் கொடுக்கலாம். இதில் முக்கியமான பகுதி என்னவென்றால், சமையல் குறிப்பு புத்தகங்கள் வாங்கும் அங்கிள்களை’யும், கோல புத்தகம் வாங்கும் ஆண்ட்டிக்களையும் சரமாரியாக கலாய்த்திட வேண்டும்.

இன்னொரு ப்ரோமோவை மறந்துவிட்டேன். காமிக்ஸ்...! பழைய போனியாகாத காமிக்ஸ்களை மூட்டை மூட்டையாக கட்டி காம்போ பேக்குகள் போல வைத்து பேக்குகள் போல இருப்பவர்கள் தலையில் கட்டுவார்கள். அதனை மறந்தும் வாங்கிவிடக்கூடாது. ஆனால் இந்த ஸ்டால் எண்ணில் காமிக்ஸ் விற்கப்படுகிறது. குறைந்த அளவே ஸ்டாக் உள்ளது. முந்துபவர்களுக்கே முன்னுரிமை என்று வலைப்பதிவில் அடித்துவிடவும். ஆனால் இன்னும் பத்து வருடங்கள் ஆனாலும் அந்த பழைய காமிக்ஸுகள் தீரவே தீராது. இதிலும் விளம்பரம் செய்பவர்களுக்கு கமிஷன் உண்டு.

முக்கியமான பகுதி, டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டால் வாசலுக்கு சென்று நின்றுக்கொள்ள வேண்டும். அங்கே போகிற வருகிறவர்களை எல்லாம் பிடித்து நீங்க பட்டர்ஃபிளை தானே, யேய் அங்கப் பாரு பிபாஷா, பைத்தியக்காரன் வந்திட்டாரு, பிச்சைக்காரன் எங்கப்பா....? என்றெல்லாம் பொது ஜனத்துக்கு புரியாத பாஷையில் பினாத்திக்கொண்டு இருக்கவேண்டும். கடந்து செல்பவர்கள் நீங்கள் கண்டிப்பாக செலிபிரிட்டியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு அலப்பறை கொடுக்க வேண்டும். இறுதியாக வேடியப்பன் சுடுதண்ணி பிடித்து மூஞ்சியில ஊத்துற வரைக்கும் காத்திருந்துவிட்டு நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் சுடுதண்ணி சம்பவம் முதற்கொண்டு வலைப்பதிவில் எழுதிவிட வேண்டும்.

அறச்சீற்ற பகுதி. பார்க்கிங் லாட்டில் பயங்கர கூட்டம், வண்டியை நிறுத்தவே இடமில்லை, அநியாயத்திற்கு கட்டணம் வசூலிக்கிறார்கள், அரங்கத்திற்குள் காற்றோட்டம் இல்லை, மக்கள் திரளை ஆர்கனைஸ் செய்வதில்லை, குடிநீர் வசதி போதுமானதாக இல்லை, கழிவறைகள் எங்கேயிருக்கிறது என்றே தெரியவில்லை. ஃபுட்கோர்ட்டில் காசை கொள்ளையடிக்கிறார்கள், நான்கு போண்டா ஐம்பது ரூபாய் என்பது வரைக்கும் பொங்கித்தள்ள வேண்டும்.

இறுதியாக, நீங்கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியல். கவனம்: பட்டியலில் வெளியிடப்போகும் புத்தகங்களை நீங்கள் வாங்க வேண்டும் என்றோ வாங்கினால் படிக்க வேண்டும் என்றோ அவசியமில்லை. சும்மா போட வேண்டியது தான். அதுக்காக வாழைக்காய் பஜ்ஜி செய்வது எப்படி...?, வல்லாரைக் கீரை தரும் பலன்கள் என்றெல்லாம் லுச்சாத்தனமாக லிஸ்ட் போடக்கூடாது. புத்தக டைட்டில்களை படித்ததும் அவனவன் கழிந்துவிட வேண்டும். உதாரணமாக, முட்டை போண்டாக்கள் உருண்டையாகத்தான் இருக்கின்றன, ஒரு ஆயாவும் ஆந்தையும், கரப்பான்பூச்சிகளை புணர்ந்தவன் போன்ற தலைப்புகளை லிஸ்ட் போடலாம்.

Get ready folks...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Thursday, November 14, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்


ஓநாயும் ஆட்டுக்குட்டியும் வெளிவந்து ஒன்றரை மாதங்கள் ஆனபிறகு நேற்று அதனைப் பற்றி மூன்று அருமையான கட்டுரைகள் படிக்கக் கிடைத்தன.

1. வெகுளித்தனமல்ல அறியாமையின் கொடூரம் – ராஜன் குறை (காட்சிப்பிழை நவம்பர் 2013)
2. ஓநாயும்ஆட்டுக்குட்டியும் தவளைகளும் – ரோஸாவசந்த் (காட்சிப்பிழை நவம்பர் 2013)

மூவருக்கும் ‘மூக்கு’ புடைப்பாக இருக்கக்கூடும் என்பது என்னுடைய ஆகச்சிறந்த அவதானிப்பு. ஏன் சொல்கிறேன் என்றால் மூன்றுமே நல்ல கட்டுரைகள் என்றாலும் படித்ததும் சட்டென புரிந்துக்கொள்ள முடியாத அளவிற்கு ‘சொயட்டி சொயட்டி’ எழுதியிருக்கிறார்கள். யாருக்குமே புரியாம எழுதி அப்படி என்னடாப்பா சாதிக்க போறீங்க ? சுரேஷ் கண்ணன் நம்மாளு தான். முன்பெல்லாம் நல்லாத்தான் எழுதிக்கொண்டிருந்தார். யாரோ அவரை உயிர்மை, தயிர்மை’ன்னு செமயா ஏத்தி விட்டிருக்காங்க. இப்பல்லாம் மனிதர் புல்ஸ்டாப் வைக்காம ஒரே வாக்கியத்துல ஒரு நான்கு பக்க கட்டுரையை கட்டமைக்க முயன்றுக்கொண்டிருக்கிறார்.

சரி, கம்மிங் டூ த மேட்டர். நாம் பார்க்கும் திரைப்படங்கள் எதார்த்த வாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பதையே நம்மில் நிறைய பேர் விரும்புவோம். ஃபேண்டசி, ஹாரர் போன்ற சில ஜானர்களை தவிர்த்து மற்ற படங்களில் லாஜிக் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால், பெரும்பாலும் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் சினிமாக்களில் அது இருப்பதே இல்லை. இல்லையென்பது கூட பரவாயில்லை, லாஜிக் இல்லையென்பதை சுட்டிக்காட்டுவதே பெரிய தவறாகி விட்டது. இணையத்தில் புழங்குபவர்களே ஏதோ இயக்குநருடன் ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள் போல தம் கட்டி வாதாடுகிறார்கள். மாஸ் படத்தில், மசாலா படத்திலெல்லாம் லாஜிக் பார்க்கக்கூடாதாம் ! எக்கேடோ கெட்டு ஒழியட்டும்.

ராஜன் குறை தன்னுடைய கட்டுரையில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருக்கிறார் :- தர்க்கரீதியான கேள்விகளையெல்லாம் வெகுஜன சினிமாவில் கேட்கக்கூடாது என்பது நியாயம்தான். ‘சிவாஜி தி பாஸ்’ படத்தில் தன்னைத்தானே எலக்டிரக்யூட் செய்துகொண்ட ரஜினியை அரைமணிநேரம் கழித்து நெஞ்சில் அயர்ன் பாக்ஸ் வைத்து பூப்போல ரகுவரன் காப்பாற்றவில்லையா ? அது மட்டும் நியாயமா என்று நீங்கள் கேட்கலாம். சரி அப்படிப்பட்ட மசாலா படம் தான் இது என்றால் கலையோ கலை என்று கூப்பாடு போடுகிறார்கள் என்றுதான் புரியவில்லை.

ராஜனின் மேற்கூறிய வரிகளிலிருந்து துவங்குகிறேன். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு நல்ல பொழுதுபோக்கு சித்திரம் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்துமில்லை. ஆனால் திடீரென ஏன் உலக சினிமா, கலை, பின்நவீனத்துவம் என்றெல்லாம் ஜல்லியடிக்கிறார்கள். அப்படியெல்லாம் சொல்லுமளவிற்கு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் என்னதான் இருக்கிறது எனக்குப் புரியவில்லை. மூன்று கட்டுரைகளிலிருந்தும் எனக்குத் தெரிந்த தமிழில் நான் புரிந்துக் கொண்டவைகளை மட்டும் தொகுத்து சில கேள்விகளை முன் வைக்கிறேன். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை சிலாகிப்பவர்கள் பதில் சொல்லட்டும்.

1. ஒரு மனிதன் குண்டடி பட்டிருக்கிறான். அது உடலின் ஏதோவொரு பாகத்தில் பாய்ந்திருக்கிறது. குண்டை வெளியே எடுத்து ரத்த சேதத்தை நிறுத்தி கட்டு போட்டால் உயிர் காப்பாற்றப்படும். எதற்காக spleenஐ வெளியே எடுக்க வேண்டும் ? ஸ்ப்ளீன் கோபத்தின் பிறப்பிடம் என்று தவறாக நம்பப்பட்டதன் அடிப்படையில் அது குறியீடாக இருக்கிறதா ? ஸ்ப்ளீன் என்பது ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும் உறுப்பு. அதில் போய் குண்டு மாட்டிக்கொண்டால் கடுமையான ரத்த சேதம் ஏற்படும். அந்த நிலையில் நோயாளியின் வயிற்றை அறுத்து ஸ்ப்ளீனை வெளியே எடுத்தால் ரத்த சேதம் அதிகரிக்கும். எனவே நோயாளிக்கு தேவை அவருடைய வகை ரத்தம். மாற்று ரத்தம் ஏற்பாடு செய்யாமல் ஸ்ப்ளீனில் அடிபட்டு அரைமணி நேரத்திற்கு மேல் உயிருக்கு போராடும் ஒருவனை எப்படி காப்பாற்ற முடியும் ?

2. மண்ணீரல் அகற்றப்பட்ட நபர் எட்டு நாட்களுக்குப்பின் எழுந்து நடமாடலாம் என்று படத்தில் இரு கதாபாத்திரங்கள் மூலம் சொல்லப்படுகிறது. ஆனால் உல்ஃப் ஆறாவது நாளிலேயே வெளியே வந்துவிடுவதாக கதை செல்கிறது. பிரச்சனை என்னவென்றால் உல்ப் அறுவை சிகிச்சை முடிந்து சில மணி நேரங்களுக்குள்ளாகவே சந்துருவின் வீட்டிலிருந்து வெளியேறி விடுகிறான்.

3. தன்னைக் காப்பாற்றிய சந்துரு என்கிற மருத்துவ மாணவனை வரவழைத்து, துப்பாக்கி காட்டி மிரட்டி, தன் உயிரை காப்பாற்றியனை பலவந்தமாக கடத்தி கொண்டு போகிறான்  வுல்ஃப்.  எதற்காகத்தான் அந்த பையனை கடத்துகிறான்? கதைப்படி அதற்கான தேவை என்ன? கதைப்படி வுல்ஃபின்  நோக்கம் யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல், கண்காணிப்பிற்கு ஆளாகாமல் அந்த அம்மா அப்பா ஆடுகளையும் குழந்தை ஆட்டுகுட்டியையும் அந்த 'ஹிந்திக்கார பார்ட்டி'யிடம் சேர்ப்பது; சேர்ந்து தானும் தப்பிப்பது; இடையில் கல்லறையில் ஒரு மெழுகுவர்த்தி பிரார்த்தனை. வுல்ஃப் ஆபேரேஷன் ஓய்வு நாட்கள் முடியும் முன்பு வெளியே வர மாட்டான் என்ற நம்பிக்கையில் போலீஸ் திவிரமாக கண்காணித்து கொண்டு இருக்க மாட்டார்கள். இடையில் ஆறாவது நாளே யாருக்கும் தெரியாமல் வுல்ஃப் தனது மேற்படி கடமையை முடிப்பது எளிதானது. ஆனால் அவனோ சந்துருவை கடத்துவதன் மூலம், ஒட்டுமொத்த போலீசின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி, இரவுகளில் தான் இருக்கும் இடங்களை  ஊகிக்க விட்டு, தானிருக்கும் சுற்று வட்டாரத்தில் தேடவிட்டு, மாட்டிகொள்ளும் ரிஸ்க்கை காரணமே இன்றி எடுக்கிறான்.

4. ஒரு காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் ரயிலிருந்து உடலில் காற்றடைத்த பையைக் கட்டிக்கொண்டு உல்ஃபும் சந்துருவும் குதிக்கிறார்கள். இந்த காட்சியை பார்க்கும்போது வடிவேலு மெத்தையை பாராசூட் போல கட்டிக்கொண்டு மாடியிலிருந்து குதிக்கும் நகைச்சுவை காட்சிதான் நினைவுக்கு வருகிறது. சரி, உல்ஃப் ஒரு சாகசக்காரன். அவன் அதையெல்லாம் அசால்டாக செய்வான் என்று வைத்துக்கொள்வோம். சந்துரு ? வெறும் தலையணையை மாரில் கட்டிக்கொண்டு குதித்தால் மூளை சிதறிவிடாதா ?

5. உல்ஃபின் நோக்கம் என்று பார்த்தால், அந்த அம்மா அப்பா ஆடுகளை, குழந்தை ஆட்டுக்குட்டியை காப்பாற்றுவது. மிஷ்கின் கண்ணிமைக்காமல் சொல்லும் அந்த கதையின் படி, தம்பா கும்பலுக்கும் அந்த ஆட்டுக் குடும்பத்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை. பிரச்சனையே இந்த ஓநாய் மனம் திருந்தி அவர்களுடன் தங்குவதுதான். கதையிலேயே அந்த குடும்பத்தை பார்த்துகொள்ள பாரதி அக்கா, இரவில் கூட பாட்டுப்பாடிக் கொண்டிருக்கும் கண்தெரியாதவர்கள் சமூகமே இருக்கிறது. அவர்கள் வாழ்வதற்கு கண் தெரியாததை தவிர  வேறு  பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. விபத்து போன்ற சம்பவத்தில் மகன் இறந்த பிறகான  வாழ்க்கையில் இருக்கும் தீவிர பிரச்சனை இந்த ஓநாய்தான். இந்த ஓநாய் கூட இருப்பதால்தான்,  ̀வேட்டைக்கு வாவேட்டைக்கு வா…' என்று வற்புறுத்தும் தம்பா அந்த குடும்பத்திற்கும் பிரச்சனை தருகிறான்.

6. மூன்று ஆட்டுக்குட்டிகளை காப்பாற்றுவதற்காக படமெல்லாம் எத்தனை ஆட்டுக்குட்டிகளை பலி கொடுக்கிறார் உல்ஃப். “தண்ணி... தண்ணி...” என்று துடிக்கும் போலீஸ் அதிகாரி, “ஐயா” என்று விளிக்கும் போலீஸ் அதிகாரி, மேலும் சில போலீஸ்காரர்கள், பாரதி அக்கா, விஜயா ஃபோரம் மால் காவலாளி, கடைசியில் அம்மா அப்பா ஆட்டுக்குட்டிகள்.

ரோஸாவசந்த் கட்டுரையிலிருந்து சில பத்திகள் :

உண்மையிலேயே இது ஒரு சுவாரசியமான வெகுஜன திரில்லராக இருந்தால் அது தன்போக்கில் ஹிட்டாகியிருக்கும். மக்களின் ரசனையின்மையை  திட்டவேண்டிய அவசியமே இருந்திருக்காது. வெகுமக்களை கவராத ஒரு படத்தை ஊடகங்கள், ஆர்வக்கோளாறு கொண்ட இணைய எழுத்தாளர்கள், பலூன் வண்ணத்தை பார்த்து மயக்கியவர்கள், உண்மையிலேயே படத்தின் ஒரே உன்னதமான இளையராஜாவின் இசைக்கு ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து ஏதோ ஒரு சென்சேஷன் அலையை உருவாக்கி, தாங்களும் அதில் மிதந்து படத்தை இந்த அளவிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். 

படத்தில் குறியீடுகள் பொங்கி வழிவதாக என்னவெல்லாமோ வியாக்யானம் சொல்கிறார்கள். முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளவேண்டும். சினிமாநாவல், சிறுகதை போன்ற ஒரு கதையாடல் சார்ந்த கலையில் கதைதான் முதலில் முக்கியமானது. கதை தீவிர இலக்கியமாக மாறும் போதுதான் குறியீடு பற்றி பேசுவதில் அர்த்தம் உண்டு. கோபால்ஜி உபன்யாசம் மாதிரி   ̀அப்படி பார்க்க கூடாதுஇதெல்லாம் குறியீடு' என்பது உளரல்.  கதை என்பது நேர்கோட்டில் இல்லாமல் இருக்கலாம்; சிதறலாக துண்டு துண்டான உளரலாக இருக்கலாம்; கதை என்று நாம் கருதிக்கொண்டிருக்கும் எதுவும்  இல்லாமல் கூட ஒரு கதை இருக்கலாம்; அதிலும்  கதையாடலைத்தான் நாம் முக்கியப்படுத்த வேண்டுமே தவிர குறியீட்டை அல்ல. கதை எந்த பிரச்சனையும் இன்றி தன்னை நிறுவிய பிறகுதான், அதில் உள்ள குறியீடுகளை பற்றி பேசமுடியும். ஒருவேளை கதையல்ல, குறியீடுகள்தான் படம் என்றால்நம்மால் ஒரு கதாதர்க்கமாக சிந்திக்கவே முடியாமல், கதையை மனதில் உருவாக்கவே முடியாமல் படிமங்களாக மட்டும் காட்சிகள் நகர்ந்திருக்க வேண்டும். மேலும் பலர் சொல்லும் குறியீடுகள்  பொருந்துவதில்லை என்பதுடன், குறியீடுகளின் அர்த்தங்கள் ஒன்றுக்கு ஒன்று அபத்தமாக முரண்படுகிறது. 

யோசிக்க யோசிக்க ஒரு கட்டுரையில் அடக்க இயலாதபடி முடிவே இல்லாமல் இந்த படத்தின் பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இவ்வளவு சொதப்பலான கதையம்சம் கொண்ட படத்தை எதற்காக இத்தனை பேர் பாராட்டுகிறார்கள்காமிக்ஸ் என்கிறார்கள்; விவிலியத்தில் இருந்து மேற்கோள் காட்டுகிறார்கள்; அதிகாரம் பற்றியது, சாதாரணன் அதிகாரத்துக்கு எதிராக எதிர்வினையாற்றுவது என்று என்னவெல்லாமோ சொல்கிறார்கள். இவர்கள் பொய்யாக பாராட்டவில்லை என்பதுதான் அதிக கிலியை உண்டு பண்ணுகிறது. படத்தில் ஒரு மயக்கம் இருப்பது உண்மை என்றாலும், கருத்து சொல்லும் முன், கருத்தை தனக்குள் உருவாக்கும் போது யோசிக்க மாட்டார்களா? இத்தனை உலகப்படங்கள் பார்த்து வருபவர்களுக்கு எதுவுமேவா நெருடவில்லை. பாட்டு, காமெடி ட்ராக் போன்ற தமிழ் சினிமாவின் வழமைகள் இல்லாததும், மிஷ்கினின் அடையாளமான மஞ்சள் புடவை இல்லாததும் ஒரு படத்தை  ̀உலகத்தர'மானதாக்கி விடுமா? இந்த  ̀இல்லாதது' என்பது எப்படி ஒரு படத்தின் சிறப்பாக முடியும் என்பது புரியவில்லை. கதையோடு ஒட்டிய உணர்வுகளை மிகைப்படுத்தும் வழமையான தமிழ் சினிமா மிகைநடிப்பை விட, கதாபூர்வமாக ஒட்டாத உணர்வுகளை வித்தியாசமாக மிகைப்படுத்தும் இப்பட காட்சிகள் ஏன் கொண்டாடப்படுகிறது? சமரசம் செய்யாமல் எடுத்திருக்கிறார், அதனால் பாராட்ட வேண்டும், குறை கண்டுபிடிக்க கூடாது  என்கிறார்கள். சமரசம் செய்யாமல் எதை அளித்தாலும் நாம் ஏற்கவேண்டுமா? சமரசம் செய்யாமல் எடுத்ததாக நினைப்பதால், குறைகளை கண்டுகொள்ளாமல் நாம் சமரசத்துடன் பார்க்கமுடியுமா?