Monday, February 21, 2011

கால் கிலோ அல்வா - பன்னிக்குட்டி ராம்சாமி பேட்டி!





                                                                


இன்றைய கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்  பதிவுலக கவுண்டர் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்கள்!



1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு, பசி வந்தால் பத்தும் பறந்து
போகும், மாமியார் உடைச்சா மண் குடம்..மருமக உடைச்சா பொன் குடம். இந்த
பழமொழிகளுக்கு உங்க ஸ்டைல் ரிவிட் என்ன?

பன்னிக்குட்டி: 
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு,
ஏன் 1001 பொய் சொன்னா அது கல்யாணம் இல்லியா?  பொய் சொல்றதே தப்பு, இதுல இவரு ஆயிரம் வரைக்கும் எண்ணிக்கிட்டே சொல்வாராம், ங்கொக்காமக்கா.... இப்படிப் பண்ணிப் பண்ணித்தாண்டா நாட்ல பாதிப் பேருக்கு மண்டைல முடி இல்லாம போச்சு....

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்,
பத்து பறந்து போறதுக்கு அது என்ன எலிக்காப்டராடா........? டவுசர் வாயா.....  பசி வந்தா போய் சாப்புடறத விட்டுப்புட்டு பேச்ச பாரு, லொல்ல பாரு, எகத்தாளத்தப் பாரு?

மண் குடம்...பொன் குடம்.
அப்போ மாமனாரு ஒடச்சா வெங்கல கொடமா? படுவா எந்தா நாரு ஒடச்சாலும்  மண்கொடம் மண்கொடம்தாண்டா கரிச்சட்டி மண்டையனுங்களா.....  கருமம் புடிச்சவனுங்க.... பழமொழி,  பழுக்காத மொழின்னு... ஏண்டா  எவனோ எப்பவோ பொழுதுபோகாம சொல்லி வெச்சத இன்னும் சொல்லிக்கிட்டு திரியறீங்க?
..........................

2. உலக கோப்பை கிரிக்கெட் பார்க்கும் ஆர்வத்தில் தேர்வுக்கு படிக்காமல்
இருக்கும் மாணவர்களுக்கு ஒரு குட்டிக்கவிதை சொல்லுங்க தலைவா...
யக்கா மவளே இந்து....... ஓ.... சாரி.... ட்ங்க் ஸ்லிப்மா....... யூ மீன் ஸ்டுடண்ட்ஸ்.......... ?

பன்னிக்குட்டி:  ஹல்லோ ஆல் யங் ஸ்டூடண்ட்ஸ்....... படிச்சமா.... பரிட்ச எழுதுனமான்னு இருக்கோனும், அதவிட்டுப்புட்டு, அங்க அங்க நின்னு டீவி ஷோரூம்கள்ல மேட்சு பாக்கறது, முக்குல நின்னு சிகுனல் கொடுக்கறது, காத்துல கணக்குப் போடுறது...... பொண்ணுகள பாத்து மம்மிய பாத்த எம்எல்ஏ மாதிரி பம்முறது.... இதெல்லாம் பாத்தேன்... படுவா... ஒருத்தனுக்கும் இனி காலைல பல்லு வெளக்க பல்லு இருக்காது.....!  
என்னது இது கவிதை இல்லியா?  அப்போ.. நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ளீஸ்....
............................

3. பேரரசு: என் அடுத்த படத்துல நீங்கதான் வில்லன். விஜய் ஹீரோ. படத்தோட  டைட்டில் 'விஜயவாடா'.  சிச்சுவேசன்: ரேசன் கடைல ஊழல் செஞ்சதா உங்களை விஜய் தட்டி கேட்கும் காட்சி. அந்த வசனம் மட்டும் நீங்க எழுதணும். என்ன எழுதுவீங்க?

பன்னிக்குட்டி: அய்யய்யோ..... இந்த தீஞ்ச மண்டையன் படத்துக்கெல்லாம் வசனம் எழுத வெச்சிட்டானுகளே?
ஓகே, ஐ வில் ட்ரை...

விஜய்: டேய்ய்..... ரேசன் கடைல இருந்துக்கிட்டு மக்களுக்கு போய் சேரவேண்டிய பொருள்களை இப்படி திருடித் திங்கிறீயே வெக்கமா இல்ல உனக்கு?

பன்னிக்குட்டி: ஆமா, அப்பிடியே கோடி கோடியா அடிச்சு அயல்நாட்டுக்கு ஏற்றுமதி பண்ணிட்டோம் பாரு?  2 லட்சம் கோடி, 4 லட்சம் கோடின்னு அடிக்கறவன விட்ருங்கடா, எங்ககிட்ட மட்டும் வந்து நல்லா கேள்வி கேளுங்கடா.......! ங்ணா..... இதே வசனத்த 51-வது தடவையா பேசுறீங்களே, உங்களுக்கு வெக்கமா இல்லீங்களாங்ணா.....?  ங்கொக்காமக்கா.. கரடிக்கு சேவிங் பண்ண மாதிரி இருந்துக்கிட்டு பேச்ச பாரு? படுவா..... உனக்கும் ஒரு பங்கு கொடுத்திருந்தா வாய மூடிக்கிட்டு லைன்ல நின்னுருப்பே....! பிஞ்சு போன பஞ்சு டயலாக்க ஓரமா நின்னு வாந்தி எடுக்கப் போற பயலுக்கு லவுசப் பாரு... என்னமா சவுண்டு கொடுக்குது பார்ரா?  அதெப்பட்றா பண்றதையும் பண்ணிட்டு கொஞ்சம் கூட வெக்கப்படாம இப்படி கேள்வி கேக்குறீங்க? நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன், கொஞ்சமாவது பீல் பண்றானான்னு பாருங்க? அதென்றா வாய்க்குள்ள உருளுது, அதுக்குள்ள எடக்கல்ல எடுத்து வாய்க்குள்ள அமுக்கிட்டியாடா டாஸ்மாக் வாயா.......? 

விஜய்: கடவுள்கிட்ட மட்டும்தான் சாந்த்த்தமா பேசுவேன்.. சாக்கடை கூட இல்ல...

பன்னிக்குட்டி: அப்போ இங்க ஏனுங்ணா வந்தீங்க....?கடவுள்கிட்டேயே போய் பேசுங்ணா.... !

விஜய்: வாடா..வாடா விஜயவாடா........

பன்னிக்குட்டி: போடா போடா... போண்டாவாயா......
.....................................

4. தலைவர் கவுண்டரும் நீங்களும் ஒரு இடத்தில் தற்செயலாக சந்திக்கிறீர்கள். அப்போது நீங்கதான் கவுண்டர் என்றெண்ணி மக்கள் உங்களிடம் ஆட்டோ க்ராப் கேட்கிறார்கள். அப்ப நீங்க என்ன செய்வீங்க? கவுண்டமணி எப்படி பேசி இருப்பார்?

பன்னிக்குட்டி: அடங்கொன்னியா இவனுக  நம்மளையே ஒரிஜினலுன்னு நெனச்சுட்டானுகளே? சே இது கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி தெரிஞ்சிருந்தா அப்பிடியே மார்க்கெட்டையும் புடிச்சிருக்கலாம் சில சில சிட்டுகளையும் வளைச்சிருக்கலாம்..... எதுக்கும் இப்பிடியே மெயிண்டெயின் பண்ணி இன்னிக்கு ஏதாவது கிடைக்குமான்னு பார்ப்போம்........!

கவுண்டர்: அடங்கொக்காமக்கா, இந்தப் பன்னிவாயன் பேசுறதுதான் டுபாக்கூருனா ஆளே சுத்த ஃபோர்ஜரியா இருப்பான் போல இருக்கே? நல்ல வேள நான் வேற தெளிவா இருக்கேன், கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்திருந்தா இன்னேரம் நானே நம்பி இருப்பேனே.....? ராஸ்கல்.. இவன இப்பிடியே விட்டா என்னையே வித்துட்டு போயிடுவான்... .... ஹாய்.... பப்ளிக்.....  ஐ கம்முய்யா......அது நாந்தாங்க...... அது நாந்தாங்க.......... ம்ம் என்னது எவனும் கண்டுக்க மாட்டேங்கிறான்... அடப்பரதேசி பன்னாட நாய்ங்களா இத்தன வருசமா நடிச்சும் ஒரிஜினலு நாந்தான்னா நம்ப மாட்டேங்கிறீங்களேடா? பன்னி, மரியாதையா நீயாவது அது நாந்தான்னு சொல்லிரு......

பன்னிக்குட்டி: யோவ் கம்முனு இருய்யா, எனக்கும் ஒரு சான்ஸ் கெடச்சிருக்கு கொஞ்ச நேரம் எஞ்சாய் பண்ணிக்கிறேன். இதுக்குத்தான் அப்பப்போ டீவி, ரேடீயோ, பேப்பருல, பொஸ்தவத்துல பேட்டி கொடுத்து ஜனங்களுக்கு மூஞ்சிய காட்டிக்கோனும்கறது....

கவுண்டர்: எனக்கே அல்வாவா.....? மவனே.... எல்லாரும் போகட்டும், அப்புறம் இருக்குடி உனக்கு...........!
....................................

5. பதிவர்களில் மூன்று பேர் நேரில் சிக்கினால் பொளந்து கட்ட வேண்டும் என
நினைப்பது யாரை? ஏன்?

பன்னிக்குட்டி: ங்ணா நாங்கள்லாம் சவுண்டுதானுங்ணா ஜாஸ்தியா கொடுப்போம்..... ஒரு அப்பு அப்புனா அப்பிடியே பொத்திக்கிட்டு போய்ருவோம்ணா.......
..............................

6. படத்திற்கு கமன்ட் போடவும்:



                                                                       
பன்னிக்குட்டி: ஆமா இந்த வெளக்கெண்ண வாயன்க அப்பிடியே பேசிக் கிழிச்சி பாலாறும் தேனாறும் ஓட வெச்சிடுவானுங்க பாருங்க......? கேன்டீன்ல பஜ்ஜி நல்லாருந்தா போயி நல்லா தின்னுப்புட்டு தூங்க வேண்டியதுதானே, படுவா அத விட்டுப்புட்டு சும்மா சக்கைல சாறு எடுத்தா வருமா.....? அதெல்லாம் எப்பவோ எங்கெங்கேயோ டெபாசிட் பண்ணியாச்சுங்கோ, இனி கூட்டுக்குழு போட்டாலும் கெடைக்காது, கூட்டாத கூழு குடிச்சாலும் கெடைக்காதுங்கோ.......பேசாம அடுத்து எதுல சான்ஸ் கெடைக்கும்னு பாருங்கங்கோவ்..........
..............................

7. பன்மோகன் சிங்: எவ்ளோ நல்லவனா இருந்தாலும் பல ரூபத்துல பிரச்னை
வருதே. எத்தனை ஊழல்டா சாமி. மிஸ்டர் ராம்சாமி, ஒரு மாசம் ஜாலியா
வெளிநாட்ல ரெஸ்ட் எடுக்கப்போறேன். நீங்க என் பதவில உக்கார்றீங்களா?

பன்னிக்குட்டி: கொஞ்சம் இருங்க, பின்னாடி அடியாளு யாரும் வெச்சிருக்கீங்களான்னு பாத்துக்குறேன்....ங்ணா... என்னங்ணா இது... உங்களுக்கே நியாயமா.......? சும்மா இருந்தப்பெல்லாம் உக்காந்து ஜாலியா எஞ்சாய் பண்ணிட்டு, அடி கன்பர்ம்னு தெரிஞ்ச உடனே மாட்டிவிடுறீங்களே? ங்ணா எந்த நாட்டுக்குங்ணா போறீங்க? ஸ்விஸ்சுக்குங்ளா? என்னையும் அங்கேயே கூட்டிட்டுப் போய்டுங்ணா, அந்த பேங்கு வாசல்லேயே உக்காந்து பிச்சை எடுத்தாவது நானும் ஓரு தொழிலதிபர் ஆயிடுறேனுங்ணா.......
................................

8. நீங்க பாட்டுக்கு சிவனேன்னு ரோட்ல போயிட்டு இருக்கீங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல இன்டர்வியு. திடீர்னு 'வல்லரசு' விஜயகாந்த் குறுக்க வந்து "கொலை  முயற்சி கேசுல உங்களை கைது செய்றேன்" அப்டின்னு உங்களை கொண்டு போய் ஜெயிலில் அடிக்கிறார். நீங்கள் என்ன சொல்லியும் கேட்காமல் வெளுத்து துவைக்கிறார். மறு நாள் காலை கேப்டன் உங்கள பாத்து  "நீங்க பில்லா இல்லன்னு கன்பார்ம் ஆயிருச்சி. போகலாம்" என்று சொல்கிறார். அப்போது உங்க ரியாக்சன்/பதில்..


                                                          
                                                                
பன்னிக்குட்டி: ஆ..... காது ரெண்டுலேயும் நல்லா அடிச்சுட்டாங்க போல..... ஒண்ணும் கேக்க மாட்டேங்கிது........ யப்பா .... டங்குவாரு கிழிஞ்சிடுச்சுடா சாமி......... இன்னேரம் வீட்ல இருந்தா சொகமா கொத்துப்பரோட்டா தின்னுக்கிட்டு இருப்பேனே..............? என்ன ஏட்டு என்னமோ சொல்றாரு.... சார்... என்ன சார் சொல்றீங்க?

ஏட்டு: உன்னை ரிலீஸ் பண்ணச் சொல்லிட்டாங்க...

பன்னிக்குட்டி: ஆங்..இது பெரிய சூப்பர் ஸ்டாரு படம்.... இன்னிக்கு ரிலீஸ்சு......... பாத்தீங்களா ஜனங்களே அந்த இண்டெர்வியூ மட்டும் போயிருந்தா.. இன்னேரம் எங்கேயோ போயிருக்க வேண்டியவன, இவனுக அள்ளிக்கிட்டு வந்து விடிய விடிய கொத்துக்கறிய கொத்துற மாதிரி கொத்திப்புட்டு இப்போ கொஞ்சம் கூட பீல் பண்ணாம போக சொல்றானுங்க......  (தீபாவளி, பொங்கல்னு காசு கேட்டு வரட்டும்... சொறிநாய வெச்சி கடிக்க விடுறேன்....)
போலீஸ் டிப்பார்ட்மெண்ட்ல வேற ஆளே இல்லேன்னுதானே உங்களைக் கூப்புட்டு பில்லாவ புடிக்கச் சொன்னாங்க கேப்டன்......... இது உங்களுக்கே நல்லா இருக்கா? நான்தான் நான் பில்லா இல்லேன்னு அப்பவே சொன்னேனே.... கேக்க மாட்டேனுட்டானுகளே.... எவனோ ஒரு கிருதுருவம் புடிச்ச மாங்கா மண்டையன் அவன்பாட்டுக்கு நான் தான் பில்லான்னு சொல்லிட்டுப் போயிட்டான்.... நான் இவனுககிட்ட மாட்டிக்கிட்டு இப்படி லோல்படுறேன்....  அவன் மட்டும் என் கைல கெடச்சான்.........

கேப்டன்: ஏய் மிஸ்டர்... குற்றவாளிகளை தேடும்போது இப்படி அப்பாவிகள் மாட்டறது சகஜம்.... இப்போ தமிழ்நாட்ல 1 லட்சத்து 84 ஆயிரம் பேரு தேடப்படும் குற்றவாளியா இருக்காங்க, அவங்களைப் பிடிக்க 23 ஆயிரம் போலீஸார்......

பன்னிக்குட்டி: (மேட்டுக்குடியில் வருவது போல் கையெடுத்து கும்பிட்டபடி) ங்ணா....... அந்தக் கொலைய நாந்தான் பண்ணேனுங்ணா.... புடிச்சி தூக்குலேயே போட்ருங்ணா..... போற உசுரு உடனே போகட்டும்.......!

.........................................

9. பாஜபக்சே: ஹல்லோ மிஸ்டர்..ராம்சாமி. எங்க நாட்டு டூரிசம் சார்பா உங்கள ஒரு வாரம் சிறப்பு விருந்தாளியா அழைக்கிறேன். என் ரூம்ல தான் தங்கணும். என்ன சொல்றீங்க?

பன்னிக்குட்டி: என்னது சுற்றுலாவா அதுவும் உங்ககூட வேற தங்கனுமா? இதுக்கு அந்த கூகிள் மண்டையன் கூடவே இருந்திடுவேனே...... வேண்டாம்டா சாமி,  என்னைய வெச்சிக்கிட்டு நான் தான் மீனவர்களை கொல்ல சொன்னேன்னு பேட்டிக் கொடுத்தாலும் கொடுத்திருவ....  அப்புறம் எங்க தலைவரு அதிலேயும் பங்கு கேப்பாரு......! அய்யோ........ இந்த ஹிப்புப்போட்டமஸ் தலையன் இன்னும் அடங்க மாட்டேங்கிறானே? ஆண்டவா என்னை ஏன் இந்த மாதிரி நாதாரிங்க கூட கூட்டு சேர்க்கிறே...........?
.......................................

10. "சப்போஸ் உன்ன காதலிச்சா", "லூசு பெண்ணே லூசு பெண்ணே", "எவண்டி உன்ன பெத்தான். கைல கெடச்சான் செத்தான்" போன்ற தத்துவ பாடல்களை எழுதியவர்கள் உங்கள் கையில் சிக்கினால்...

பன்னிக்குட்டி: இவனுகளைத்தான்யா நானும் ரொமப நாளா தேடிக்கிட்டு இருக்கேன், ங்கொக்காமக்கா...  காச வாங்கிட்டு இவனுக பாட்டுக்கு இஷ்டத்துக்கு எதையாவது எழுதிட்டுப் போயிடறானுங்க, அதாவது பரவால்ல..... பொழப்புன்னு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம், ஆனா அதுக்கப்புறம் அந்தப் பாட்டுகள நாட்ல இருக்க வெந்தது வேகாதது, ஒட்டு பீடி பொறுக்குனதுகள்லாம் பாடிக்கிட்டுத் திரியறானுங்க பாருங்க.........  முடியலடா சாமி...  காச்சுன கம்பிய எடுத்து காதுல விட்ட மாதிரி இருக்குய்யா.......   சே..சே..சே நாடே நமச்சல் எடுத்து போச்சு............ !
...................................

சிறப்பு கேள்வி: கவுண்டமணி/செந்தில் படங்களில் தங்களுக்கு மிகவும்
பிடித்த மூன்று காமெடி ட்ராக் எது? ஏன்?

பன்னிக்குட்டி: இதுதான் ரொம்பக் கஷ்டமான கேள்வி...... மூன்று மட்டும் எப்படி சொல்றது?  இருந்தாலும் உங்களுக்காக (இது தரவரிசைப்படி அல்ல)

மன்னன்: இந்த தொழிலதிபர்கள் தொல்ல தாங்கமுடியலடா சாமி....
சேரன் பாண்டியன்: அய்யா கொட புடிச்சிக்கிட்டு போற பெரியவரே....
சூரியன்: அரசியல்ல இதெல்லாம்..........., ஸ்டார்ட் மியூசிக்....
அப்புறம்......
கோயமுத்தூர் மாப்ள
உத்தமராசா
ஊர்மரியாதை
தாலாட்டு கேட்குதம்மா
கரகாட்டக்காரன் (இது இல்லேன்னா எப்படி?)
உள்ளத்தை அள்ளித்தா
மேட்டுக்குடி
மாமன் மகள்
கோவில் காளை
சின்னக் கவுண்டர்
நடிகன்

இன்னும் நிறைய இருக்கு, ஆனா படங்களின் பெயர்கள் இப்போ ஞாபகம் இல்ல
...................................

கேள்விகள் 
! சிவகுமார் ! 



92 comments:

அஞ்சா சிங்கம் said...

புடிச்சி தூக்குலேயே போட்ருங்ணா..... போற உசுரு உடனே போகட்டும்.......!...............////////////////

அப்படி போடு அருவாள ...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அது நாந்தாங்க.......

எஸ்.கே said...

:-))) செம காமெடி!

மாணவன் said...

அட்ராசக்க... அட்ராசக்க... அட்ராசக்க :)

மாணவன் said...

உண்மையிலே கவுண்டர் பேட்டி கொடுத்ததுபோல இருக்குங்கோ... சூப்பரு :))

NaSo said...

மாம்ஸ் கலக்கீட்டீங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

pannikutti...................funny kutty. :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

அட்ராசக்க... அட்ராசக்க... அட்ராசக்க :)
//

y calling cp senthil?

மாலுமி said...

இவனுகளைத்தான்யா நானும் ரொமப நாளா தேடிக்கிட்டு இருக்கேன், ங்கொக்காமக்கா... காச வாங்கிட்டு இவனுக பாட்டுக்கு இஷ்டத்துக்கு
-------------------
எடு அருவலு, ஐந்து கொலை பண்ண கவுண்டருக்கு இது பெருசு இல்ல........

சுதர்ஷன் said...

//பத்து பறந்து போறதுக்கு அது என்ன எலிக்காப்டராடா........?

கவுண்டர் ப்ளாக் எழுதிற மாதிரியே எழுதுறீங்க .. :)

விஜய்: கடவுள்கிட்ட மட்டும்தான் சாந்த்த்தமா பேசுவேன்.. சாக்கடை கூட இல்ல...

பன்னிக்குட்டி: அப்போ இங்க ஏனுங்ணா வந்தீங்க....?கடவுள்கிட்டேயே போய் பேசுங்ணா.... ! super :)

தமிழால் வளர்ந்தேன் - உலக தாய்மொழி தினம்

Sivakumar said...

//இதுக்குத்தான் அப்பப்போ டீவி, ரேடீயோ, பேப்பருல, பொஸ்தவத்துல பேட்டி கொடுத்து ஜனங்களுக்கு மூஞ்சிய காட்டிக்கோனும்கறது.//

கவுண்டருக்கே Counter அடிச்சிட்டீங்க..செம ரகளை!

வைகை said...

கவுண்டரே..... ரம்பாவ பத்தி ஒண்ணுமே சொல்லாம போனா எப்பிடி?

வைகை said...

அந்த பெட்ரமாஸ் லைட்டு காமெடி... :))

செல்வா said...

//இப்படிப் பண்ணிப் பண்ணித்தாண்டா நாட்ல பாதிப் பேருக்கு மண்டைல முடி இல்லாம போச்சு..//

அப்படின்னா மண்டைல முடி இல்லாதவங்க எல்லாரும் பொய் சொல்லுரவங்களா ?

செல்வா said...

//4. தலைவர் கவுண்டரும் நீங்களும் ஒரு இடத்தில் தற்செயலாக சந்திக்கிறீர்கள். அப்போது நீங்கதான் கவுண்டர் என்றெண்ணி மக்கள் உங்களிடம் ஆட்டோ க்ராப் கேட்கிறார்கள். அப்ப நீங்க என்ன செய்வீங்க? கவுண்டமணி எப்படி பேசி இருப்பார்?//

இந்தக் கேள்விக்கான பதில்கள் தான் வாய்ப்பே இல்ல .. செம நக்கல் அண்ணா ..

செல்வா said...

//ஆ..... காது ரெண்டுலேயும் நல்லா அடிச்சுட்டாங்க போல..... ஒண்ணும் கேக்க மாட்டேங்கிது........ யப்பா .... டங்குவாரு கிழிஞ்சிடுச்சுடா சாமி......//

நீங்க என்னமோ சொல்லுறீங்க , ஆனா என்னனுதான் தெரியல. நானே குத்து மதிப்பாத்தான் பேசுறேன் .. யாரு எங்க நிக்குறீங்கன்னு தெரியல.. எனக்கு கண்ணே ஒரு மாதிரியாத்தான் தெரியுது ..

செல்வா said...

எனக்கு மாமன் மகள்ள வர்ற எல்லா காமெடியும் ரொம்ப பிடிக்கும் .. அதுவும் டுபாகூரு தெரியாதா ? அப்படிங்கிறது செமயா இருக்கும் .

Madhavan Srinivasagopalan said...

Super..
Rocking Rams.

அருள் said...

விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!

http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_21.html

அஞ்சா சிங்கம் said...

இவனுகளைத்தான்யா நானும் ரொமப நாளா தேடிக்கிட்டு இருக்கேன்,............/////////

எங்கப்பா அய்யனாரு கோயில் அருவாள எடுத்து அஞ்சுபேர வேட்டுனான் .....

எங்க தாத்தன் முனியாண்டி கோயில் கடப்பாறைய எடுத்து மூணு பெற குத்துனான் ..............

எங்கிட்ட வசமா சிக்கிகிட்டாங்கயா ...................

மொக்கராசா said...

1.வாயு தொல்லை
2.நெஞ்சு எரிச்சல்(கரெக்டா படிங்க)
3.உள்மூலம்/வெளி மூலம்
4.சளி தொல்லை
5.மூக்கடைப்பு
6.தலைவலி(விஜய்யால் வருவது அல்ல)
7.பசியின்மை
8.அஜீர கோளாறு
9.மல சிக்கல்
10.@#$@#$@$@ (வெளியில் சொல்ல முடியாத ரகசிய நோய்)

மேற்கண்ட நோயகளுக்கு சிறந்த நிவாரணி பன்னியின் கேள்வி பதில் படியுங்க

கலக்கல்!!!!கலக்கல்!!!!கலக்கல்!!!!

அஞ்சா சிங்கம் said...

10.@#$@#$@$@ (வெளியில் சொல்ல முடியாத ரகசிய நோய்)..........///////////

இதுக்கு ரகசியமா படிக்கனுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
1.வாயு தொல்லை
2.நெஞ்சு எரிச்சல்(கரெக்டா படிங்க)
3.உள்மூலம்/வெளி மூலம்
4.சளி தொல்லை
5.மூக்கடைப்பு
6.தலைவலி(விஜய்யால் வருவது அல்ல)
7.பசியின்மை
8.அஜீர கோளாறு
9.மல சிக்கல்
10.@#$@#$@$@ (வெளியில் சொல்ல முடியாத ரகசிய நோய்)

மேற்கண்ட நோயகளுக்கு சிறந்த நிவாரணி பன்னியின் கேள்வி பதில் படியுங்க/////

பேசாம சேலத்துல ஒரு கிளினிக் ஓப்பன் பண்ணிடலாமா?

Unknown said...

பேட்டி அருமை சிவா

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
மேற்கண்ட நோயகளுக்கு சிறந்த நிவாரணி பன்னியின் கேள்வி பதில் படியுங்க/////

பேசாம சேலத்துல ஒரு கிளினிக் ஓப்பன் பண்ணிடலாமா?......................///////////////////
\
கம்பவுண்டர் வேலைக்கு நான் ரெடி மான்கறி வைத்தியர் மாதிரி நாம பன்னிக்கறி வைத்தியர்னு போஸ்டர் ஓட்டலாம் .............

பொன் மாலை பொழுது said...

நல்லாத்தான் இருக்கு.

Anonymous said...

செம தூள் தலைவரே...

Anonymous said...

"நீங்க பில்லா இல்லன்னு கன்பார்ம் ஆயிருச்சி. போகலாம்" என்று சொல்கிறார். அப்போது உங்க ரியாக்சன்/பதில்//
கலைஞரை நாற நாற திட்டிப்புட்டு அவர்கூடவே கூட்டணி வெச்சிக்கிற மாதிரில்ல இருக்கு.

Anonymous said...

ஹல்லோ தமிழ்மணம் ஓட்டு எங்க போடுறது?பிளாக் ஓனரு யாருய்யா??

Anonymous said...

எங்க தங்க தலைவன் பன்னிகுட்டி அண்ணாச்சியின் சரித்திரம் புகழும் மஹாகாவியத்தை தமிழ்மணம் முகப்பில் வராமல் செய்யும் சதி இது

Anonymous said...

ஹல்லோ மிஸ்டர்..ராம்சாமி. எங்க நாட்டு டூரிசம் சார்பா உங்கள ஒரு வாரம் சிறப்பு விருந்தாளியா அழைக்கிறேன். என் ரூம்ல தான் தங்கணும்//
கெட்ட சாதி பய சார் அவன் கூட தங்காதீங்க மெதுவா காலை போடுவான்

Anonymous said...

கடவுள்கிட்ட மட்டும்தான் சாந்த்த்தமா பேசுவேன்.. சாக்கடை கூட இல்ல...
//
நீ இனிமே சத்தமாவே தான் பேசிகிட்டிருக்குனும்டி

Anonymous said...

அதாவது பரவால்ல..... பொழப்புன்னு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம், ஆனா அதுக்கப்புறம் அந்தப் பாட்டுகள நாட்ல இருக்க வெந்தது வேகாதது, ஒட்டு பீடி பொறுக்குனதுகள்லாம் பாடிக்கிட்டுத் திரியறானுங்க பாருங்க.//
இந்த பின் விளைவுகள் காரையாம்பட்டி அருக்காணி முதல் அவங்கம்மா வரை பாதிக்கிறது

சாமக்கோடங்கி said...

ஆஹா... அருமையான பதில்கள்.. ஆழ்ந்த கருத்துக்கள், தீர்ந்தது சந்தேகம்.. இந்தா பிடி பொற்காசுகளை..

Unknown said...

அசத்தலான பதில்கள், நிறைய இடங்களில் சிரிக்க வைத்தது...

ப்ரியமுடன் வசந்த் said...

:-)))

Segar said...

உடைஞ்சது பானை மட்டுமில்ல சில பேர்ட மண்டையுந்தான்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓகே ஐயாம் பேக்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எஸ்.கே said...
:-))) செம காமெடி! /////

நன்றி எஸ்கே.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாணவன் said...
அட்ராசக்க... அட்ராசக்க... அட்ராசக்க :)/////

யோவ் சிபி கோச்சுக்க போறாருய்யா.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாணவன் said...
உண்மையிலே கவுண்டர் பேட்டி கொடுத்ததுபோல இருக்குங்கோ... சூப்பரு :)) //////

ஹி..ஹி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நாகராஜசோழன் MA said...
மாம்ஸ் கலக்கீட்டீங்க.. //////

நன்றி மாப்பி, எலக்சன் வந்திருச்சு, ஜமாய்ச்சுட வேண்டியதுதானே..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
pannikutti...................funny kutty. :)////

என்றா இது........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////+++ மாலுமி +++ said...
இவனுகளைத்தான்யா நானும் ரொமப நாளா தேடிக்கிட்டு இருக்கேன், ங்கொக்காமக்கா... காச வாங்கிட்டு இவனுக பாட்டுக்கு இஷ்டத்துக்கு
-------------------
எடு அருவலு, ஐந்து கொலை பண்ண கவுண்டருக்கு இது பெருசு இல்ல........ /////

நான் அருவாள எடுக்க மாட்டேன், எடுத்தா வெட்ட மாட்டேன், வெட்டுனா பாக்கமாட்டேன்..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////S.Sudharshan said...
//பத்து பறந்து போறதுக்கு அது என்ன எலிக்காப்டராடா........?

கவுண்டர் ப்ளாக் எழுதிற மாதிரியே எழுதுறீங்க .. :)

விஜய்: கடவுள்கிட்ட மட்டும்தான் சாந்த்த்தமா பேசுவேன்.. சாக்கடை கூட இல்ல...

பன்னிக்குட்டி: அப்போ இங்க ஏனுங்ணா வந்தீங்க....?கடவுள்கிட்டேயே போய் பேசுங்ணா.... ! super :)/////

இதுக்கு கிரெடிட் கவுண்டருக்குத்தான் போய்ச் சேரனும், அவர்மாதிரி நாம எழுதுறோம்கறதே பெருமைதான்...........

Anonymous said...

பேட்டிய படிச்ச நம்ம கரகாட்ட கோஷ்டி எல்லாருக்கும் சேந்தம்பட்டி குழு சார்பா வணக்கமுங்கோ! பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணனோட அடுத்த அதிரடி விரைவில். ஏதோ ஒரு எசகுபிசகான 'தில்லாலங்கடி' பதிவை ரெடி பண்ணிட்டு இருக்கேன்னு சொன்னாருங்க..(சொன்னீங்கல்ல...சொன்னீங்க). கெட் ரெடி போல்க்ஸ்!

Chitra said...

மன்னன்: இந்த தொழிலதிபர்கள் தொல்ல தாங்கமுடியலடா சாமி....
சேரன் பாண்டியன்: அய்யா கொட புடிச்சிக்கிட்டு போற பெரியவரே....
சூரியன்: அரசியல்ல இதெல்லாம்..........., ஸ்டார்ட் மியூசிக்....




...... எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத காமெடி சீன்ஸ்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////! சிவகுமார் ! said...
//இதுக்குத்தான் அப்பப்போ டீவி, ரேடீயோ, பேப்பருல, பொஸ்தவத்துல பேட்டி கொடுத்து ஜனங்களுக்கு மூஞ்சிய காட்டிக்கோனும்கறது.//

கவுண்டருக்கே Counter அடிச்சிட்டீங்க..செம ரகளை! ////////

கவுண்டர் அல்வாவே அவருக்கே கொடுத்தாச்சு..... ஹி....ஹி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
கவுண்டரே..... ரம்பாவ பத்தி ஒண்ணுமே சொல்லாம போனா எப்பிடி?////////

மேட்டர் ஓவர்........ அட கல்யாணம் ஆயிடுச்சேன்னு சொன்னேன்யா.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வைகை said...
அந்த பெட்ரமாஸ் லைட்டு காமெடி... :)) ////////

தேங்ஸ் வைகை, அந்த லிஸ்ட்ல இதுவும் இருக்கனும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
//இப்படிப் பண்ணிப் பண்ணித்தாண்டா நாட்ல பாதிப் பேருக்கு மண்டைல முடி இல்லாம போச்சு..//

அப்படின்னா மண்டைல முடி இல்லாதவங்க எல்லாரும் பொய் சொல்லுரவங்களா ? ////////

எனக்கு முடி இருக்கு.............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோமாளி செல்வா said...
//4. தலைவர் கவுண்டரும் நீங்களும் ஒரு இடத்தில் தற்செயலாக சந்திக்கிறீர்கள். அப்போது நீங்கதான் கவுண்டர் என்றெண்ணி மக்கள் உங்களிடம் ஆட்டோ க்ராப் கேட்கிறார்கள். அப்ப நீங்க என்ன செய்வீங்க? கவுண்டமணி எப்படி பேசி இருப்பார்?//

இந்தக் கேள்விக்கான பதில்கள் தான் வாய்ப்பே இல்ல .. செம நக்கல் அண்ணா ..///////

ஹஹஹா தேங்ஸ் செல்வா........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
//ஆ..... காது ரெண்டுலேயும் நல்லா அடிச்சுட்டாங்க போல..... ஒண்ணும் கேக்க மாட்டேங்கிது........ யப்பா .... டங்குவாரு கிழிஞ்சிடுச்சுடா சாமி......//

நீங்க என்னமோ சொல்லுறீங்க , ஆனா என்னனுதான் தெரியல. நானே குத்து மதிப்பாத்தான் பேசுறேன் .. யாரு எங்க நிக்குறீங்கன்னு தெரியல.. எனக்கு கண்ணே ஒரு மாதிரியாத்தான் தெரியுது .. ////////

இப்பிடியே ஓரமா இருந்துட்டு காலைல மொத பஸ்ச புடிச்சி யாருக்கும் தெரியாம ஓடிப் போயிடுறேனுங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
எனக்கு மாமன் மகள்ள வர்ற எல்லா காமெடியும் ரொம்ப பிடிக்கும் .. அதுவும் டுபாகூரு தெரியாதா ? அப்படிங்கிறது செமயா இருக்கும் . ////////

இந்தப்படம் பர்ஸ்ட்டு ஷோ பாத்தேன் கவுண்டருக்காக....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Madhavan Srinivasagopalan said...
Super..
Rocking Rams. //////

தேங்ஸ் மாதவன்..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அருள் said...
விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!

http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_21.html //////

அது நான் இல்லீங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அஞ்சா சிங்கம் said...
இவனுகளைத்தான்யா நானும் ரொமப நாளா தேடிக்கிட்டு இருக்கேன்,............/////////

எங்கப்பா அய்யனாரு கோயில் அருவாள எடுத்து அஞ்சுபேர வேட்டுனான் .....

எங்க தாத்தன் முனியாண்டி கோயில் கடப்பாறைய எடுத்து மூணு பெற குத்துனான் ..............

எங்கிட்ட வசமா சிக்கிகிட்டாங்கயா ................... ///////

உங்க சமூக சேவைய விட்றாதீங்கங்கோவ்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இரவு வானம் said...
பேட்டி அருமை சிவா //////

வாங்கப்பு.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அஞ்சா சிங்கம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
மேற்கண்ட நோயகளுக்கு சிறந்த நிவாரணி பன்னியின் கேள்வி பதில் படியுங்க/////

பேசாம சேலத்துல ஒரு கிளினிக் ஓப்பன் பண்ணிடலாமா?......................///////////////////
\
கம்பவுண்டர் வேலைக்கு நான் ரெடி மான்கறி வைத்தியர் மாதிரி நாம பன்னிக்கறி வைத்தியர்னு போஸ்டர் ஓட்டலாம் ............. ////////

அடப்பாவி, விட்டா கிளினிக்கே ஆரம்பிச்சு வெளம்பரமும் குடுதுடுவானுங்க போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கக்கு - மாணிக்கம் said...
நல்லாத்தான் இருக்கு.////////

வாங்கண்ணே.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஆர்.கே.சதீஷ்குமார் said...
செம தூள் தலைவரே...////////


என்ன மூக்குப் பொடி பிராண்டு மாத்திட்டீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆர்.கே.சதீஷ்குமார் said...
"நீங்க பில்லா இல்லன்னு கன்பார்ம் ஆயிருச்சி. போகலாம்" என்று சொல்கிறார். அப்போது உங்க ரியாக்சன்/பதில்//
கலைஞரை நாற நாற திட்டிப்புட்டு அவர்கூடவே கூட்டணி வெச்சிக்கிற மாதிரில்ல இருக்கு. ////////

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஆர்.கே.சதீஷ்குமார் said...
எங்க தங்க தலைவன் பன்னிகுட்டி அண்ணாச்சியின் சரித்திரம் புகழும் மஹாகாவியத்தை தமிழ்மணம் முகப்பில் வராமல் செய்யும் சதி இது/////

பேசாம நாம இரு தமிழ்மணம் ஆரம்பிச்சுடுவோமா? எலக்சன் வேற வருது நல்லா வசூல் பண்ணிடலாம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஹல்லோ மிஸ்டர்..ராம்சாமி. எங்க நாட்டு டூரிசம் சார்பா உங்கள ஒரு வாரம் சிறப்பு விருந்தாளியா அழைக்கிறேன். என் ரூம்ல தான் தங்கணும்//
கெட்ட சாதி பய சார் அவன் கூட தங்காதீங்க மெதுவா காலை போடுவான் ////////

ஆஹா......... அது கொரில்லா பார்ட்டியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆர்.கே.சதீஷ்குமார் said...
கடவுள்கிட்ட மட்டும்தான் சாந்த்த்தமா பேசுவேன்.. சாக்கடை கூட இல்ல...
//
நீ இனிமே சத்தமாவே தான் பேசிகிட்டிருக்குனும்டி////////

இதெல்லாம் நடக்கற காரியமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆர்.கே.சதீஷ்குமார் said...
அதாவது பரவால்ல..... பொழப்புன்னு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம், ஆனா அதுக்கப்புறம் அந்தப் பாட்டுகள நாட்ல இருக்க வெந்தது வேகாதது, ஒட்டு பீடி பொறுக்குனதுகள்லாம் பாடிக்கிட்டுத் திரியறானுங்க பாருங்க.//
இந்த பின் விளைவுகள் காரையாம்பட்டி அருக்காணி முதல் அவங்கம்மா வரை பாதிக்கிறது////////

தல, இந்தத் தடவ அடி கொஞ்சம் பலமோ....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சாமக்கோடங்கி said...
ஆஹா... அருமையான பதில்கள்.. ஆழ்ந்த கருத்துக்கள், தீர்ந்தது சந்தேகம்.. இந்தா பிடி பொற்காசுகளை..//////

அப்பிடிங்ளா.... உங்களுக்கு கண்டிப்பா ஏதாவது செய்யறேன்.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பாரத்... பாரதி... said...
அசத்தலான பதில்கள், நிறைய இடங்களில் சிரிக்க வைத்தது... ///////

வாங்க வாங்க...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ப்ரியமுடன் வசந்த் said...
:-)))///////

நன்றி மாப்பு..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////! சிவகுமார் ! said...
பேட்டிய படிச்ச நம்ம கரகாட்ட கோஷ்டி எல்லாருக்கும் சேந்தம்பட்டி குழு சார்பா வணக்கமுங்கோ! பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணனோட அடுத்த அதிரடி விரைவில். ஏதோ ஒரு எசகுபிசகான 'தில்லாலங்கடி' பதிவை ரெடி பண்ணிட்டு இருக்கேன்னு சொன்னாருங்க..(சொன்னீங்கல்ல...சொன்னீங்க). கெட் ரெடி போல்க்ஸ்! //////


என்ன சேந்தம்பட்டியாரே, இப்பத்தான் நாதஸ்ச கடைக்கு அனுப்பி இருக்கேன், வந்துடட்டும் கச்சேரிய வெச்சுக்குவோம்........

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி: ங்ணா நாங்கள்லாம் சவுண்டுதானுங்ணா ஜாஸ்தியா கொடுப்போம்..... ஒரு அப்பு அப்புனா அப்பிடியே பொத்திக்கிட்டு போய்ருவோம்ணா......./////

அது............விடுவமா ?????.....நாமெல்லாம் யாரு பின்னகால் பிடரில அடிக்க ஓடிப்பலகுன ஆட்கள் ஆச்சே............ பன்னி நம்ம மானத்த காப்பாத்திட்ட போ ......

மங்குனி அமைச்சர் said...

பாரத்... பாரதி... said...
அசத்தலான பதில்கள், நிறைய இடங்களில் சிரிக்க வைத்தது... ////

அப்போ சில இடங்களில் சிரிப்பு வரலையா ..........அய்யகோ என்ன ஒரு தேசிய அவமானம்........... பன்னி இதைக்கேட்ட பின்னும் நாம் உயிரோடு இருக்கனுமா ............. வா ,,,,,,நேரா போயி விஜயகாந்த் கட்ச்சில சேந்திடலாம்

மங்குனி அமைச்சர் said...

கக்கு - மாணிக்கம் said...

நல்லாத்தான் இருக்கு.///

அது சரி........ சொல்லிட்டு சும்மா போனா எப்படி????? ஏதாவது டி செலவுக்கு துட்டு குடுத்திட்டு போகலாம்ல

மங்குனி அமைச்சர் said...

! சிவகுமார் ! said...

பேட்டிய படிச்ச நம்ம கரகாட்ட கோஷ்டி எல்லாருக்கும் சேந்தம்பட்டி குழு சார்பா வணக்கமுங்கோ! பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணனோட அடுத்த அதிரடி விரைவில். ஏதோ ஒரு எசகுபிசகான 'தில்லாலங்கடி' பதிவை ரெடி பண்ணிட்டு இருக்கேன்னு சொன்னாருங்க..(சொன்னீங்கல்ல...சொன்னீங்க). கெட் ரெடி போல்க்ஸ்!///
அடப்பாவி அவன் கரகாட்டக்காரி காஞ்சனா தான ரெடி பண்ணிக்கிட்டு இருந்தான் ................... ஓ..... அதுல தான் இந்த தில்லாலங்கடி வருதா ..................

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சாமக்கோடங்கி said...
ஆஹா... அருமையான பதில்கள்.. ஆழ்ந்த கருத்துக்கள், தீர்ந்தது சந்தேகம்.. இந்தா பிடி பொற்காசுகளை..//////

அப்பிடிங்ளா.... உங்களுக்கு கண்டிப்பா ஏதாவது செய்யறேன்.........////

இம்மம்ம்மம்ம்ம்ம்.....ரெண்டு ஏரோ பிளைன் செஞ்சு குடு

மங்குனி அமைச்சர் said...

///

அஞ்சா சிங்கம் said...

புடிச்சி தூக்குலேயே போட்ருங்ணா..... போற உசுரு உடனே போகட்டும்.......!...............////////////////

அப்படி போடு அருவாள ...........
எஸ்.கே said...

:-))) செம காமெடி!

மாணவன் said...

அட்ராசக்க... அட்ராசக்க... அட்ராசக்க :)

மாணவன் said...

உண்மையிலே கவுண்டர் பேட்டி கொடுத்ததுபோல இருக்குங்கோ... சூப்பரு :))

நாகராஜசோழன் MA said...

மாம்ஸ் கலக்கீட்டீங்க..
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

pannikutti...................funny kutty. :)///
@ all
டேய்.....மரியாதையா சொல்லிடுங்க எவ்ளோ துட்டு வான்குனிங்க.................. என்னோட கட்டிங் இன்னும் வந்து சேரலை ......... (உண்மைலே ஒரு கட்டிங்காவது குடுங்கடா நான் பாவம் !!!!????அவ்வ்வ்வ்வ்வ்.......... )

@பன்னி
மச்சி எவ்ளோடா பணம் குடுத்த ..........சொல்லுட இந்த பன்னாடைக ஒவ்வொரு வாட்டியும் என்னைய ஏமாத்தி நிறையா பணம் புடுங்கிடுராணுக.............

மங்குனி அமைச்சர் said...

வைகை said...

கவுண்டரே..... ரம்பாவ பத்தி ஒண்ணுமே சொல்லாம போனா எப்பிடி?////

சொல்லுறதுக்கு இப்ப ஒண்ணுமே இல்லைங்க .........@ all ....சத்தியமா இதுல எந்த டபுள் மீனிங்கும் இல்லை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி: ங்ணா நாங்கள்லாம் சவுண்டுதானுங்ணா ஜாஸ்தியா கொடுப்போம்..... ஒரு அப்பு அப்புனா அப்பிடியே பொத்திக்கிட்டு போய்ருவோம்ணா......./////

அது............விடுவமா ?????.....நாமெல்லாம் யாரு பின்னகால் பிடரில அடிக்க ஓடிப்பலகுன ஆட்கள் ஆச்சே............ பன்னி நம்ம மானத்த காப்பாத்திட்ட போ ...... ///////

அதானே................?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்குனி அமைச்சர் said...
பாரத்... பாரதி... said...
அசத்தலான பதில்கள், நிறைய இடங்களில் சிரிக்க வைத்தது... ////

அப்போ சில இடங்களில் சிரிப்பு வரலையா ..........அய்யகோ என்ன ஒரு தேசிய அவமானம்........... பன்னி இதைக்கேட்ட பின்னும் நாம் உயிரோடு இருக்கனுமா ............. வா ,,,,,,நேரா போயி விஜயகாந்த் கட்ச்சில சேந்திடலாம் /////////

அய்யய்யோ நான் கேப்டனை பத்தி வேற ரொம்ப அசிங்கமா பதிவு எழுதி இருக்கேனே, இப்ப என்ன பண்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மங்குனி அமைச்சர் said...
கக்கு - மாணிக்கம் said...

நல்லாத்தான் இருக்கு.///

அது சரி........ சொல்லிட்டு சும்மா போனா எப்படி????? ஏதாவது டி செலவுக்கு துட்டு குடுத்திட்டு போகலாம்ல////////

உனக்கு இப்பிடித்தான் கெடைக்குதா? அடப்பாவி முன்னாடியே தெரியாம போச்சே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////மங்குனி அமைச்சர் said...
! சிவகுமார் ! said...

பேட்டிய படிச்ச நம்ம கரகாட்ட கோஷ்டி எல்லாருக்கும் சேந்தம்பட்டி குழு சார்பா வணக்கமுங்கோ! பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணனோட அடுத்த அதிரடி விரைவில். ஏதோ ஒரு எசகுபிசகான 'தில்லாலங்கடி' பதிவை ரெடி பண்ணிட்டு இருக்கேன்னு சொன்னாருங்க..(சொன்னீங்கல்ல...சொன்னீங்க). கெட் ரெடி போல்க்ஸ்!///
அடப்பாவி அவன் கரகாட்டக்காரி காஞ்சனா தான ரெடி பண்ணிக்கிட்டு இருந்தான் ................... ஓ..... அதுல தான் இந்த தில்லாலங்கடி வருதா .................. /////////

வெளங்கிரும்......... இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் போச்சு.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சாமக்கோடங்கி said...
ஆஹா... அருமையான பதில்கள்.. ஆழ்ந்த கருத்துக்கள், தீர்ந்தது சந்தேகம்.. இந்தா பிடி பொற்காசுகளை..//////

அப்பிடிங்ளா.... உங்களுக்கு கண்டிப்பா ஏதாவது செய்யறேன்.........////

இம்மம்ம்மம்ம்ம்ம்.....ரெண்டு ஏரோ பிளைன் செஞ்சு குடு ////////

வித் பேட்டரி..... சேச்சே... சார் அதெல்லாம் வெள்ளாட மாட்டாரு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மங்குனி அமைச்சர் said...
///@ all
டேய்.....மரியாதையா சொல்லிடுங்க எவ்ளோ துட்டு வான்குனிங்க.................. என்னோட கட்டிங் இன்னும் வந்து சேரலை ......... (உண்மைலே ஒரு கட்டிங்காவது குடுங்கடா நான் பாவம் !!!!????அவ்வ்வ்வ்வ்வ்.......... )

@பன்னி
மச்சி எவ்ளோடா பணம் குடுத்த ..........சொல்லுட இந்த பன்னாடைக ஒவ்வொரு வாட்டியும் என்னைய ஏமாத்தி நிறையா பணம் புடுங்கிடுராணுக.............////////////

நான் வெறும் ப்ளாங் செக்தான் கொடுத்திருக்கேன், பேங் ஆஃப் புருடா.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////மங்குனி அமைச்சர் said...
வைகை said...

கவுண்டரே..... ரம்பாவ பத்தி ஒண்ணுமே சொல்லாம போனா எப்பிடி?////

சொல்லுறதுக்கு இப்ப ஒண்ணுமே இல்லைங்க .........@ all ....சத்தியமா இதுல எந்த டபுள் மீனிங்கும் இல்லை//////////

சத்தியமா இதுல சிங்கிள் மீனிங்தான் இருக்கு...........

goma said...

http://haasya-rasam.blogspot.com/2010/04/blog-post_29.html

அப்படியே நம்ம பேட்டைக்கு வாங்க .நம்ம கவுண்ட்ஸ் செந்திலுக்கு டாம் அண்ட் ஜெர்ரின்னு பேனரே வச்சிருக்கேன்...பாலாபிஷேகம் பீராபிஷேகம்தான் பாக்கி

டக்கால்டி said...

Hey...I come there..

சி.பி.செந்தில்குமார் said...

>>>ஹல்லோ ஆல் யங் ஸ்டூடண்ட்ஸ்....... படிச்சமா.... பரிட்ச எழுதுனமான்னு இருக்கோனும், அதவிட்டுப்புட்டு, அங்க அங்க நின்னு டீவி ஷோரூம்கள்ல மேட்சு பாக்கறது, முக்குல நின்னு சிகுனல் கொடுக்கறது, காத்துல கணக்குப் போடுறது...... பொண்ணுகள பாத்து மம்மிய பாத்த எம்எல்ஏ மாதிரி பம்முறது.... இதெல்லாம் பாத்தேன்... படுவா... ஒருத்தனுக்கும் இனி காலைல பல்லு வெளக்க பல்லு இருக்காது.....!
என்னது இது கவிதை இல்லியா? அப்போ.. நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ளீஸ்....

என்னது..? இதுதான் கவிதையா?

சி.பி.செந்தில்குமார் said...

>>>ஏட்டு: உன்னை ரிலீஸ் பண்ணச் சொல்லிட்டாங்க...

பன்னிக்குட்டி: ஆங்..இது பெரிய சூப்பர் ஸ்டாரு படம்.... இன்னிக்கு ரிலீஸ்சு......... பாத்தீங்களா ஜனங்களே அந்த இண்டெர்வியூ மட்டும் போயிருந்தா.. இன்னேரம் எங்கேயோ போயிருக்க வேண்டியவன

ஹா ஹா செம நக்கல்

சி.பி.செந்தில்குமார் said...

கேள்விகளை கேட்டவர் யாரு புதுசா இருக்கு? செம மூளைப்பா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
>>>ஹல்லோ ஆல் யங் ஸ்டூடண்ட்ஸ்....... படிச்சமா.... பரிட்ச எழுதுனமான்னு இருக்கோனும், அதவிட்டுப்புட்டு, அங்க அங்க நின்னு டீவி ஷோரூம்கள்ல மேட்சு பாக்கறது, முக்குல நின்னு சிகுனல் கொடுக்கறது, காத்துல கணக்குப் போடுறது...... பொண்ணுகள பாத்து மம்மிய பாத்த எம்எல்ஏ மாதிரி பம்முறது.... இதெல்லாம் பாத்தேன்... படுவா... ஒருத்தனுக்கும் இனி காலைல பல்லு வெளக்க பல்லு இருக்காது.....!
என்னது இது கவிதை இல்லியா? அப்போ.. நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ளீஸ்....

என்னது..? இதுதான் கவிதையா? //////


ஆமா.... சும்மா படிச்சுப்பாத்தா அப்படித்தான் தோணும், டயலாக் டெலிவரிலதான் கவிதையா வரும்........ எப்பூடி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
>>>ஏட்டு: உன்னை ரிலீஸ் பண்ணச் சொல்லிட்டாங்க...

பன்னிக்குட்டி: ஆங்..இது பெரிய சூப்பர் ஸ்டாரு படம்.... இன்னிக்கு ரிலீஸ்சு......... பாத்தீங்களா ஜனங்களே அந்த இண்டெர்வியூ மட்டும் போயிருந்தா.. இன்னேரம் எங்கேயோ போயிருக்க வேண்டியவன

ஹா ஹா செம நக்கல் ////////

ஹஹ்ஹா......... அந்த சூபர் ஸ்டார் படம்... கவுண்டரோட டயலாக்தான்..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
கேள்விகளை கேட்டவர் யாரு புதுசா இருக்கு? செம மூளைப்பா... //////

ஹஹஹ்ஹா.... பதில்கள் ரெடி பண்றதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு........