Tuesday, February 15, 2011

அஞ்சா சிங்கம் மருது பாண்டியின் காட்டு தர்பார்



 

இடம் : அரசமரத்து அடிவாரம்
நேரம் : மாலை ஆறு மணி
ஊர்   : சினிமாபட்டி கிராமம்

எல்லோரும் நாட்டாமை அஞ்சா சிங்கம் மருது பாண்டியின் வருகைக்காக காத்திருக்கிறார்கள் .
அப்போது ..........எஜமான் காலடி மண்ணெடுத்து பாடல் ஒலிக்க ரெண்டு ஜோடி கால்கள். கொஞ்சம் மேல தூக்கி பார்த்தீங்கன்னா (யோவ் உங்க கண்ண சொன்னேன்) அந்த ரெண்டு ஜோடி கால்கள்ல ஒண்ணு பட்டாப்பட்டி அண்ட்ராயர் போட்டிருக்கு அது வேற யாரும் இல்ல நம்ம துணை நாட்டாமை செந்தில் .அப்போ நாட்டாமை யாருன்னு உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லைன்னு நெனைக்கிறேன் .

இப்போ அஞ்சா சிங்கத்தின் காட்டு தர்பார் .

கூட்டத்தில் ஒருவர் :- எல்லாரும் இப்படி மச மசன்னு இருந்தா ஏப்படி யாராவது பேச்சை ஆரம்பிங்கப்பா

கவுண்டமணி :- யாருடா அது . இப்படி முன்னாலவா வாயில வெடிய கொளுத்தி போட்ருவேன்  .இங்க நான்தான் நாட்டாம நான்தான் பேசுவேன். குறுக்க எவனாவது பேசுன்னா கொதவளைய கடிச்சி வச்சிருவேன் . டேய் மண்டையா நீ போயி சொம்புல தண்ணி பிடிச்சிட்டு வா. யாருப்பா பிராது குடுத்தது.

செந்தில் : - இவர் அரசியல் என்னும் காட்டாறில் எதிர்நீச்சல் போடும் கட்டுமரம் .

கவுண்டமணி :- டேய் வாய மூடு இவரு கம்பன் பேரன் அப்படியே செந்தமிழ்ல தான் பேசுவாரு வாய்ல மிதிச்சிபுடுவேன்.

குடியுரப்பா : - நான்தான்யா குடியுரப்பா குர்நாடக முதல் அமைச்சர்.

கவுண்டமணி :- சரி அதுக்கென்ன இப்போ .

குடியுரப்பா : -  அதுக்கு ஒன்னும் இல்லைங்க என் அரசியல் எதிரிகள் எல்லாம் சேர்ந்து எனக்கு செய்வினை  வச்சிட்டாங்க.
தனியா இருக்க பயமா இருக்கு .

கவுண்டமணி :- உன்ன பார்த்தா செய்வினை வச்ச மாதிரி தெரியலையே 10 பேதி மாத்திரைய ஒண்ணா சாப்ட்ட மாதிரி இருக்கு சரி எத வச்சி செய்வினை வசிடாங்கன்னு சொல்றே .

 குடியுரப்பா : - போன ஏலேக்சன்ல நான் அவங்களுக்கு பில்லி சூனியம்  வச்சி முதலமைச்சரா ஆய்ட்டேன் அதே மாதிரி இப்போ அவங்க எனக்கு வச்சிட்டாங்க தனியா இருட்டுல இருக்க பயமா இருக்கு .

கவுண்டமணி :-  தனியா இருக்க தானே பயமா இருக்கு. எப்பவும் ஒரு கும்பலோட இரு பயமா இருக்காது .

 குடியுரப்பா : - ஆனா பாத்ரூம்முக்கு தனியா தான் போக வேண்டி இருக்கு துணைக்கு யாரும் வர மாட்றாங்க .

 கவுண்டமணி :- ஓஹோ நீ அதுக்கும் துணை  தேடுறியா அப்போ ரொம்ப டேஞ்சர் தான் உனக்கு நான் ஏதாவது பண்ணியே ஆகணும் .
டேய் மண்டையா அந்த தாயத்து எடுத்துட்டு வா

 குடியுரப்பா : -என்னது தாயத்தா?

 கவுண்டமணி :-  பயப்படாதே இது உனக்கு இல்ல குர்நாடகால இருக்கிற எல்லா மக்களும் இந்த தாயத்தை கட்டிக்க சொல்லு .

 குடியுரப்பா : - நான் சொன்னா கேப்பாங்களா?

கவுண்டமணி :- இந்த தாயத்த கட்டி இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் ரேசன்னு சொல்லிடு .
வாக்காளர் அடையாள அட்டை மாதிரி இதுவும் கட்டாயம்ன்னு சொல்லிடு இதெல்லாமா உங்களுக்கு நாங்களா  சொல்லிதரணும் .
அப்புறம் பாரு அடுத்த முதல்வரு நீதான் . அப்புறம் முக்கியமான விஷயம் அந்த தாயத்து தயாரிக்கிற காண்ட்ராக்ட் எனக்கு குடுத்துரு என்ன சரியா .

 குடியுரப்பா : - நீங்க தாயத்து பார்முலா மட்டும் குடுங்க அந்த காண்ட்ராக்ட் எடுக்க என் குடும்பத்துல நிறைய பேரு இருக்காங்க .

கவுண்டமணி :- இந்த டக்கால்டி வேலை எல்லாம் நம்ம கிட்ட வேண்டாம் மகனே பக்கத்துல பார்தேல்லே இந்த சொம்ப எடுத்து மண்டைல அடிச்சிடுவேன் .காண்ட்ராக்ட் நமக்கு வரணும்  தாயத்து கட்டாதவங்கள குர்நாடகாவை விட்டே தள்ளி வச்சிரு அவங்க கூட ஆறும் அன்னம் தண்ணி புழங்க கூடாது இது தான் நம்ம தீர்ப்பு.

அப்போது நீதிடா நாயம்டா என்று ஒரு குரல் அது விஜயகுமாரு. டேய் சொம்புக்கு சொந்தகாரன் வந்துட்டான் அப்படியே சொம்ப தூக்கிட்டு ஓடிபோய்டு ஓகே அடுத்த பஞ்சாயத்துல பார்க்கலாம்..


posted by அஞ்சா சிங்கம்



 

50 comments:

pichaikaaran said...

ha ha

Unknown said...

நல்லா கீது பா

அப்படியே தமிழ் நாட்டுக்கு வாங்க பா!

பொங்க வைப்போம் ஹி ஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த பிராது குடுத்தவன், பிஸ்கோத்து கொடுத்தவனைலாம் பிடிச்சு கரடிகிட்ட கொடுங்கடா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

குஞ்சாங்... குஞ்சாங்... நாங்க வனதேவத நோம்பி கொண்டாடுறோமுங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்றா இது வெத்தலைய துப்ப சொம்பு கேட்டா... இந்த சொம்ப கொடுக்குறே.....? இப்போத்தானே கக்கூஸ் போய்ட்டு வந்தேன்....! அட நம்ம கடைல ரெண்டுக்கும் அதே சொம்பா?

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த பிராது குடுத்தவன், பிஸ்கோத்து கொடுத்தவனைலாம் பிடிச்சு கரடிகிட்ட கொடுங்கடா..................../////////////////

கரடி பத்தாது தல கழுத புலி கிட்ட குடுத்திரலாம் .........

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

குஞ்சாங்... குஞ்சாங்... நாங்க வனதேவத நோம்பி கொண்டாடுறோமுங்க......../////////////////

வாங்க பூ மிதிக்கலாம்

அஞ்சா சிங்கம் said...

விக்கி உலகம் said...

நல்லா கீது பா

அப்படியே தமிழ் நாட்டுக்கு வாங்க பா!

பொங்க வைப்போம் ஹி ஹி!.........../////////////

அடுத்த பஞ்சாயத்து நம்ம ஊருதான் அப்புறம் பாருங்க .................சேட்டைய

ராஜகோபால் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்றா இது வெத்தலைய துப்ப சொம்பு கேட்டா... இந்த சொம்ப கொடுக்குறே.....? இப்போத்தானே கக்கூஸ் போய்ட்டு வந்தேன்....! அட நம்ம கடைல ரெண்டுக்கும் அதே சொம்பா?
//

சொம்பு ஒண்ணா இருந்தா என்ன புத்தம் புதுசா, இளசா, சைசா, சும்மா விண்ணுன்னு இருக்குள்ள அப்பறம் என்ன

goundamanifans said...

>>> ஜூப்பர் அப்பு! பல பரபரப்பான தீர்ப்புகளை பஞ்சாயத்து வழங்கட்டும்!

அஞ்சா சிங்கம் said...

ராஜகோபால் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்றா இது வெத்தலைய துப்ப சொம்பு கேட்டா... இந்த சொம்ப கொடுக்குறே.....? இப்போத்தானே கக்கூஸ் போய்ட்டு வந்தேன்....! அட நம்ம கடைல ரெண்டுக்கும் அதே சொம்பா?
//

சொம்பு ஒண்ணா இருந்தா என்ன புத்தம் புதுசா, இளசா, சைசா, சும்மா விண்ணுன்னு இருக்குள்ள அப்பறம் என்ன............/////////////

அண்ணே உங்க உண்மையான பேரு வெண்ணிற ஆடை மூர்த்தியா?

அஞ்சா சிங்கம் said...

goundamanifans said...

>>> ஜூப்பர் அப்பு! பல பரபரப்பான தீர்ப்புகளை பஞ்சாயத்து வழங்கட்டும்!..............////////////

இது வெறும் ட்ரைலர் தான் மெயின் பிச்சர் பஞ்சாயத்துல டாக்டர் விஜய் வருவாரு ....................

Speed Master said...

நாட்டமை தீர்ப்ப மாத்தி சொல்லு

அஞ்சா சிங்கம் said...

Speed Master said...

நாட்டமை தீர்ப்ப மாத்தி சொல்லு......./////////////

ஆருடா அது பசுபதி அந்த புகையிலை டப்பாவ எடு ........

Speed Master said...

//
அஞ்சா சிங்கம் said...
Speed Master said...

நாட்டமை தீர்ப்ப மாத்தி சொல்லு......./////////////

ஆருடா அது பசுபதி அந்த புகையிலை டப்பாவ எடு ........

ஹி ஹி நாந்தானே

அஞ்சா சிங்கம் said...

ஆருடா அது பசுபதி அந்த புகையிலை டப்பாவ எடு ........

ஹி ஹி நாந்தானே.......................///////////////////////

அதானே பார்த்தேன் டை மண்டையா சார்க்கு ஒரு வாழை பழம் குடு ................

Speed Master said...

//அஞ்சா சிங்கம் said...
ஆருடா அது பசுபதி அந்த புகையிலை டப்பாவ எடு ........

ஹி ஹி நாந்தானே.......................///////////////////////

அதானே பார்த்தேன் டை மண்டையா சார்க்கு ஒரு வாழை பழம் குடு ................
ஐயா

Unknown said...

அஞ்சாசிங்கம் மருதுபாண்டி வாழ்க

அண்ணே இந்த சிபிஐல இப்போ சிக்கி இருக்காருலனே அதானே நம்ம முன்னாலு தொல்லை தொடர்பு அமைச்சரு அவருக்கு ஒரு தீர்ப்பு சொல்லுங்கண்ணே

வைகை said...

அப்போது நீதிடா நாயம்டா என்று ஒரு குரல் அது விஜயகுமாரு. டேய் சொம்புக்கு சொந்தகாரன் வந்துட்டான் //////

அவரு சொம்பே ஆபத்துல இருக்கு.....இதுல அவரு எங்க........

Unknown said...

சொம்ப எங்க இருந்தோ சுட்டுட்டு வந்தா மாதிரி தெரியுது...........

புத்சா கீது பா ஹி ஹி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அருமை...

தற்போது ராஜ்கிரண் கூட என்மீது செய்வினை செய்துள்ளனர் என்று பேட்டியளித்துள்ளார்..

தொடரட்டும் உங்கள் நையாண்டி

சக்தி கல்வி மையம் said...

ஒர் தமிழ் படம் பார்த்த மாதிரியே இருக்கு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சீக்கிரம் தமிழ் மணத்தில் இணையுங்கள் பாஸ்..

Unknown said...

விக்கி உலகம் said...
சொம்ப எங்க இருந்தோ சுட்டுட்டு வந்தா மாதிரி தெரியுது...........

புத்சா கீது பா ஹி ஹி////

ஆமனே சொம்பு புச்சா இருக்குறனாலதானே அடிபடாம இருக்கு ஹி ஹி ஹி

Anonymous said...

கலக்கலா இருக்குங்க நல்ல நகைச்சுவை குடியூரப்பாவை காலி பண்ணிட்டீங்க

சி.பி.செந்தில்குமார் said...

haa haa தமிழ்நாடா இருந்தா இன்னும் கலக்கலா இருந்திருக்கும்

வானம் said...

நான் கொடுக்குறேன்யா பிராது. பரிவட்டம் யாருக்கு கட்டுறது, பஞ்சுக்கவுண்டருக்கா இல்ல குஞ்சுக்கவுண்டருக்கா? அதுக்கு மொதல்ல தீர்ப்ப சொல்லுங்க. டேய் குடியூரப்பா, டூ ஸ்டெப் பேக் மேன்.

வானம் said...

நானூறு வருசமா தொவைக்காத ஜமுக்காளம், நாய் கூட வாய் வைக்காத நசுங்கிப்போன சொம்புல தண்ணி, இதுதான் பஞ்சாயத்தா?
ஏன்யா நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களா?

MANO நாஞ்சில் மனோ said...

//கவுண்டமணி :- இந்த தாயத்த கட்டி இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் ரேசன்னு சொல்லிடு //

காட்டை வித்து கள்ளு குடிச்சாலும் கவுண்டன் கவுண்டந்தாண்டா ஹா ஹா ஹா ஹா...

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...

அஞ்சாசிங்கம் மருதுபாண்டி வாழ்க

அண்ணே இந்த சிபிஐல இப்போ சிக்கி இருக்காருலனே அதானே நம்ம முன்னாலு தொல்லை தொடர்பு அமைச்சரு அவருக்கு ஒரு தீர்ப்பு சொல்லுங்கண்ணே......................//////////////

ஓகே அடுத்த பிராது மணிவண்ணன் தான் ...............

அஞ்சா சிங்கம் said...

வைகை said...

அப்போது நீதிடா நாயம்டா என்று ஒரு குரல் அது விஜயகுமாரு. டேய் சொம்புக்கு சொந்தகாரன் வந்துட்டான் //////

அவரு சொம்பே ஆபத்துல இருக்கு.....இதுல அவரு எங்க........///////////

அவருக்கும் ஒரு சோம்பு இருக்கு யாரவது பிராது குடுக்கட்டும் அவரையும் நம்ம பஞ்சாயத்துக்கு தூக்கிருவோம்

அஞ்சா சிங்கம் said...

விக்கி உலகம் said...

சொம்ப எங்க இருந்தோ சுட்டுட்டு வந்தா மாதிரி தெரியுது...........

புத்சா கீது பா ஹி ஹி........................////////////////////

அது சினிமா சோம்பு பார்க்க பளபளன்னு தான் இருக்கும் ...........

அஞ்சா சிங்கம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

அருமை...

தற்போது ராஜ்கிரண் கூட என்மீது செய்வினை செய்துள்ளனர் என்று பேட்டியளித்துள்ளார்..

தொடரட்டும் உங்கள் நையாண்டி .........................//////////////
அவருக்கும் ஒரு நாள் பஞ்சாயத்து வச்சி தாயத்து கட்டி விட்டுற வேண்டியது தான் ............................

அஞ்சா சிங்கம் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கலக்கலா இருக்குங்க நல்ல நகைச்சுவை குடியூரப்பாவை காலி பண்ணிட்டீங்க..............//////////////

அவரே உண்மையான காமடி பீசுதான் பில்லி வச்சிடாங்க சூனியம் வச்சிடாங்கன்னு பத்திரிகைல சொல்லிக்கிட்டு இருக்காரு ....

அஞ்சா சிங்கம் said...

வானம் said...

நான் கொடுக்குறேன்யா பிராது. பரிவட்டம் யாருக்கு கட்டுறது, பஞ்சுக்கவுண்டருக்கா இல்ல குஞ்சுக்கவுண்டருக்கா? அதுக்கு மொதல்ல தீர்ப்ப சொல்லுங்க. டேய் குடியூரப்பா, டூ ஸ்டெப் பேக் மேன்................////////////

அது என்னையா பரிவட்டம் சொரிவட்டோம்ன்னு மொதல்ல கோவணம் கட்டிட்டு வரசொல்லு அப்புறம் குடுக்கலாம் தீர்ப்பு .............

அஞ்சா சிங்கம் said...

வானம் said...

நானூறு வருசமா தொவைக்காத ஜமுக்காளம், நாய் கூட வாய் வைக்காத நசுங்கிப்போன சொம்புல தண்ணி, இதுதான் பஞ்சாயத்தா?
ஏன்யா நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களா?...............///////////

ஒய் மேன் நாங்க ஏன் திருந்தனும் நாலு பேருக்கு பொழுது போகும்னா எதுவுமே தப்பில்ல ....................

அஞ்சா சிங்கம் said...

MANO நாஞ்சில் மனோ said...

//கவுண்டமணி :- இந்த தாயத்த கட்டி இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் ரேசன்னு சொல்லிடு //

காட்டை வித்து கள்ளு குடிச்சாலும் கவுண்டன் கவுண்டந்தாண்டா ஹா ஹா ஹா ஹா.........///////////////

இந்தியாவிலேயே ஏன் இந்த உலகத்திலீயே கார் வச்சிருக்குற கரகாட்ட கோஷ்டி அது நம்ம கோஷ்டிதான்

உளவாளி said...

சூப்பர்... ஏம்பா செந்தில டம்மி ஆகிடீங்க...

அஞ்சா சிங்கம் said...

தலிவருக்கு இன்னும் வேலை வரவில்லை அடுத்து பஞ்சாயத்துல கலக்குவாரு .............

Unknown said...

பஞ்சாயத்துக்கு வந்திருந்த அத்தனை பேருக்கும் நன்றிங்கோ...

goma said...

உங்களுக்கு ஒரு கவுண்ட்ஸ் செந்தில் கலக்கல் “டாம் அண்ட் ஜெர்ரி லேபிளில் என் வலைப்பூவில் வாசித்து சிரிரிரிரியுங்கள்.

goma said...

அடாவடி கவுண்ட்ஸ் அப்பாவி செந்திலை வச்சு சும்மா கலக்கியிருக்கீங்க....ஹ ஹ ஹா ஹாருமை

Chitra said...

Sooooopparu!

Unknown said...

செத்த கிளிக்கு எதுக்குப்பா கூண்டு சாரி சோம்பு ஹி ஹி!

Unknown said...

செத்த கிளிக்கு எதுக்குப்பா கூண்டு சாரி சொம்பு ஹி ஹி!

arasan said...

நல்ல பஞ்சாயத்து நாட்டமை ....
அனால் தீர்ப்ப மாத்தி சொல்லியே ஆகணும் ....

Unknown said...

சூப்பருங்கோ! :-)

Unknown said...

start meesik...

ஜாஸ்மின்- ப்ரியா said...
This comment has been removed by the author.
சாமக்கோடங்கி said...

//குஞ்சாங்... குஞ்சாங்... நாங்க வனதேவத நோம்பி கொண்டாடுறோமுங்க......../////////////////

வாங்க பூ மிதிக்கலாம் //

என்னே.. இந்த பூவுல முள்ளு கிள்ளு இருந்து குத்திப் புடாதே.. அப்பா நல்லா போட்டு வையுங்க... நான் வந்து மிதி மிதின்னு மிதிக்கறேன்..